Latest Updates
-
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் கோதுமை நெய் அப்பம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம் -
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும் -
இந்தியாவில் இயற்கையாக வைரம் கிடைக்கும் ஒரே மாநிலம் எது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
திருநெல்வேலி ஸ்டைல் அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
அடுத்தவர் மனைவியை திருடுவது இந்த நாட்டில் வேடிக்கையான விளையாட்டாம் - ஆனா இதுல ஒரு விவகாரமான கண்டிஷன் இருக்கு -
சில்லி கார்லிக் ப்ரைடு ரைஸ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
காரைக்குடி கார சட்னி - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
உலகே வியக்கும் படி திருமணத்தில் புரட்சி செய்த 5 சூப்பர் ஜோடிகள்!
திருமண செலவை சமூகத்திற்காக செலவழித்த ஐந்து சூப்பர் ஜோடிகள் பற்றி இங்கு கூறப்பட்டுள்ளது.
திருமணம் சொர்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என கூறுவார்கள். அதே திருமணத்தை புவியிலே சொர்கமாக அமைத்துக் கொள்வது அவரவர் எண்ணத்திலும், வாழும் விதத்திலும் தான் இருக்கிறது.
திருமணம் என்பது பெரும்பாலான்வர்களின் வாழ்வில் ஒருமுறை தான் நடக்கிறது. எனவே, அதை சிறப்பாக, தங்களால் முடிந்த வரை தாங்கள் விரும்பியப்படி செய்துக் கொள்ள வேண்டும் என்பதே பலரின் விருப்பம்.
ஆனால், மற்றவரை பற்றியும் நினைத்து, மற்றவர் நலன் கருதி, திருமண செலவு மொத்தத்தையும் சமூக நலனுக்கு அளிப்பதற்கும் ஒரு பெரிய மனம் வேண்டும். அந்த பெரிய மனம் படைத்த சூப்பர் ஜோடிகள் இவர்கள்....

அபய் - ப்ரீத்தி!
அமராவதியை சேர்ந்த அபய் மற்றும் ப்ரீத்தி தம்பதியினர் தங்கள் திருமணத்தை எளிமையாக முடித்துக் கொண்டு, பத்து விவசாய குடும்பங்களுக்கு தலா இருபதாயிரம் நன்கொடை கொடுத்து உதவினர்.

சமந்தா ஜாக்சன் - பாஸின்!
அழுதப்படி இருந்த ஒரு சிறுவனின் புகைப்படத்தை கண்ட இந்த ஜோடி, தங்கள் திருமண ஏற்பாடுகளை நிறுத்தி, அந்த மொத்த தொகையை சிரிய அகதிகளுக்கு நன்கொடையாக தந்துவிட்டனர். இவர்கள் மொத்தம் $17,500 அளித்து உதவினர்.

ஆதித்தியா திவாரி!
இந்த செய்தி இந்தியாவின் முதல் இளம் தந்தை என்ற தலைப்புடன் பிரபலம் ஆனது. இவர் ஒரு குழந்தையை தத்தெடுத்து திருமணம் செய்தார். தனது திருமணத்திற்கு வீடுகள் இல்லாதவர்கள், உதவியற்ற குழந்தைகள், தெரு நாய்கள், விலங்கியல் பூங்கா விலங்குகளை அழைத்து நடத்தினார். அனைவருக்கும் உணவளித்து மகிழ்வித்தார்.

துருக்கிய தம்பதி!
Fethullah Üzümcüoğlu and Esra Polat எனும் இந்த தம்பதியர் நான்காயிரம் சிரிய அகதிகளுக்கு உணவளித்து திருமணம் செய்துக் கொண்டனர்.

மத்திய பிரதேச தம்பதி!
மத்திய பிரஷேசத்தை சேர்ந்த பிரியங்கா - ரவி தம்பதி 10,000 மரக்கன்றுகளை நட்டு திருமணம் செய்துக் கொண்டனர். திருமண விருந்தினர்களுக்கும் மரக்கன்றுகளை பரிசாக அளித்தனர்.



Click it and Unblock the Notifications