Latest Updates
-
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்...
பட்டாணி புலாவ்

தேவையான பொருட்கள்:
பாசுமதி அரிசி - 2 கப்
பச்சை பட்டாணி - 1 கப்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 3 (நறுக்கியது)
பிரியாணி இலை - 1
கிராம்பு - 3
பட்டை - 2 துண்டு
ஏலக்காய் - 2
சீரகம் - 1/4 டீஸ்பூன்
தண்ணீர் - 2 கப்
தேங்காய் பால் - 1 1/2 கப்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் பாசுமதி அரிசியை நீரில் 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின் அதனை கழுவி நீரை வடிகட்டி, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் நெய்யை ஊற்றி, கழுவி வைத்துள்ள அரிசியை போட்டு, வாசனை வரும் வரை வறுக்க வேண்டும்.
பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, மீதமுள்ள நெய்யையும் சேர்த்து, காய்ந்ததும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை மற்றும் சீரகம் சேர்த்து வதக்க வேண்டும்.
பிறகு அதில் நறுக்கி வைத்துள்ள பச்சை மிளகாய், வெங்காயம் மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து, 5 நிமிடம் பொன்னிறமாக வதக்க வேண்டும்.
பின்பு அதில் உப்பு, பச்சை பட்டாணி, வறுத்து வைத்துள்ள அரிசி, தேங்காய் பால் மற்றும் தண்ணீரை ஊற்றி, 3 விசில் விட்டு இறக்க வேண்டும்.
இப்போது சுவையான பட்டாணி புலாவ் ரெடி!!!



Click it and Unblock the Notifications











