Latest Updates
-
இன்றைய ராசிபலன் 29 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு சிக்கல்கள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
சூரியன் சுக்கிரனின் நட்சத்திரத்திற்கு செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
உடுப்பி தேங்காய் கொத்தமல்லி சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, வேற லெவலில் இருக்கும் -
லிவ்-இன் உறவு முறிவு குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு இளைஞர்களுக்கு நிம்மதி! -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்..! -
Mothers day 2026: உலக அன்னையர் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது? அதற்குப்பின்னால் உள்ள வரலாறு என்ன தெரியுமா? -
லிவ்-இன் உறவில் பிரிவது குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு ஜோடிகளுக்கு நிம்மதி! -
வெறும் 4 பொருளை வெச்சு ஈஸியா மாம்பழ புட்டிங் செய்யலாம் தெரியுமா? எப்படி-ன்னு பாருங்க.. -
தங்கம் போல ஜொலிக்குற சருமம் வேண்டுமா? அப்ப மாம்பழத்தை வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
நெல்லை ஸ்டைல் முருங்கைக்காய் புளிக்குழம்பு ரெசிபி - செஞ்சு பாருங்க, அட்டகாசமாக இருக்கும்
பன்னீர் தோசை
தோசையில் பல வெரைட்டிகள் உள்ளன. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான ருசி. பெரும்பாலும் தோசையில் மசாலா தோசை என்று உருளைக்கிழங்கை மசாலா போன்று செய்து, அதனை தோசையின் நடுவில் வைத்து, சாப்பிடுவோம். ஆனால் இப்போது அவற்றில் சற்று வித்தியாசமாக, அந்த மசாலாவுடன் பன்னீரை சேர்த்து செய்து, தோசையில் வைத்து செய்தால் தான் பன்னீர் தோசை.
இப்போது அந்த பன்னீர் தோசையை அருமையான சுவையில் எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
அரிசி - 3 கப்
உளுத்தம் பருப்பு - 1 கப்
உருளைக்கிழங்கு - 3-4 (வேக வைத்தது)
பன்னீர் - 1/2 கப் (துருவியது)
வெங்காயம் - 3 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 3-4 (நறுக்கியது)
கடுகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
வெண்ணெய் - 1/2 கப்
செய்முறை:
முதலில் இரவில் படுக்கும் போது அரிசி, உளுத்தம் பருப்பு மற்றும் வெந்தயத்தை நீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
காலையில் எழுந்ததும், அதனை கிரைண்டரில் போட்டு, நைஸாக தோசை மாவு பதத்திற்கு அரைத்து, அதில் உப்பு சேர்த்து கலந்து, 4-5 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பின், வெங்காயம் போட்டு பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும்.
பின்னர் பன்னீர், மசித்த உருளைக்கிழங்கு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், பச்சை மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து 1 நிமிடம் வதக்கி, இறக்க வேண்டும்.
பின்பு தோசைக் கல்லை மற்றொரு அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெய் ஊற்றி, உருகியதும், கல்லில் தேய்த்து, தோசை மாவால் தோசை ஊற்றிக் கொள்ள வேண்டும்.
பின் அந்த தோசை ஒரு தட்டில் வைத்து, அதில் வதக்கி வைத்துள்ள பன்னீர் கலவையை சுற்றி தேய்த்து, சுருட்டி பரிமாற வேண்டும். இதேப் போல் வேண்டி அளவில் தோசை ஊற்றி, சாப்பிடலாம்.
இப்போது சுவையான பன்னீர் தோசை ரெடி!!! இதனை தேங்காய் சட்னி மற்றும் சாம்பாருடன் சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.



Click it and Unblock the Notifications