Latest Updates
-
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப குடல் புற்றுநோய் இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
ஆங்கிலேயர்களுக்கே கடன் கொடுத்து இந்தியாவில் முதன் முதலாக கார் வாங்கிய பணக்கார வியாபாரி யார் தெரியுமா? -
மீன ராசியில் அஸ்தமனமாகும் சனி பகவான்: மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்... -
கடுகளவும் பொறுமையில்லாத 4 ராசிக்காரங்க இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா?
காலிஃப்ளவர் புலாவ்
குளிர்காலத்தில் காலிஃப்ளவர் அதிகம் கிடைக்கக்கூடிய உணவுப் பொருள் என்பதால், இந்த காலிஃப்ளவரைக் கொண்டு எப்படி அருமையான சுவையில், விருப்பமான காய்கறிகளை சேர்த்து புலாவ் செய்வதென்று கொடுத்துள்ளோம். இங்கு கொடுக்கப்பட்டுள்ள ரெசிபியில் காலிஃப்ளவருடன், பச்சை பட்டாணி சேர்த்து செய்துள்ளோம். இவை இரண்டுமே குளிர்கால சீசன் காய்கறிகளாகும்.
மேலும் இவை இரண்டிலுமே எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளன. ஆகவே இவற்றைக் கொண்டு காலையில் புலாவ் செய்தால், மதியம் அலுவலகம் அல்லது பள்ளியில் சாப்பிடுவதற்கு ஏற்றதாக இருக்கும். சரி, இப்போது அந்த காலிஃப்ளவர் புலாவ் ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
பாசுமதி அரிசி - 1 கப்
காலிஃப்ளவர் - 1 (சிறியது மற்றும் பொடியாக நறுக்கியது)
பச்சை பட்டாணி - 1/2 கப்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
தக்காளி - 3 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2 (நீளமாக கீறியது)
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
மிளகு தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
சீரகம் - 1 டீஸ்பூன்
பட்டை - 1
ஏலக்காய் - 2
பிரியாணி இலை - 1
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - 2 கப்
செய்முறை:
முதலில் அரிசியை நன்கு சுத்தமாக கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், பிரியாணி இலை, ஏலக்காய், பட்டை சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின் வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து தீயை குறைவில் வைத்து 3-4 நிமிடம் வதக்க வேண்டும்.
பின்பு காலிஃப்ளவர், பச்சை பட்டாணி, பச்சை மிளகாய் சேர்த்து மீண்டும் 3-4 நிமிடம் வதக்க வேண்டும்.
அடுத்து தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகப் பொடி, மிளகு தூள், கரம் மசாலா சேர்த்து சிறிது நேரம் கிளறி விட வேண்டும்.
பிறகு பாசுமதி அரிசியைப் போட்டு 2-3 நிமிடம் கிளறி, தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து, குக்கரை மூடி 2-3 விசில் விட்டு இறக்கினால், சுவையான காலிஃப்ளவர் புலாவ் ரெடி!!!



Click it and Unblock the Notifications











