Latest Updates
-
வார ராசிபலன் (15 March 2026-21 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு நிதி நிலை டபுளாக உயரும்.. -
வெயிலால் முகம் கருமை ஆகக்கூடாதா? அப்ப கற்றாழை ஜெல்லை இப்படி யூஸ் பண்ணுங்க... -
வெறும் 3 பொருள் இருந்தா போதும்.. குளுகுளு-ன்னு சூப்பரான குச்சி ஐஸ் செய்யலாம்.. எப்படி-ன்னு பாருங்க.. -
பங்குனி மாத ராசி பலன் 2026: இந்த 5 ராசிக்காரர்களுக்கு விபரீத ராஜயோகம் தேடி வரும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
அடுப்பில்லாம செய்யக்கூடிய அவல் பாயாசம் - செஃப் தீனா ஸ்டைலில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சனிக்கிழமையில் பிறந்தவர்களின் குணமும், எதிர்காலமும் எப்படி இருக்கும் தெரியுமா? -
100 ஆண்டுகள் கழித்து மீன ராசியில் உருவாகும் சதுர்கிரக யோகம்: கோடீஸ்வர யோகம் பெறும் 3 ராசிகள்! -
செட்டிநாடு கார அடை-தேங்காய் இஞ்சி சட்னி ரெசிபி காம்போ... இதை செஞ்சு கொடுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
தக்காளி சட்னியை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல 10 இட்லி கூட சாப்பிடுவாங்க... -
இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...!
கார போளி

தேவையான பொருட்கள்:
மைதா மாவு - ஒரு கப்
உருளைக்கிழங்கு - 4
வெங்காயம் - 2
இஞ்சிபூண்டு விழுது - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 2 சிட்டிகை
எலுமிச்சை பழச்சாறு - ஒரு டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
முதலில் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் உருளைக்கிழங்கு, உப்பு, மஞ்சள் தூள் போட்டு, நன்றாக வேக வைத்துக் கொள்ளவும். பிறகு அதனை தோல் உரித்து, கட்டியின்றி பிசையவும். வெங்காயம் மற்றும் கொத்தமல்லியை நன்கு பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
பின் அந்த பிசைந்த உருளைக்கிழங்கை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதோடு வெங்காயம், இஞ்சிபூண்டு விழுது, மிளகாய் தூள், மஞ்சள் தூள், எலுமிச்சை பழச்சாறு, உப்பு மற்றும் கொத்தமல்லி சேர்த்து பிசைந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு மற்றொரு பாத்திரத்தில் மைதா மாவை போட்டு, அதில் உப்பு, தண்ணீர் சேர்த்து, சப்பாத்தி மாவு போல பிசைந்து, ஒரு மணி நேரம் மூடி ஊற வைக்கவும். பின் ஊறிய மாவில் ஒரு கால் கப் எண்ணெய் சேர்த்து, மாவு எண்ணெயை உறிஞ்சும் வரை நன்கு மென்மையாக பிசையவும்.
பின் அந்த மைதா மாவை சிறு உருண்டைகளாக உருட்டி, சப்பாத்தி போல் செய்து , அதன் நடுவில் அந்த உருளைக்கிழங்கு கலவையை வைத்து, நான்கு புறமும் மூடி, மறுபடியும் சப்பாத்தி போல் தேய்க்கவும். அவ்வாறு தேய்க்கும் போது கவனமாக தேய்க்க வேண்டும். முக்கியமாக அழுத்தி தேய்க்க கூடாது. இல்லையெனில் உருளைக்கிழங்கு கலவை வெளியே வந்துவிடும்.
இப்போது தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி தேய்த்த போளிகளை போட்டு, இரண்டுபுறமும் எண்ணெய் ஊற்றி திருப்பிப் போட்டு நன்கு வேக வைத்து சுட்டெடுக்கவும்.
இதோ சுவையான கார போளி ரெடி!!!



Click it and Unblock the Notifications











