Latest Updates
-
சாணக்கிய நீதி படி பெற்றோர்கள் செய்யும் இந்த 4 தவறுகள் அவர்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை மோசமாக பாதிக்குமாம் -
முட்டை பத்திரியும், தேங்காய் பாலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 22 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ஆசீர்வதிக்கப்பட்ட நாளாக இருக்குமாம் -
18 மாதங்களுக்கு பின் நடக்கப்போகும் ராகு-கேது பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சரவணபவன் நெய் மணக்கும் வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் அசத்தலா இருக்கும் -
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்களிடம் நல்ல குணங்களை விட கெட்ட குணங்கள்தான் அதிகமாக இருக்குமாம் -
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
பட்டாணி குருமா

தேவையான பொருட்கள்:
காய்ந்த பச்சை பட்டாணி - 1 கப் (நீரில் 5 மணிநேரம் ஊற வைத்தது)
பட்டை - 1 இன்ச்
கிராம்பு - 3
வெங்காயம் - 1 (நறுக்கியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு விழுது - 1 1/2 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
மல்லி தூள் - 1 டேபிள் ஸ்பூன்
சோம்பு தூள் - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
தேங்காய் பால் - 1/2 கப்
உருளைக்கிழங்கு - 1 (வேக வைத்து தோலுரித்தது)
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
குக்கரை அடுப்பில் வைத்து, அதில் ஊற வைத்துள்ள பட்டாணியைப் போட்டு, தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் ஊற்றி, 1 விசில் விட்டு இறக்க வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், பட்டை, கிராம்பு போட்டு தாளித்து, பின் நறுக்கிய வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
பின்பு தக்காளி, இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், மல்லி தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
அடுத்து வேக வைத்து தோலுரித்து நறுக்கிய உருளைக்கிழங்கை போட்டு, தண்ணீர் ஊற்றி, சிறிது நேரம் கொதிக்க விட வேண்டும்.
பிறகு அதில் வேக வைத்துள்ள பட்டாணியைப் போட்டு சிறிது நேரம் கொதிக்க விட வேண்டும்.
பின்னர் சோம்பு தூள் சேர்த்து கிளறி, தேங்காய் பாலை ஊற்றி, உப்பின் சுவை பார்த்து, வேண்டுமெனில் உப்பை போட்டு, 3 நிமிடம் கொதிக்க விட்டு இறக்க வேண்டும்.
இப்போது சுவையான பச்சை பட்டாணி குருமா ரெடி!!! இதனை சாதத்துடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.



Click it and Unblock the Notifications