Latest Updates
-
சனிக்கிழமையில் பிறந்தவர்களின் குணமும், எதிர்காலமும் எப்படி இருக்கும் தெரியுமா? -
100 ஆண்டுகள் கழித்து மீன ராசியில் உருவாகும் சதுர்கிரக யோகம்: கோடீஸ்வர யோகம் பெறும் 3 ராசிகள்! -
செட்டிநாடு கார அடை-தேங்காய் இஞ்சி சட்னி ரெசிபி காம்போ... இதை செஞ்சு கொடுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
தக்காளி சட்னியை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல 10 இட்லி கூட சாப்பிடுவாங்க... -
இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...! -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...!
1 கப் வேர்க்கடலை இருந்தா இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க... தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும்...!
Verkadalai Kurma Recipe in Tamil: பெரும்பாலான வீடுகளில் காலை அல்லது இரவு இட்லி, தோசை மற்றும் சப்பாத்தி போன்றவைதான் பிரதான உணவாக இருக்கும். இந்த உணவுகளுக்கு பெரும்பாலும் தேங்காய் சட்னி, தக்காளி சட்னி போன்றவைதான் சைடிஷாக இருக்கும். புதிதாக ஏதாவது சைடிஷ் செய்ய ஆசைப்படுறீங்களா? அப்படினா இந்த வேர்க்கடலை கறியை ட்ரை பண்ணி பாருங்க.
வேர்க்கடலை என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. வேர்க்கடலை எந்த வடிவத்தில் இருந்தாலும் நாம் விரும்பி சாப்பிடுவோம். வேர்க்கடலை சைடிஷ் என்றால் பொதுவாக அதனை வைத்து சட்னி மட்டும்தான் அரைக்க முடியும் என்று நாம் நினைத்திருப்போம். ஆனால் வேர்க்கடலையை வைத்து ஒரு அட்டகாசமான சைடிஷை செய்யலாம்.

இந்த வேர்க்கடலை கறி இட்லி, தோசை மற்றும் சப்பாத்திக்கு சூப்பரான சைடிஷாக இருக்கும், அதேசமயம் இந்த சைடிஷை செய்வது என்பது மிகவும் எளிதானதும் கூட. இந்த பதிவில் சூப்பரான வேர்க்கடலை கறியை எப்படி எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
- நிலக்கடலை - ஒரு கப்
- நறுக்கிய சின்னவெங்காயம் - அரை கப்
- பச்சை மிளகாய் - 2
- ஏலக்காய் - 1
- சீரகம் - ஒரு டீஸ்பூன்
- கிராம்பு - 2
- இலவங்கப்பட்டை - 1
- துருவிய தேங்காய் - 2 டேபிள்ஸ்பூன்
- பொடியாக நறுக்கிய இஞ்சி - ஒரு டீஸ்பூன்
- நறுக்கிய பூண்டு - அரை டீஸ்பூன்
- எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
- மஞ்சள் - கால் ஸ்பூன்
- மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
- நிலக்கடலையை நன்கு சுத்தம் செய்து விட்டு உப்பு, தண்ணீர் சேர்த்து வேகவைத்து இறக்கி வைத்துக்கொள்ளவும்.
- பின்னர், ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றி எண்ணெய் சூடானதும் அதில் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
- வெங்காயம் வதங்கியதும் அதில் பச்சை மிளகாய் கிராம்பு, இலவங்கப்பட்டை, ஏலக்காய் மற்றும் சீரகம் சேர்த்து தாளிக்கவும்.
- பின்னர் நறுக்கிய பூண்டு மற்றும் நறுக்கிய இஞ்சி சேர்த்து வதக்கவும். இஞ்சி, பூண்டு வதங்கியதும் அதில் மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும், மசாலா பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- பின்னர் ஏற்கனவே, வேகவைத்த நிலக்கடலையை இதில் சேர்த்து தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் வேகவைக்க வேண்டும்.
- கிரேவி பதத்திற்கு வந்ததும் இதன்மீது துருவிய தேங்காயை தூவி இறக்கினால் வேர்க்கடலை கறி ரெடி.
- இத இட்லி, தோசை மற்றும் சப்பாத்தியுடன் சேர்த்துச் சாப்பிட அருமையாக இருக்கும்.



Click it and Unblock the Notifications











