சுவையான...பன்னீர் பரான்தா

By Maha

Paneer Parantha
பன்னீரானது உடலுக்கு மிகவும் நல்லது. இதில் கொழுப்புகள் குறைவாக இருப்பதால் டையட் மேற்கொள்வோருக்கு ஒரு நல்ல உணவு. அதுவும் பன்னீரை வைத்து குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸ் செய்து கொடுத்தால் மிகவும் சுவையாக இருப்பதோடு, ஆரோக்கியமாகவும் இருக்கும். பள்ளி முடிந்து வரும் குழந்தைகளுக்கு பன்னீர் பரான்தாவை செய்து கொடுத்தால் அவர்கள் விரும்பி உண்பதோடு, அவர்கள் உடலும் ஆரோக்கியம் அடையும். அத்தகைய பன்னீர் பரான்தாவை செய்வது எப்படி என்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள் :

பன்னீர் - 200 கிராம்
வெங்காயம் 1
குடைமிளகாய் 1
பச்சை மிளகாய் 2
இஞ்சிபூண்டு விழுது 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் 1 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் 12 டீஸ்பூன்
சீரகம் 1 டீஸ்பூன்
எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன்
உப்பு தேவையான அளவு

பரான்தாவிற்கு...

மைதா 2 கப்
தண்ணீர் 1 கப்
நெய் 1 டேபிள் ஸ்பூன்
உப்பு தேவையான அளவு

செய்முறை :

முதலில் மைதா மாவை ஒரு பௌலில் போட்டு, அதில் சிறிது தண்ணீர் விட்டு, பின் சிறிது உப்பையும், நெய்யையும் சேர்த்து நன்கு மென்மையாக பிசைந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு வெங்காயம், குடைமிளகாய், பச்சைமிளகாய் ஆகியவற்றை நறுக்கி வைத்துக் கொள்ளவும். பின் பன்னீரை துருவி வைத்துக் கொள்ள வேண்டும்.

பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சீரகம் போட்டு நன்கு வெடித்தவுடன், அத்துடன் இஞ்சிபூண்டு விழுது, நறுக்கிய வெங்காயம், குடைமிளகாய் ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

பின் சிறிது மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், உப்பு, பச்சை மிளகாய் ஆகியவற்றை போட்டு நன்கு வதக்கவும். துருவிய பன்னீரைப் போட்டு நன்கு கலக்கவும். மசாலாவானது பன்னீருடன் நன்கு சேர்ந்தவுடன் அதனை இறக்கி வைத்து விடவும்.

பிசைந்து வைத்துள்ள மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, பின் ஒவ்வொரு உருண்டைகளையும் தேய்த்து, சப்பாத்தி செய்து கொள்ள வேண்டும்.

பின் அந்த சப்பாத்தியில் அந்த மசாலாவை நடுவில் வைத்து, அதன் மேல் நறுக்கிய சிறிது வெங்காயத்தை தூவி, பின் தக்காளி சாஸை அதன்மேல் விட்டு சுருட்டவும். இப்போது சுவையான பன்னீர் பரான்தா ரெடி!!!

Story first published: Wednesday, June 20, 2012, 11:02 [IST]
Desktop Bottom Promotion