Latest Updates
-
ஜவ்வரிசி தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 11 ஜூன் 2026: இன்று உங்களின் ராசிக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா? -
ஜூன் 11-ல் நிகழும் 3 கிரகங்களின் அரிய சேர்க்கை: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சகல நன்மைகளும் கிடைக்கப்போகுதாம் -
விவாகரத்து இனி சுலபம்! உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு தம்பதிகளுக்குக் கொடுக்கும் நிம்மதி என்ன? -
தக்காளி இருந்தா இந்த மாதிரி ஹைதராபாத் தக்காளி சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
ஹனிமூனுக்குப் பெற்றோரையும் கூட்டிச் சென்ற கணவர்! விவாகரத்து கோரி நீதிமன்றம் சென்ற மனைவி - என்ன நடந்தது? -
இந்தியாவின் ஒரு ரயில் நிலையத்தில் கூட ஏன் மருந்து கடை இருப்பதில்லை தெரியுமா? இதுக்கு இப்படி ஒரு காரணம் இருக்கா -
சாணக்கிய நீதி படி இந்த 5 விஷயங்களுக்காக பணத்தை செலவழிப்பவர்களை விட்டு வறுமை எப்பவுமே போகாதாம் -
1 கப் பட்டாணி இருந்தா இந்த மாதிரி பட்டர் மசாலா செய்யுங்க - சப்பாத்தி, பூரிக்கு அட்டகாசமாக இருக்கும் -
சுட்டெரிக்கும் வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைக்கணுமா? இந்த வாஸ்து செடிகள் இருந்தா போதும்!
ஆந்திரா ஸ்டைல் உருளைக்கிழங்கு குருமா
கார உணவுகள் என்றால் ஞாபகத்திற்கு வருவது ஆந்திரா தான். ஏனெனில் அவர்கள் தான் உணவில் நிறைய காரம் சேர்த்து சமைப்பார்கள். அத்தகைய ஆந்திரா உணவுகளில் சைவம் மற்றும் அசைவ உணவுகள் இரண்டுமே மிகவும் பிரபலம் தான். குறிப்பாக அசைவ உணவுகளில் ஐதராபாத் பிரியாணியை வீட்டில் ட்ரை செய்வது போல, சாதாரணமான உருளைக்கிழங்கு குருமாவையும் வீட்டில் ட்ரை செய்யலாம்.
இத்தகைய உருளைக்கிழங்கு குருமா செய்வது மிகவும் எளிது. இப்போது அதனை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

உருளைக்கிழங்கு - 4 (வேக வைத்து தோலுரித்து, நறுக்கியது)
வெங்காயம் - 1 (நறுக்கியது)
தக்காளி - 2 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மல்லி தூள் - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
கரம் மசாலா தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - 1 கப்
எண்ணெய் - தேவையான அளவு
அரைப்பதற்கு...
தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன் (துருவியது)
பச்சை மிளகாய் - 3
கசகசா - 1 டீஸ்பூன்
முந்திரி - 8
சோம்பு - 1/2 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் மிக்ஸியில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி, நன்கு பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், அதில வெங்காயம், கறிவேப்பிலை போட்டு வதக்கி, இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு 2-3 நிமிடம் கிளற வேண்டும்.
வெங்காயம் பொன்னிறமானதும், அதில் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து, சிறிது நேரம் வதக்க வேண்டும்.
பின்னர் அதில் பாதி தக்காளியைப் போட்டு 2 நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.
அடுத்து, அதில் மிளகாய் தூள் மற்றும் மல்லி தூள் சேர்த்து கிளற வேண்டும்.
பிறகு வேக வைத்து நறுக்கியுள்ள உருளைக்கிழங்கை போட்டு, அத்துடன் அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டையும் சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி, நன்கு 4-5 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.
கிரேவியானது சற்று கெட்டியானதும், அதில் கரம் மசாலா சேர்த்து, ஒரு முறை கிளறி, ஒரு நிமிடம் கொதிக்க விட்டு இறக்கிவிட வேண்டும்.
இப்போது சுவையான ஆந்திரா ஸ்டைல் உருளைக்கிழங்கு குருமா ரெடி!!! இறுதியில் இதன் மேல் கொத்தமல்லியைத் தூவி அலங்கரிக்க வேண்டும்.



Click it and Unblock the Notifications