Latest Updates
-
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: மே 11 முதல் இந்த 3 ராசிக்கு சொத்தும், வெற்றியும் குவியப்போகுது! -
புதன் ரிஷப ராசிக்கு செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் புயலடிக்கப் போகுதாம் -
ஆந்திரா ஸ்டைல் பாலக் கீரை தொக்கு ரெசிபி - செஞ்சு பாருங்க, டிபன், சாதத்துக்கு செமையா இருக்கும் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா.. ஒருவாட்டி இந்த தொக்கு செய்யுங்க.. இட்லி, தோசை, சாதத்துக்கு செமயா இருக்கும்.. -
ஐபிஎல் மோகத்தால் உறவில் விரிசலா? கிரிக்கெட் ஜுரத்திலும் குடும்ப அமைதியை காப்பது எப்படி? -
இந்த 4 ராசி பெண்கள் உலகின் சிறந்த அம்மாவாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
கோடைக்கால சரும பிரச்சனைகளை தடுக்கணுமா? அப்ப தேனை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
ஜான்வி கபூர் - ஷிகர் பஹாரியா திருமணம்? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த போனி கபூரின் அதிரடி விளக்கம்! -
உங்க கிட்னி ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப இந்த பழங்களை அடிக்கடி சாப்பிடுங்க -
2 ஆண்டுகள் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 4 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது!
பட்டாணி குருமா

தேவையான பொருட்கள்:
காய்ந்த பச்சை பட்டாணி - 1 கப் (நீரில் 5 மணிநேரம் ஊற வைத்தது)
பட்டை - 1 இன்ச்
கிராம்பு - 3
வெங்காயம் - 1 (நறுக்கியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு விழுது - 1 1/2 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
மல்லி தூள் - 1 டேபிள் ஸ்பூன்
சோம்பு தூள் - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
தேங்காய் பால் - 1/2 கப்
உருளைக்கிழங்கு - 1 (வேக வைத்து தோலுரித்தது)
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
குக்கரை அடுப்பில் வைத்து, அதில் ஊற வைத்துள்ள பட்டாணியைப் போட்டு, தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் ஊற்றி, 1 விசில் விட்டு இறக்க வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், பட்டை, கிராம்பு போட்டு தாளித்து, பின் நறுக்கிய வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
பின்பு தக்காளி, இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், மல்லி தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
அடுத்து வேக வைத்து தோலுரித்து நறுக்கிய உருளைக்கிழங்கை போட்டு, தண்ணீர் ஊற்றி, சிறிது நேரம் கொதிக்க விட வேண்டும்.
பிறகு அதில் வேக வைத்துள்ள பட்டாணியைப் போட்டு சிறிது நேரம் கொதிக்க விட வேண்டும்.
பின்னர் சோம்பு தூள் சேர்த்து கிளறி, தேங்காய் பாலை ஊற்றி, உப்பின் சுவை பார்த்து, வேண்டுமெனில் உப்பை போட்டு, 3 நிமிடம் கொதிக்க விட்டு இறக்க வேண்டும்.
இப்போது சுவையான பச்சை பட்டாணி குருமா ரெடி!!! இதனை சாதத்துடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.



Click it and Unblock the Notifications