Latest Updates
-
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க
ஹோலிப் பண்டிகைக்கு 'ஸ்வீட் சமோசா'!

தேவையானப் பொருட்கள்
மைதாமாவு - கால் கிலோ
தேங்காய் – 1
வெல்லம் – கால் கிலோ
எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு
ஏலக்காய் பொடி – 2 டீ ஸ்பூன்
செய்முறை
மைதா மாவினை தண்ணீர் விட்டு பூரிக்கு பிசைவது போன்ற பக்குவத்தில் கெட்டியாகப் பிசைந்து ஊறவைத்துக் கொள்ளவும்.
தேங்காய் பூரணம்
தேங்காயைத் துருவிக் கொள்ளவும். வாணலியில் ஒரு கரண்டி தண்ணீர் விட்டு வெல்லத்தைப் போட்டு கொதித்ததும் தேங்காய் துருவலை அதில் போட்டு நன்றாகக் கிளறவும், தண்ணீர் வற்றி, பூரணம் சுருண்டு வந்ததும் வாணலியை இறக்கி வைத்து ஏலாக்காயை பொடி செய்து போட்டு கலக்கவும். தேங்காய் பூரணம் நன்றாக ஆறியதும் சிறிய உருண்டைகளாகப் பிடித்து வைத்துக் கொள்ளவும்.
மைதாவை நன்கு பிசைந்து சிறிய உருண்டைகளாக உருட்டி வைக்கவும். ஒரு உருண்டையை இரண்டு கை விரல்களாலும் அழுத்தி சிறிய வட்டமாக்கவும். நடுவில் தேங்காய் பூரணத்தை வைத்து நன்றாக மூடி கொழுக்கட்டை வடிவம் போல் செய்யவும். இதே போல எல்லா உருண்டைகளையும் பூரணம் வைத்து இனிப்பு சமோசா போலச் செய்து வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி நன்றாக காய்ந்ததும் தயார் செய்து வைத்துள்ள இனிப்பு சமோசாவை நான்கு நான்காக போட்டு வேகவிடவும். ஒருபுறம் வெந்த உடன் கரண்டியால் திருப்பி போட்டு பொன்னிறமாகும் வரை வேகவிட்டு எடுக்கவும். இதே போல எல்லாக் இனிப்பு சமோசாக்களையும் செய்யவும். குழந்தைகள் இந்த சமோசாவை விரும்பி சாப்பிடுவர். வெல்லம், தேங்காய் பூரணம் என்பதால் பெரியவர்களும் சாப்பிடலாம்.
தேங்காய் பூரணத்துக்குப் பதிலாக கடலைப் பூரணம் வைத்தும் இனிப்பு சமோசா செய்யலாம்.



Click it and Unblock the Notifications