Latest Updates
-
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ராகி பச்சை பயறு தோசையும், வெங்காய சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 24 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப துக்கமான நாளாக இருக்குமாம் -
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது!
சுவையான...பன்னீர் பரான்தா

தேவையான பொருட்கள் :
பன்னீர் - 200 கிராம்
வெங்காயம் 1
குடைமிளகாய் 1
பச்சை மிளகாய் 2
இஞ்சிபூண்டு விழுது 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் 1 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் 12 டீஸ்பூன்
சீரகம் 1 டீஸ்பூன்
எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
பரான்தாவிற்கு...
மைதா 2 கப்
தண்ணீர் 1 கப்
நெய் 1 டேபிள் ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
செய்முறை :
முதலில் மைதா மாவை ஒரு பௌலில் போட்டு, அதில் சிறிது தண்ணீர் விட்டு, பின் சிறிது உப்பையும், நெய்யையும் சேர்த்து நன்கு மென்மையாக பிசைந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு வெங்காயம், குடைமிளகாய், பச்சைமிளகாய் ஆகியவற்றை நறுக்கி வைத்துக் கொள்ளவும். பின் பன்னீரை துருவி வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சீரகம் போட்டு நன்கு வெடித்தவுடன், அத்துடன் இஞ்சிபூண்டு விழுது, நறுக்கிய வெங்காயம், குடைமிளகாய் ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
பின் சிறிது மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், உப்பு, பச்சை மிளகாய் ஆகியவற்றை போட்டு நன்கு வதக்கவும். துருவிய பன்னீரைப் போட்டு நன்கு கலக்கவும். மசாலாவானது பன்னீருடன் நன்கு சேர்ந்தவுடன் அதனை இறக்கி வைத்து விடவும்.
பிசைந்து வைத்துள்ள மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, பின் ஒவ்வொரு உருண்டைகளையும் தேய்த்து, சப்பாத்தி செய்து கொள்ள வேண்டும்.
பின் அந்த சப்பாத்தியில் அந்த மசாலாவை நடுவில் வைத்து, அதன் மேல் நறுக்கிய சிறிது வெங்காயத்தை தூவி, பின் தக்காளி சாஸை அதன்மேல் விட்டு சுருட்டவும். இப்போது சுவையான பன்னீர் பரான்தா ரெடி!!!



Click it and Unblock the Notifications