Latest Updates
-
சனி-சந்திர சேர்க்கை உருவாக்கும் விஷ யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
2 குடைமிளகாயும், 2 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த கிரேவியை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது?
கார போளி

தேவையான பொருட்கள்:
மைதா மாவு - ஒரு கப்
உருளைக்கிழங்கு - 4
வெங்காயம் - 2
இஞ்சிபூண்டு விழுது - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 2 சிட்டிகை
எலுமிச்சை பழச்சாறு - ஒரு டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
முதலில் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் உருளைக்கிழங்கு, உப்பு, மஞ்சள் தூள் போட்டு, நன்றாக வேக வைத்துக் கொள்ளவும். பிறகு அதனை தோல் உரித்து, கட்டியின்றி பிசையவும். வெங்காயம் மற்றும் கொத்தமல்லியை நன்கு பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
பின் அந்த பிசைந்த உருளைக்கிழங்கை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதோடு வெங்காயம், இஞ்சிபூண்டு விழுது, மிளகாய் தூள், மஞ்சள் தூள், எலுமிச்சை பழச்சாறு, உப்பு மற்றும் கொத்தமல்லி சேர்த்து பிசைந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு மற்றொரு பாத்திரத்தில் மைதா மாவை போட்டு, அதில் உப்பு, தண்ணீர் சேர்த்து, சப்பாத்தி மாவு போல பிசைந்து, ஒரு மணி நேரம் மூடி ஊற வைக்கவும். பின் ஊறிய மாவில் ஒரு கால் கப் எண்ணெய் சேர்த்து, மாவு எண்ணெயை உறிஞ்சும் வரை நன்கு மென்மையாக பிசையவும்.
பின் அந்த மைதா மாவை சிறு உருண்டைகளாக உருட்டி, சப்பாத்தி போல் செய்து , அதன் நடுவில் அந்த உருளைக்கிழங்கு கலவையை வைத்து, நான்கு புறமும் மூடி, மறுபடியும் சப்பாத்தி போல் தேய்க்கவும். அவ்வாறு தேய்க்கும் போது கவனமாக தேய்க்க வேண்டும். முக்கியமாக அழுத்தி தேய்க்க கூடாது. இல்லையெனில் உருளைக்கிழங்கு கலவை வெளியே வந்துவிடும்.
இப்போது தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி தேய்த்த போளிகளை போட்டு, இரண்டுபுறமும் எண்ணெய் ஊற்றி திருப்பிப் போட்டு நன்கு வேக வைத்து சுட்டெடுக்கவும்.
இதோ சுவையான கார போளி ரெடி!!!



Click it and Unblock the Notifications