Latest Updates
-
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சௌ சௌ வாங்குனா இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும்
கார போளி

தேவையான பொருட்கள்:
மைதா மாவு - ஒரு கப்
உருளைக்கிழங்கு - 4
வெங்காயம் - 2
இஞ்சிபூண்டு விழுது - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 2 சிட்டிகை
எலுமிச்சை பழச்சாறு - ஒரு டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
முதலில் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் உருளைக்கிழங்கு, உப்பு, மஞ்சள் தூள் போட்டு, நன்றாக வேக வைத்துக் கொள்ளவும். பிறகு அதனை தோல் உரித்து, கட்டியின்றி பிசையவும். வெங்காயம் மற்றும் கொத்தமல்லியை நன்கு பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
பின் அந்த பிசைந்த உருளைக்கிழங்கை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதோடு வெங்காயம், இஞ்சிபூண்டு விழுது, மிளகாய் தூள், மஞ்சள் தூள், எலுமிச்சை பழச்சாறு, உப்பு மற்றும் கொத்தமல்லி சேர்த்து பிசைந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு மற்றொரு பாத்திரத்தில் மைதா மாவை போட்டு, அதில் உப்பு, தண்ணீர் சேர்த்து, சப்பாத்தி மாவு போல பிசைந்து, ஒரு மணி நேரம் மூடி ஊற வைக்கவும். பின் ஊறிய மாவில் ஒரு கால் கப் எண்ணெய் சேர்த்து, மாவு எண்ணெயை உறிஞ்சும் வரை நன்கு மென்மையாக பிசையவும்.
பின் அந்த மைதா மாவை சிறு உருண்டைகளாக உருட்டி, சப்பாத்தி போல் செய்து , அதன் நடுவில் அந்த உருளைக்கிழங்கு கலவையை வைத்து, நான்கு புறமும் மூடி, மறுபடியும் சப்பாத்தி போல் தேய்க்கவும். அவ்வாறு தேய்க்கும் போது கவனமாக தேய்க்க வேண்டும். முக்கியமாக அழுத்தி தேய்க்க கூடாது. இல்லையெனில் உருளைக்கிழங்கு கலவை வெளியே வந்துவிடும்.
இப்போது தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி தேய்த்த போளிகளை போட்டு, இரண்டுபுறமும் எண்ணெய் ஊற்றி திருப்பிப் போட்டு நன்கு வேக வைத்து சுட்டெடுக்கவும்.
இதோ சுவையான கார போளி ரெடி!!!



Click it and Unblock the Notifications