Latest Updates
-
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க..
திருமணமாகாத ஆண்கள் ஏன் திருமணமான பெண்களைத் தேடி செல்கிறார்கள்?
திருமணமாகாத ஒரு இளைஞன் திருமணமான ஒரு பெண்ணுடன்; இந்த கதையை நாம் எண்ணிலடங்கா முறையில் கேள்விப்பட்டிருப்போம். திருமணமாகாத நிலையில் ஏன் திருமணமான பெண்களை ஆண்கள் நாட வேண்டும் என உங்களுக்கு தோன்றலாம். கேட்க வியப்பாக இருந்தாலும் கூட நடைமுறையில் பல இடங்களில் இது நடந்து கொண்டு தான் இருக்கிறது. திருமணமாகாத ஆண்கள் திருமணமான பெண்களுடன் டேட்டிங் செல்வதற்கு ஏதோ ஒரு வசதி இருந்தாக வேண்டும்.
திருமணமான பெண்கள் ஏன் தங்கள் கணவனை ஏமாற்றுகிறார்கள் என்பதற்கு பல காரணங்கள் உள்ளது. புதிய ஆணுடன் கிடைக்கும் உறவினால் ஏற்படும் கிக்கு, காதலே இல்லாத திருமண வாழ்க்கையில் மாட்டிக் கொண்டது போன்ற பல காரணங்களை இதற்கு கூறலாம். ஆனால் திருமணமாகாத ஆண்கள் ஏன் திருமணமான பெண்களால் வசீகரிக்கப்படுகிறார்கள் என்பது ஏன் என தெரிந்து கொள்ள வேண்டுமா? திருமணமான பெண்களுடன் உறவில் ஈடுபடுவதால் திருமணமாகாத ஆண்களுக்கு பலன் அதிகமே தவிர இழக்க ஒன்றுமே இல்லை.
ஆண்களுக்கு பிடிக்காத அர்ப்பணிப்பை தவிர, திருமணமான பெண்களிடம் ஆண்களுக்கு அனைத்தும் கிடைக்கும். திருமணமான பெண்கள் என்றால் ஈகோ இருக்காது; அதே போல் தேவையில்லாத சண்டைகளும் வராது. திருமணமாகாத ஆண்களுடன் உறவில் ஈடுபடும் போது தேவையற்ற கோரிக்கைகளையும் எழுப்ப மாட்டார்கள்.
திருமணமான பெண்கள் மீது திருமணமாகாத ஆண்கள் ஏன் ஈர்ப்பை பெறுகிறார்கள் என்பதற்கான காரணங்கள், இதோ!

சுலபம்
திருமணமாகாத பெண்களுடன் டேட்டிங் செல்வதை விட திருமணமான பெண்களுடன் செல்வது தான் சுலபம். அதற்கு காரணம் அவர்களை ஈர்ப்பது சுலபம். பொதுவாக திருமணமாகாத ஆண்களின் கவனத்தை ஈர்க்க அவர்கள் அதிகம் விரும்புவார்கள்.

எந்த ஒரு அர்பணிப்பும் கிடையாது
குறுகிய கால உறவு வேண்டும் அல்லது ஒரு நாள் இரவுக்கு மட்டும் வேண்டும் என்ற தேவைப்பாடு இருந்தால், திருமணமான பெண்கள் தான் சரியான தேர்வு. அவர்களுடன் இரவை கழித்த பிறகு மீண்டும் உங்களை எதிர்ப்பார்க்க மாட்டார்கள். அதனால் இது ஆண்களுக்கு வசதியாக இருக்கும்.

வாக்குவாதங்கள் கிடையாது
திருமணமாகாத பெண்களுடன் டேட்டிங் சென்றால், அவர்கள் பல விஷயங்களுக்கு கோபமடைந்து சண்டை போடுவார்கள். சண்டைக்கு பிறகு மௌன சிகிச்சை அளித்து, அவர்களை தாஜா செய்ய வேணும் என்று விரும்புவார்கள். ஆனால் திருமணமான பெண்கள் என்றால், உங்கள் சந்திப்பு எப்போதும் ரகசியமாகவும், வேக வேகமாகவும் தான் இருக்கும். அதனால் சண்டை போடவோ, சமாதானம் அடையவோ நேரம் இருக்காது.

கிடைக்காததை அடைவது
திருமணமாகாத ஆண்களுக்கு கிடைக்காத ஒன்று தான் திருமணமான பெண்கள். மரபு ரீதியாக மறுக்கப்பட்ட ஒன்றை தேடி செல்வது ஒரு சுகம் தானே.

அனுபவத்தை வரவேற்பது
ஒரு உறவில் புதிய அனுபவத்தை அனுபவிக்க திருமணமான பெண் சிறந்த துணையாக இருப்பார்கள். அனுபவமுள்ள பெண்ணிடம் ஆண் நிறைய கற்றுக் கொள்ளலாம். அதனை அவர்கள் திருமணம் செய்து கொள்ளும் போது பயன்படுத்திக் கொள்ளலாம்.

பரிசுகள் தேவையில்லை
திருமணமான பெண்களுக்கு அதிகமாக செலவு செய்ய தேவையில்லை. அவர்கள் விலையுயர்ந்த பரிசுகளை எதிர்ப்பார்ப்பதில்லை. மாறாக புகழ்ச்சியை மட்டுமே எதிர்ப்பார்ப்பார்கள்.

வருங்காலத்தை பற்றிய பேச்சு இருக்காது
உங்களுக்காக திருமணமான பெண்கள் தங்கள் கணவனை விட மாட்டார்கள். அலுப்பு தட்டும் திருமண வாழ்க்கையில் இருந்து ஒரு மாறுதல் வேண்டும் என்ற கேவலமான சுகத்திற்காகவே அவர்கள் உங்களை நாடுவார்கள்.

கழற்றி விடுவது சுலபம்
திருமணமான பெண்கள் திருமணமாகாத ஆண்களை மிரட்ட முயற்சி செய்தால், ஆண்களுக்கு ஒரு பாதிப்பும் ஏற்பட போவதில்லை. ஆனால் ஆண்களோ அந்த பெண்ணின் கணவன், குழந்தைகள் மற்றும் குடும்பத்துடன் கூறி விடுவதாக மிரட்டலாம். ஆண்களை விட பெண்களே இழப்பதற்கு அதிகம்.

பிற பெண்களுடனும் டேட்டிங் செல்லலாம்
திருமணமான பெண்களுடன் உறவில் இருக்கும் போது பிற பெண்களுடன் சுற்றக் கூடாது என்ற கட்டுப்பாடில்லை. எந்த ஒரு அர்பணிப்பும் இல்லாததால், அவர்கள் எத்தனை பெண்களுடன் வேண்டுமானாலும் டேட்டிங் செல்லலாம்.

அவர்கள் தான் ஏமாற்றுகிறார்கள், நீங்கள் இல்லை
உங்கள் மனசாட்சி திடீரென குத்துகிறதா? அப்படியானால் அவர்கள் தான் ஏமாற்றுகிறார்கள், நீங்கள் இல்லை என மனதை சமாதானம் செய்து கொள்ளலாம்.
இதுப்போன்று சுவாரஸ்யமான வேறு தகவல்களைப் பெற எங்கள் ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்து தொடர்பில் இருங்கள்...



Click it and Unblock the Notifications











