Latest Updates
-
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மே 8 முதல் இந்த 3 ராசிக்காரர்களின் செல்வம் டபுள் ஆகப்போகுது! -
வீட்டில் இந்த 4 செடிகள் இருந்தா போதும்… புழுதிப் புயலையும் தாண்டி அதிர்ஷ்டம் தேடி வரும்! -
கேரட்டும், மாங்காயும் இருந்தா.. இப்படி செஞ்சு பாருங்க.. எல்லாத்துக்குமே டக்கரா இருக்கும்.. -
கப்பர் யோக காலத்தில் பணத்தை இழக்காதீங்க! இந்த 5 வாஸ்து மாற்றங்கள் செழிப்பை அள்ளித்தரும்! -
Mathi Meen Benefits: அடிக்கடி மத்தி மீன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை பட்டியலிட்ட டாக்டர் தினேஷ்! -
May 2026 Monthly Numerology: உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
கொளுத்தும் வெயிலில் உடல் எடையைக் குறைக்க உதவும் 3 விதமான கூழ் ரெசிபிக்கள் - எப்படி செய்யணும் தெரியுமா? -
இன்றைய ராசிபலன் 02 மே 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு பொறுமையை சோதிக்கும் நாளாக இருக்குமாம் -
எவிலின் சர்மாவின் திடீர் பிரிவு! கசப்பான விவாகரத்தை விட இது எவ்வளவோ மேல் தெரியுமா? -
கல்யாணத்துக்குப் பின் 'சிச்சுவேஷன்ஷிப்' - வைரலாகும் இந்த டிரெண்ட் எதை உணர்த்துகிறது?
நீரிழிவு நோயாளிகளுக்கான... பட்டாணி பன்னீர் கிரேவி
நீரிழிவு நோயாளிகள் உணவில் கவனமாக இருக்க வேண்டிய காரணத்தினால், அவர்கள் பல நேரங்களில் சுவையில்லாத உணவுகளையே அதிகம் சாப்பிட வேண்டியிருக்கும். ஆனால் அத்தகையவர்களுக்காக ஒரு அருமையான சைடு டிஷ் ரெசிபி உள்ளது. அது தான் பட்டாணி பன்னீர் கிரேவி. இதில் உள்ள பன்னீர் எளிதில் செரிமானமாகக்கூடிய உணவுப்பொருளாக இருப்பதால், இதனை பட்டாணியுடன் சேர்த்து கிரேவி போன்று செய்து சாப்பிடலாம்.
இது வயதானவர்களுக்கு ஏற்ற ஒரு சூப்பரான ரெசிபி. இதன் சுவையும் அருமையாக இருக்கும். சரி, இப்போது நீரிழிவு நோயாளிகள் சாப்பிடுவதற்கு ஏற்ற, அந்த பட்டாணி பன்னீர் கிரேவி ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
பச்சை பட்டாணி - 1 கப்
பன்னீர் - 100 கிராம் (நறுக்கியது)
வெங்காயம் - 2 (நறுக்கியது)
பூண்டு - 6 பற்கள் (பொடியாக நறுக்கியது)
இஞ்சி - 2 சிறிய துண்டு (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 1 (நறுக்கியது)
மல்லி தூள் - 2 டீஸ்பூன்
கிராம்பு - 2
சீரகம் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 2 டீஸ்பூன்
தக்காளி - 4 (நறுக்கியது)
கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், நறுக்கிய பன்னீரை சேர்த்து பொன்னிறமாக வறுத்து, தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் அதே வாணலியில் கிராம்பு, சீரகம் சேர்த்து தாளித்து, இஞ்சி, பூண்டு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.
பின்னர் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும். பின்பு தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாக வதக்க வேண்டும்.
அடுத்து மல்லி தூள், மஞ்சள் தூள், உப்பு மற்றும் கரம் மசாலா சேர்த்து, தீயை குறைவில் வைத்து, 3 நிமிடம் கிளறி விட வேண்டும்.
கலவையானது நன்கு வதங்கியதும், அதில் பச்சை பட்டாணியை சேர்த்து, தண்ணீர் ஊற்றி நன்கு 5 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.
பட்டாணியானது நன்கு வெந்ததும், அதில் பன்னீரை சேர்த்து கிளறி, 2 நிமிடம் மூடி வைத்து கொதிக்க விட்டு இறக்கி, நறுக்கிய கொத்தமல்லியை சேர்த்தால், சுவையான பட்டாணி பன்னீர் கிரேவி ரெடி!!! இதனை சப்பாத்தி, நாண் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம்.



Click it and Unblock the Notifications