Latest Updates
-
1 உருளைக்கிழங்கும், 1 கப் தயிரும் இருந்தா.. மதியம் 10 நிமிஷத்துல இந்த சைடுடிஷ் செய்யுங்க.. சாதத்துக்கு அள்ளும் -
டெல்லி-என்சிஆர் புழுதிப் புயல்: வீட்டைப் பாதுகாக்க இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா போதும்! -
புதன் மேஷ ராசியில் அஸ்தமனமாவதால் புது சொத்துக்களை வாங்கிக் குவிக்கப்போகும் அதிர்ஷ்டமுள்ள 3 ராசிகள் இவங்கதான் -
Heatwave Alert: கோடையில் உடல் வறண்டு போகாம இருக்கணுமா? அப்ப இதெல்லாம் தினமும் சாப்பிடுங்க.. -
மணி பிளாண்ட் வளர்க்கும் ரகசியம் தெரியுமா? கோடையில் வீட்டை ஜிலுஜிலுவென மாற்றும் இந்த வாஸ்து டிப்ஸ்! -
பாபா வங்கா கணிப்பு படி 2125-ல் ஏலியன்களை சந்திக்கப்போகும் முதல் நாடு எது தெரியுமா? -
மே மாத சூரிய பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு தொழில் மற்றும் நிதி நிலையில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது! -
செட்டிநாடு வெங்காய கோசு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 28 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டுமாம் -
May 2026 Career Horoscope: மே மாதத்தில் தொழிலில் கொடிகட்டி பறக்கப் போவது இந்த 4 ராசிக்காரங்க தான்!
செலரி சட்னி
பலருக்கு செலரி கீரையை எப்படி சமைத்து சாப்பிடுவதென்று தெரியாது. அத்தகையவர்களுக்காக அந்த கீரையை எப்படி செய்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும் என்று தான் பார்க்கப் போகிறோம். செலரி கீரையை காலையில் தோசை, இட்லி, சாதம் போன்றவற்றிற்கு ஏற்றவாறு அதனை சட்னியாக செய்து சாப்பிட்டால், உடலுக்கு ஆரோக்கியம் கிடைத்தவாறு இருப்பதுடன், காலையில் விரைவில் சமைத்தவாறும் இருக்கும்.
சரி, இப்போது அந்த செலரி கீரை சட்னியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
செலரி கீரை - 1/2 கட்டு
பச்சை மிளகாய் - 4
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
கொத்தமல்லி - 1 கையளவு
உப்பு - தேவையான அளவு
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
கடுகு - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், செலரி சேர்த்து 5 நிமிடம் வதக்க வேண்டும்.
பின்னர் அதில் பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட், கொத்தமல்லி சேர்த்து 2-3 நிமிடம் வதக்க வேண்டும்.
அடுத்து அதனை இறக்கி குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு மென்மையாக அரைக்க வேண்டும்.
பின்பு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மீதமுள்ள எண்ணெயை ஊற்றி காய்ந்ததும், கடுகு, பெருங்காயத் தூள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.
பிறகு அதில் அரைத்து வைத்துள்ள சட்னியை ஊற்றி, அத்துடன் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கிளறி, சட்னியில் இருந்து எண்ணெய் பிரியும் போது இறக்கினால், செலரி சட்னி ரெடி!!!



Click it and Unblock the Notifications