Latest Updates
-
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்...
செலரி சட்னி
பலருக்கு செலரி கீரையை எப்படி சமைத்து சாப்பிடுவதென்று தெரியாது. அத்தகையவர்களுக்காக அந்த கீரையை எப்படி செய்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும் என்று தான் பார்க்கப் போகிறோம். செலரி கீரையை காலையில் தோசை, இட்லி, சாதம் போன்றவற்றிற்கு ஏற்றவாறு அதனை சட்னியாக செய்து சாப்பிட்டால், உடலுக்கு ஆரோக்கியம் கிடைத்தவாறு இருப்பதுடன், காலையில் விரைவில் சமைத்தவாறும் இருக்கும்.
சரி, இப்போது அந்த செலரி கீரை சட்னியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
செலரி கீரை - 1/2 கட்டு
பச்சை மிளகாய் - 4
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
கொத்தமல்லி - 1 கையளவு
உப்பு - தேவையான அளவு
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
கடுகு - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், செலரி சேர்த்து 5 நிமிடம் வதக்க வேண்டும்.
பின்னர் அதில் பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட், கொத்தமல்லி சேர்த்து 2-3 நிமிடம் வதக்க வேண்டும்.
அடுத்து அதனை இறக்கி குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு மென்மையாக அரைக்க வேண்டும்.
பின்பு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மீதமுள்ள எண்ணெயை ஊற்றி காய்ந்ததும், கடுகு, பெருங்காயத் தூள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.
பிறகு அதில் அரைத்து வைத்துள்ள சட்னியை ஊற்றி, அத்துடன் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கிளறி, சட்னியில் இருந்து எண்ணெய் பிரியும் போது இறக்கினால், செலரி சட்னி ரெடி!!!



Click it and Unblock the Notifications











