Just In
- 29 min ago போலந்து மக்களால் கடவுளாக கொண்டாடப்படும் இந்திய அரசர்... அப்படி அந்த மக்களுக்கு அவர் என்ன செய்தார் தெரியுமா?
- 54 min ago Mango Benefits: ஆண்கள் தினமும் ஒரு மாம்பழம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்-ன்னு தெரியுமா?
- 2 hrs ago கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
- 2 hrs ago திருப்பதிக்கு செல்லும் பக்தர்களுக்கு ஹப்பி நியூஸ்.. ஐஆர்சிடிசி அறிவித்த டூர் பேக்கேஜ்.. இதோ முழு விவரம்..!
Don't Miss
- Movies விஜய் கையில் இவ்வளவு பெரிய காயமா?.. வெளியான புகைப்படம்.. ரசிகர்கள் சோகம்
- News பிரதமர் மோடி பேச்சால்.. பாஜகவுக்கு நோட்டீஸ் அனுப்பிய தேர்தல் ஆணையம்.. ராகுல் காந்திக்கும் சிக்கல்!
- Automobiles சும்மா ஓட்டி பாக்கலாம்னு ஜீப் விராங்களர் காருல ஏறிட்டீங்க திரும்பி இறங்க மனசே வராது! ஆஃப்-ரோடு அரக்கன்! வீடியோ
- Finance வீடு கட்டணுமா..அரசின் இந்த திட்டம் இருக்கே..நீங்களும் லிஸ்ட்ல இருக்கீங்களானு பாருங்க!
- Technology இதுதான் புதிய Infinix போன்.. 108MP கேமரா.. JBL சவுண்ட்.. 45W சார்ஜிங்.. எந்த மாடல்? எப்போது அறிமுகம்?
- Sports தோனியே சரி.. முஸ்தஃபிசுர்-க்கு பதிலாக வரும் ஸ்பின்னர்.. சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் மாற்றம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ப்ரேக்-அப்-க்கு பிறகு நீங்கள் செய்ய வேண்டிய சில காரியங்கள்!
மனித வாழ்க்கை என்பது ரூபாய் நாணயத்தை போல அதில் அனைத்திற்கும் இரண்டு பக்கங்கள் இருக்கின்றன. உணர்வு, உறவு, வேலை, சூழல் என அனைத்திலும் நல்லது, கெட்டது என நீங்கள் இரண்டையும் எதிர்த்து, சந்தித்து, கடந்து தான் போக வேண்டும்.
உங்கள் உறவில் இந்த ஏழு நிலைகளை கடந்து வந்ததுண்டா?
இல்லையில்லை எனக்கு ஒரு பக்கம் மட்டும் தான் வேண்டுமென அடம்பிடித்தாலும் கிடைக்கப்போவதில்லை. தோல்வியை கண்டு உடைந்து போனாலும் வாழ்க்கையை வாழ முடியாது. குதிரையே விழுந்த மறு நொடியில் துள்ளி எழும் போது, மனிதர்கள் நம்மால் முடியாதா என்ன.
ஒப்புக்கொள்ள தான் வேண்டும்
சில நேரங்களில் சூழ்நிலை காரணமாக நல்ல உறவுகளும் கூட முடிவுபெறும். இதை நீங்கள் ஒப்புக்கொள்ள தான் வேண்டும். நிகழ்ந்த உணர்வுகளை மறுக்க முயற்சிப்பது உங்களது வாழ்க்கையை மேலும் பாதிக்கும்.
உடைத்தெறிந்து போன பிறகு
உங்கள் மனதை உடைத்தெறிந்து போன பிறகு மீண்டும், மீண்டும் அதையே நினைத்துக் கொண்டிருப்பது. உடைந்த கண்ணாடி சில்கள் மீது மீண்டும், மீண்டும் நடப்பதற்கு சமம். அது உங்களை உறுத்திக் கொண்டே தான் இருக்கும். அதைவிட்டு வெளியே வாருங்கள்.
பாடம்
உங்கள் வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வும், சம்பவமும் உங்களுக்கு ஓர் பாடத்தை கற்பித்துவிட்டு தான் போகின்றன. அதை நீங்கள் அறியாமல், புரியாமல் மீண்டும், மீண்டும் அதே தவறை செய்வது தான் மிகப்பெரிய தவறு.
மனநிலை மாற்றம்
உங்கள் மனநிலையை மாற்றிக் கொள்ள முயற்சி செய்யுங்கள். உங்களை நீங்களே அதிகம் விரும்ப துவங்குங்கள். வாழ்க்கையில் புதியதோர் ஒளி பிறக்கும், அது உங்களை முன்னோக்கி செல்ல உதவும்.
மறதி அவசியம்
நடந்த யாவையும் மறப்பது கடினம் தான் ஆனால், அதை நீங்கள் மறந்து தான் ஆக வேண்டும். மறக்க நினைப்பதற்கு பதிலாக, வேறு காரியங்களில் உங்கள் சிந்தனையை செலுத்துங்கள். இது எளிதாக பழையதை மறக்க உதவும்.
நட்பு
நண்பர்களுடன் நிறைய நேரத்தை செலவளியுங்கள். இது உங்களை பிரிவில் இருந்து மீண்டு வர வெகுவாக உதவும். மற்றும் நண்பர்களை விட வேறு யாரும் உங்கள் சோகத்தை மிக வேகமாக போக்கிவிட முடியாது.
மன்னிப்பு
பெரும்பாலும் பிரிந்த பிறகு அந்த நபரை மன்னிக்க முடியாமல், அவர் மீது அதிகரிக்கும் கோபமும் கூட உங்கள் மனதை வருத்தமாக நிலைத்துக் கொண்டே இருக்கும். எனவே, அவர்களை மன்னிக்க பழகுங்கள், இது உங்கள் வாழ்க்கை மற்றும் மனநிலையில் முன்னேற்றம் காண உதவும்.
இதுவே முடிவல்ல
நீங்கள் காதலில் தோற்றுவிட்டீர்கள் அல்லது ஓர் உறவில் இருந்து பிரிந்துவிட்டீர்கள் எனில், நீங்கள் மீதும் காதலிக்க கூடாது என எந்த விதிவிலக்கும் இல்லை. ஆனால், அடுத்த முறையாவது உங்களுக்கு ஏற்ற, உங்களை புரிந்துக் கொள்ளும் நபராக இருக்க வேண்டியது அவசியம்.