Latest Updates
-
நாக பஞ்சமி 2026: இந்த வருட நாக பஞ்சமி எந்த நாளில் வருகிறது? இந்த நாளில் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? -
வெஜ் கோலாப்பூரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு சூப்பரா இருக்கும் -
சனி-குரு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சுதந்திர தின ஸ்பெஷல் மூவர்ண பூரியும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 15 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டத்தின் சாவி கைக்கு வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 25-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்கு வருமானம் அதிகரிக்கப்போகுது! -
புதன் ஆயில்ய நட்சத்திரத்திற்கு செல்வதால் புது சொத்துக்களை வாங்கும் யோகமுள்ள 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்தன்று இந்த ஸ்டைலில் வாழ்த்துக்களை சொல்லுங்க.. -
தேசியக்கொடியின் நடுவில் அசோக சக்கரம் ஏன் நீல நிறத்தில் உள்ளது? அதில் ஏன் 24 ஆரங்கள் உள்ளது தெரியுமா? -
ரோட்டுக்கடை இட்லி தக்காளி சாம்பார் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. அள்ளும்..
பட்டாணி குருமா

தேவையான பொருட்கள்:
காய்ந்த பச்சை பட்டாணி - 1 கப் (நீரில் 5 மணிநேரம் ஊற வைத்தது)
பட்டை - 1 இன்ச்
கிராம்பு - 3
வெங்காயம் - 1 (நறுக்கியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு விழுது - 1 1/2 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
மல்லி தூள் - 1 டேபிள் ஸ்பூன்
சோம்பு தூள் - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
தேங்காய் பால் - 1/2 கப்
உருளைக்கிழங்கு - 1 (வேக வைத்து தோலுரித்தது)
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
குக்கரை அடுப்பில் வைத்து, அதில் ஊற வைத்துள்ள பட்டாணியைப் போட்டு, தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் ஊற்றி, 1 விசில் விட்டு இறக்க வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், பட்டை, கிராம்பு போட்டு தாளித்து, பின் நறுக்கிய வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
பின்பு தக்காளி, இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், மல்லி தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
அடுத்து வேக வைத்து தோலுரித்து நறுக்கிய உருளைக்கிழங்கை போட்டு, தண்ணீர் ஊற்றி, சிறிது நேரம் கொதிக்க விட வேண்டும்.
பிறகு அதில் வேக வைத்துள்ள பட்டாணியைப் போட்டு சிறிது நேரம் கொதிக்க விட வேண்டும்.
பின்னர் சோம்பு தூள் சேர்த்து கிளறி, தேங்காய் பாலை ஊற்றி, உப்பின் சுவை பார்த்து, வேண்டுமெனில் உப்பை போட்டு, 3 நிமிடம் கொதிக்க விட்டு இறக்க வேண்டும்.
இப்போது சுவையான பச்சை பட்டாணி குருமா ரெடி!!! இதனை சாதத்துடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.



Click it and Unblock the Notifications