Latest Updates
-
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது
இதையெல்லாம் உங்கள் பெற்றோரிடம் செய்திருக்கிறீர்களா? இதைப் படிங்க கட்டாயம் உதவியா இருக்கும்.
குழந்தையாக வளரும் போது நம்மிடம் என்ன பிழைகள் இருந்தாலும் அதை ஏற்றுக் கொண்டு நம்முடைய வளர்ச்சிக்கு பெற்றோர்கள் முக்கியக் காரணமாக இருக்கிறார்கள். அதே சமயம் நாம் வளர்ந்த பிறகு முதுமையின் காரணமாக அவர்கள் செய்யும் பிழைகளை ஒரு போதும் ஏற்றுக் கொள்வதில்லை. ஆனால் பெற்றோர்களை வளர்ந்த பின்னும் எவன் மதிக்கிறானோ அவனோ வாழ்க்கையின் உன்னத படிநிலைகளை அடைவான்.

கேள்வி கேக்காதீர்கள்:
நீங்கள் குழந்தையாக இருக்கும் போது உங்கள் பெற்றோர் சொன்ன எல்லாத்தையும் வேதவாக்காகத் தான் இருந்திருக்கும். ஆனால் வளர்ந்த பிறகு உங்கள் பெற்றோரையே எதிர்த்து கேள்வி கேட்குமளவுக்கு வளர்ந்து விடுகிறார்கள். அந்த மாதிரியான சூழலில் உங்கள் பெற்றோர் உங்களை புரிந்து கொள்ள வேண்டும் என நினைப்பீர்கள். ஆனால் அவர்கள் உங்களை புரிந்து கொண்ட அளவுக்குக் கூட உங்கள் பெற்றோரை புரிந்து கொள்ள நீங்கள் முயல்வதில்லை.

பெற்றோருடன் செலவிடுங்கள்:
1.உங்கள் வாழ்க்கைச் சக்கரத்தில் ஓடிக் கொண்டிருக்கும் போது நேரமின்மை என்ற காரணங்களால் உங்கள் பெற்றோருடன் நேரம் செலவிடுவதை குறைத்து விடாதீர்கள்
2.எப்போதாவது உங்கள் பெற்றோர் நோய்வாய் படும் போது அருகில் இருங்கள் அல்லது ஒரு நிமிடம் அவர்கள் கையைப் பிடித்து நம்பிக்கை கூறுங்கள்
3.உங்கள் வாழ்வு இவ்வளவு பிராகசமாக இருக்கிறதென்றால் அவர்கள் தான் காரணம் அதற்காக அவருக்கு நன்றி கூறுங்கள்
4.உங்கள் பெற்றோருடன் வாக்குவாதத்தில் ஈடுபடாதீர்கள். உங்கள் இருவருக்குமான தலைமுறை இடைவெளியை புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் சரியாக இருந்தாலும் அவருக்கு கீழ்படிபவராக இருந்து பழகுங்கள்.
5.எக்காரணத்தைக் கொண்டும் உங்கள் குரலை அவர்களிடம் உயர்த்தாதீர்கள். அவர்கள் தவறே செய்திருந்தாலும் கூட.. பொறுமையாக அணுகுங்கள்.

பெற்றோரை புரிந்துக் கொள்ளுங்கள்
6.உங்களுக்கும் உங்கள் பெற்றோருக்கும் தவறான புரிதல்கள் ஏற்பட வாய்ப்பு அதிகமாக இருக்கும். அப்படி இருக்கும் போது நீங்களே முன்வந்து மன்னிப்பு கேட்கத் தயராக இருங்கள்.
7. அவர்களிடம் உண்மையாக இருங்கள். வெளிப்படையாக இருங்கள். உங்களின் குமுறல்களை வெளிப்படையாக முன்வையுங்கள்.
8.ஒருபோதும் அவர்களுக்கு கட்டளையிடாதீர்கள். ஏனெனில் அவர்கள் வாழும் காலத்தில் யாருடைய அதட்டலுக்கும் உள்ளாகியிருக்க மாட்டார்கள்.
9. நீங்கள் தவறுகளிலிருந்து உங்களை சரிசெய்துக் கொண்டிருக்கிறீர்கள் என்றால் அதற்கு அவரே காரணம் எனவே ஒருபோதும் அவர் மீது பழிகளை சுமத்தாதீர்கள்.
10. குழந்தைகளை நம்பி தான் தங்களின் வாழ்க்கையே அர்பணித்திருப்பார்கள் எனவே ஒரு போதும் அவரது நம்பிக்கையை உடைத்துவிடாதீர்கள்.

கட்டளை இடாதீர்கள்
11. நீங்கள் முடிவெடுக்கும் முன் அவர்களிடம் ஆலோசனைகளை கேளுங்கள். முடிவெடுத்தப் பின் கட்டளை இடாதீர்கள்.
12.அவர்களின் அன்றாடத் தேவைகளை பூர்த்தி செய்யுங்கள்.
13.முக்கியமான நாட்களை அவர்களுடன் கொண்டாடுங்கள். அவர்களின் பிறந்த நாள்களை ஒரு போதும் கொண்டாடி இருக்க மாட்டார்கள். அது போன்ற இனிமையான நினைவுகளை அவருக்கு வழங்குங்கள்.
14.பெற்றோர்களை கேலிப் பொருளாக எண்ணி அவர்களின் மனதை புண்படுத்தாதீர்கள்.
15. அவர்களிடம் பேசும் போது பொறுமையை கையாளுங்கள்.

தேவைகளை பூர்த்தி செய்யுங்கள்
16. தொலைவில் இருப்பவர்கள் உங்களிடம் பேசவாவது செய்வோம் என அலைபேசியில் அழைப்பார்கள். ஒருபோதும் அதை புறந்தள்ளிவிடாதீர்கள்.
17.உங்கள் நண்பர்களின் மத்தியில் அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். ஏனெனில் நீங்கள் சிறியதாக சாதித்தால் கூட ஊருக்கே தண்டாரம் போட்டவர்கள் உங்களுடைய பெற்றோர்கள்.
18. வாழ்க்கை முழுவதும் உங்களுக்காகவே வாழ்ந்தவர்கள் எனவே அவருக்கென்ற ஒரு வாட்ச் கூட வாங்கியிருக்க மாட்டார்கள். அவர் உங்களிடம் ஒரு போதும் எதிர்பார்க்க மாட்டார். ஆனால் அதையெல்லாம் கவனித்து வாங்கிக் கொடுங்கள்.
19. முதுமையின் கடைசி காலங்கள் மிகவும் கொடியது. அந்த சூழலில் அவர்களுடன் உங்களுடைய நேரத்தை ஒதுக்குங்கள்.
20. வீட்டிலேயே அடைந்திருப்பது அவர்களுக்கு ஒரு மாதிரியாக இருக்கும் குறைந்த பட்சம் அருகில் இருக்கக் கூடிய கோவிலுக்காவது அழைத்துச் செல்லுங்கள்.

உங்கள் வேலைக்காரராக நடத்தாதீர்கள்:
21.குழந்தைகளைப் பார்த்துக் கொள்வதற்கான வேலைக் காரர்கள் என்ற எண்ணத்தை அவர்கள் மனதில் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
22. உங்கள் பிரச்சினைகளை அவர்களிடம் எப்போதும் போல பகிர்ந்து கொள்ளுங்கள். நிச்சயம் உங்கள் துயரங்களுக்கு நல்லதொரு தீர்வு அவர்களிடம் இருக்கும்.
23.அவர்களுடைய கருத்துகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். ஒருவேளை அந்தக் கருத்துக்கு நீங்கள் முரண்பட்டால் அவருடைய கருத்தை உதாசீணப்படுத்தாதீர்கள்.
24. மிக முக்கியமானது அவர்களை ஒருபோதும் காயப்படுத்தும்படி பேசவோ, நடந்துக் கொள்ளவோக் கூடாது. உங்களுக்குள் எவ்வளவு கசப்பான சம்பவங்கள் நடைபெற்றாலும் கூட அவர்களை உங்கள் வாழ்க்கையில் இருந்து ஒரு போதும் ஒதுக்கி வைத்துவிடாதீர்கள்.
25. இந்த உலகத்தில் உங்களை அதிகமாக நேசித்தவர்கள் உங்கள் பெற்றோராகத் தான் இருப்பார்கள். அதனால் தாவு தாட்சனையின்றி அவர்கள் மீது அன்பு செலுத்துங்கள்.



Click it and Unblock the Notifications