For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பட்டாணி பாத்

By Staff
|

தேவையான பொருட்கள்:

500 கிராம் ரவை, 500 கிராம் சேமியா, 13 பச்சை மிளகாய், 1 மேஜைக் கரண்டி முந்திரி பருப்பு, முக்கால்தேக்கரண்டி உளுந்துப் பருப்பு, அரைத் தேக்கரண்டி கடுகு, கால் தேக்கரண்டி மஞ்சள் தூள், 2 மேஜைக் கரண்டிபச்சைப் பட்டாணி, 1 மேஜைக் கரண்டி நெய், ஒரு எலுமிச்சம் பழம், சிறு துண்டு இஞ்சி, தேவையான அளவு உப்பு,கறிவேப்பிலை

செய்முறை:

ரவை, சேமியாவை நெய்யில் வறுத்து எடுத்துக் கொள்ளவும். முந்திரிப்பருப்பு, உளுந்துப் பருப்பு, கடுகுஆகியவற்றை வாணலியில் நெய்யை ஊற்றித் தாளித்து, பட்டாணி, இஞ்சி, மிளகாயுடன் வதக்கிக் கொள்ளவும்.பிறகு தேவையான அளவு நீரை விட்டு உப்பு சேர்த்துக் கொதிக்க வைக்கவும்.

கொதித்ததும் ரவை, சேமியா இரண்டையும் போட்டுக் கிளறி, நெய் ஊற்றி, கறிவேப்பிலை, எலுமிச்சம் பழச்சாறுகலக்கவும். இதனுடன் கடையில் விற்கும் ரொட்டிகளை வாங்கி துண்டுகளாக நறுக்கி நெய்யில் வறுத்து எடுத்துக்கொள்ளவும். அதை ரவை, சேமியா இருக்கும் வாணலியில் போட்டுக் கிளறவும். ரொட்டித் துண்டுகள் சேர்ப்பதுஉங்கள் விருப்பமே.

Story first published: Friday, July 25, 2008, 17:12 [IST]
Desktop Bottom Promotion