Latest Updates
-
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க..
தேங்காய் அவல் உப்புமா
காலை வேளையில் எளிமையான காலை உணவை செய்ய நினைத்தால், தேங்காய் அவல் உப்புமா செய்து சாப்பிடுங்கள். இந்த ரெசிபியானது செய்வதற்கு மிகவும் ஈஸியானது மட்டுமின்றி, வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். மேலும் வேலைக்கு செல்வோருக்கு இந்த ரெசிபி காலையில் செய்வதற்கு ஏற்றதாக இருக்கும்.
சரி, இப்போது அந்த தேங்காய் அவல் உப்புமாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
அவல் - 2 கப்
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை - சிறிது
பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
தண்ணீர் - 1 கப்
சட்னிக்கு...
தேங்காய் - 1/2 கப்
வரமிளகாய் - 3-4
பூண்டு - 2 பற்கள்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - 1/4 கப்
செய்முறை:
முதலில் சட்னிக்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பௌலில் அவலைப் போட்டு, அதில் தண்ணீர் தெளித்து கலந்து, 5 நிமிடம் தனியாக ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் அரைத்து வைத்துள்ள சட்னியில் அவலைப் போட்டு நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளித்து, பின் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து சிறிது நேரம் வதக்கி விட வேண்டும்.
இறுதியில் அதில் அவலை சேர்த்து தேவையான அளவு உப்பு தூவி 5 நிமிடம் பிரட்டி இறக்கினால், தேங்காய் அவல் உப்புமா ரெடி!!!
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications











