Latest Updates
-
ஜூன் 22-ல் புதன் கடக ராசிக்குள் நுழைவதால் சகல நன்மைகளையும் பெற்று ஜெயிக்கப்போகும் 3 ராசிகள் -
கோவக்காய் வாங்குனா இந்த ஆந்திரா ஸ்டைல் சட்னி செய்யுங்க - இட்லி, தோசை, சாதம் எல்லாத்துக்கும் சூப்பரா இருக்கும் -
100 ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியாவில் நிறுவப்பட்ட முதல் விமான நிலையம் எது தெரியுமா? -
செவ்வாய் ரிஷப ராசிக்கு செல்வதால் அதிர்ஷ்டத்தால் ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 4 ராசிகள் -
மீந்து போன இட்லி இருந்தா இந்த மாதிரி மசாலா சேர்த்து மசாலா இட்லி செய்யுங்க - சூப்பர் டிபனா இருக்கும் -
Telegram ஆப் இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ளதற்கு காரணம் என்ன தெரியுமா? எத்தனை நாள் தடை தெரியுமா? -
கொத்தவரங்காயை இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் கூட்டு செஞ்சு பாருங்க - பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க -
சுக்கிரன்-சந்திரன் உருவாக்கும் கலாத்மகா யோகத்தால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
ஹோட்டல் ஸ்டைல் தக்காளி கார சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 17 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மன அழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம்
உலகே வியக்கும் படி திருமணத்தில் புரட்சி செய்த 5 சூப்பர் ஜோடிகள்!
திருமண செலவை சமூகத்திற்காக செலவழித்த ஐந்து சூப்பர் ஜோடிகள் பற்றி இங்கு கூறப்பட்டுள்ளது.
திருமணம் சொர்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என கூறுவார்கள். அதே திருமணத்தை புவியிலே சொர்கமாக அமைத்துக் கொள்வது அவரவர் எண்ணத்திலும், வாழும் விதத்திலும் தான் இருக்கிறது.
திருமணம் என்பது பெரும்பாலான்வர்களின் வாழ்வில் ஒருமுறை தான் நடக்கிறது. எனவே, அதை சிறப்பாக, தங்களால் முடிந்த வரை தாங்கள் விரும்பியப்படி செய்துக் கொள்ள வேண்டும் என்பதே பலரின் விருப்பம்.
ஆனால், மற்றவரை பற்றியும் நினைத்து, மற்றவர் நலன் கருதி, திருமண செலவு மொத்தத்தையும் சமூக நலனுக்கு அளிப்பதற்கும் ஒரு பெரிய மனம் வேண்டும். அந்த பெரிய மனம் படைத்த சூப்பர் ஜோடிகள் இவர்கள்....

அபய் - ப்ரீத்தி!
அமராவதியை சேர்ந்த அபய் மற்றும் ப்ரீத்தி தம்பதியினர் தங்கள் திருமணத்தை எளிமையாக முடித்துக் கொண்டு, பத்து விவசாய குடும்பங்களுக்கு தலா இருபதாயிரம் நன்கொடை கொடுத்து உதவினர்.

சமந்தா ஜாக்சன் - பாஸின்!
அழுதப்படி இருந்த ஒரு சிறுவனின் புகைப்படத்தை கண்ட இந்த ஜோடி, தங்கள் திருமண ஏற்பாடுகளை நிறுத்தி, அந்த மொத்த தொகையை சிரிய அகதிகளுக்கு நன்கொடையாக தந்துவிட்டனர். இவர்கள் மொத்தம் $17,500 அளித்து உதவினர்.

ஆதித்தியா திவாரி!
இந்த செய்தி இந்தியாவின் முதல் இளம் தந்தை என்ற தலைப்புடன் பிரபலம் ஆனது. இவர் ஒரு குழந்தையை தத்தெடுத்து திருமணம் செய்தார். தனது திருமணத்திற்கு வீடுகள் இல்லாதவர்கள், உதவியற்ற குழந்தைகள், தெரு நாய்கள், விலங்கியல் பூங்கா விலங்குகளை அழைத்து நடத்தினார். அனைவருக்கும் உணவளித்து மகிழ்வித்தார்.

துருக்கிய தம்பதி!
Fethullah Üzümcüoğlu and Esra Polat எனும் இந்த தம்பதியர் நான்காயிரம் சிரிய அகதிகளுக்கு உணவளித்து திருமணம் செய்துக் கொண்டனர்.

மத்திய பிரதேச தம்பதி!
மத்திய பிரஷேசத்தை சேர்ந்த பிரியங்கா - ரவி தம்பதி 10,000 மரக்கன்றுகளை நட்டு திருமணம் செய்துக் கொண்டனர். திருமண விருந்தினர்களுக்கும் மரக்கன்றுகளை பரிசாக அளித்தனர்.



Click it and Unblock the Notifications