Latest Updates
-
புதன் மேஷ ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
1/4 கப் வேர்க்கடலை இருந்தா தேங்காய் சேர்க்காத இந்த சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
லிவ்-இன் உறவு முறிந்தால் பலாத்காரமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு என்ன சொல்கிறது? -
சனி-புதனால் உருவாகும் லாப திருஷ்டி யோகம்: மே மாதம் இந்த 5 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
1 கப் மீந்து போன சாதம் இருக்கா? அப்ப ஒருடைம் இந்தோனேஷியன் ஸ்டைல் ப்ரைடு ரைஸ் ட்ரை பண்ணுங்க.. -
லிவ்-இன் உறவில் பிரிவது குற்றமா? உச்சநீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு சொல்லும் உண்மை இதுதான்! -
உங்களுக்கு புற்றுநோய் வராம தடுக்கணுமா? இந்த பொருட்களை அடிக்கடி உணவில் சேர்த்துக்கோங்க -
Mothers Day 2026: 50 வயதை எட்டிய ஒவ்வொரு தாய்மாரும் தினமும் சாப்பிட வேண்டிய 5 உணவுகள்! -
இந்த 3 தேதிகளில் பிறந்தவர்கள் சனிபகவானின் ஆசீர்வாதத்தால் கோடீஸ்வரராகும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் -
May 2026 Money Horoscope: மே மாதத்தில் பண மழையில் நனையபோவது இந்த 4 ராசிக்காரங்க தான்.. உங்க ராசி இதுல இருக்கா?
கடாய் காளான் கிரேவி
அசைவ உணவுகளின் சுவைக்கு இணையான சுவையைக் கொண்டது தான் காளான். அதிலும் இத்தகைய காளானை கிரேவி, மசாலா போன்று செய்து சாப்பிட்டால், அதன் சுவை இன்னும் அருமையாக இருக்கும். இங்கு தமிழ் போல்ட் ஸ்கை கடாய் காளான் கிரேவியை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளது.
அதைப் படித்து அவற்றை முயற்சித்துப் பாருங்கள். குறிப்பாக இந்த கிரேவியானது சாதம், சப்பாத்தி போன்றவற்றிற்கு அட்டகாசமாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:
காளான் - 1 கப் (நறுக்கியது)
குடைமிளகாய் - 1/2 (நறுக்கியது)
பெரிய வெங்காயம் - 1/2 கப் (பொடியாக நறுக்கியது) + 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
தக்காளி - 2 (நறுக்கியது)
பிரஷ் க்ரீம் - 3 டேபிள் ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது
எண்ணெய் - 3 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
வறுத்து அரைப்பதற்கு...
வரமிளகாய் - 2
மல்லி - 2 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் காளானை நன்கு சுத்தம் செய்து துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.
பின்னர் சறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை வாணலியில் போட்டு பொன்னிறமாக வறுத்து, குளிர வைத்து, பின் மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், 1/2 கப் வெங்காயம் மற்றும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பொன்னிறமாக வதக்கி, பின் அதில் அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து வதக்க வேண்டும்.
பின் தக்காளியை மிக்ஸியில் போட்டு அரைத்து, அதனை வாணலியில் ஊற்றி பச்சை வாசனை போக கொதிக்க விட வேண்டும்.
வாணலியில் இருந்து பச்சை வாசனை போன பின்னர், அதில் சிறிது தண்ணீர், உப்பு மற்றும் கரம் மசாலா சேர்த்து கொதிக்க விட வேண்டும்.
அடுத்து மற்றொரு அடுப்பில் வாணலியை வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், குடைமிளகாய் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் வெங்காயத்தை சேர்த்து வதக்கி, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்து அதே வாணலியில் காளானை சேர்த்து 2 நிமிடம் வதக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு வதக்கி வைத்துள்ள காளானை கொதிக்கும் கிரேவியில் சேர்த்து, காளானை நன்கு மென்மையாக வேக வைக்க வேண்டும்.
காளானானது மென்மையானதும், அதில் பிரஷ் க்ரீம் சேர்த்து கொதிக்க விட வேண்டும்.
கிரேவியில் இருந்து நல்ல நறுமணம் வீசும் போது, அதில் வதக்கி வைத்துள்ள குடைமிளகாய் மற்றும் வெங்காயத்தை சேர்த்து கிளறி, பின் கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், கடாய் காளான் கிரேவி ரெடி!!!
Image Courtesy: sharmispassions



Click it and Unblock the Notifications