Latest Updates
-
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்..
ஹோலிப் பண்டிகைக்கு 'ஸ்வீட் சமோசா'!

தேவையானப் பொருட்கள்
மைதாமாவு - கால் கிலோ
தேங்காய் – 1
வெல்லம் – கால் கிலோ
எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு
ஏலக்காய் பொடி – 2 டீ ஸ்பூன்
செய்முறை
மைதா மாவினை தண்ணீர் விட்டு பூரிக்கு பிசைவது போன்ற பக்குவத்தில் கெட்டியாகப் பிசைந்து ஊறவைத்துக் கொள்ளவும்.
தேங்காய் பூரணம்
தேங்காயைத் துருவிக் கொள்ளவும். வாணலியில் ஒரு கரண்டி தண்ணீர் விட்டு வெல்லத்தைப் போட்டு கொதித்ததும் தேங்காய் துருவலை அதில் போட்டு நன்றாகக் கிளறவும், தண்ணீர் வற்றி, பூரணம் சுருண்டு வந்ததும் வாணலியை இறக்கி வைத்து ஏலாக்காயை பொடி செய்து போட்டு கலக்கவும். தேங்காய் பூரணம் நன்றாக ஆறியதும் சிறிய உருண்டைகளாகப் பிடித்து வைத்துக் கொள்ளவும்.
மைதாவை நன்கு பிசைந்து சிறிய உருண்டைகளாக உருட்டி வைக்கவும். ஒரு உருண்டையை இரண்டு கை விரல்களாலும் அழுத்தி சிறிய வட்டமாக்கவும். நடுவில் தேங்காய் பூரணத்தை வைத்து நன்றாக மூடி கொழுக்கட்டை வடிவம் போல் செய்யவும். இதே போல எல்லா உருண்டைகளையும் பூரணம் வைத்து இனிப்பு சமோசா போலச் செய்து வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி நன்றாக காய்ந்ததும் தயார் செய்து வைத்துள்ள இனிப்பு சமோசாவை நான்கு நான்காக போட்டு வேகவிடவும். ஒருபுறம் வெந்த உடன் கரண்டியால் திருப்பி போட்டு பொன்னிறமாகும் வரை வேகவிட்டு எடுக்கவும். இதே போல எல்லாக் இனிப்பு சமோசாக்களையும் செய்யவும். குழந்தைகள் இந்த சமோசாவை விரும்பி சாப்பிடுவர். வெல்லம், தேங்காய் பூரணம் என்பதால் பெரியவர்களும் சாப்பிடலாம்.
தேங்காய் பூரணத்துக்குப் பதிலாக கடலைப் பூரணம் வைத்தும் இனிப்பு சமோசா செய்யலாம்.



Click it and Unblock the Notifications











