Latest Updates
-
தலைமுடி அடர்த்தியா வளரணுமா? அப்ப கறிவேப்பிலையை இந்த எண்ணெய்களுடன் சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
குடிமக்கள் அனைவரும் சொந்த வீடு வைத்துள்ள உலகின் அதிசய நாடு - இதற்கு காரணம் என்ன தெரியுமா? -
ராகுவின் நட்சத்திரத்துக்கு செல்லும் செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
சூரிய கிரகணத்திற்குப் பிறகு மோசமான காலகட்டத்தை அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஆடி அமாவாசை ஸ்பெஷல் பாயாசம் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
Aadi Amavasai 2026: ஆடி அமாவாசையில் உங்க ராசிப்படி தானம் செய்யுங்க.. வீட்டில் பணமும், மகிழ்ச்சியும் பெருகும்! -
ஆடி அமாவாசை ஸ்பெஷல் வாழைக்காய் கூட்டு ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
இன்று கடக ராசியில் உதயமாகும் குரு பகவான்: இந்த 6 ராசிக்காரங்க பண விஷயத்துல உஷாரா இருக்கணும்.. -
Independence Day 2026: ஆகஸ்ட் 16-ல் சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வினோத இந்திய நகரம் எது தெரியுமா? -
கோதுமை மிளகு பொங்கலும், தக்காளி குழம்பும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
ஆலு கோபி மசாலா
வீட்டில் உருளைக்கிழங்கு மற்றும் காலிஃப்ளவர் இருந்தால், அதனைக் கொண்டு அருமையான சுவையில் மசாலா செய்யலாம். அதிலும் இந்த மசாலா மிகவும் காரசாரமாக இருக்கும். மேலும் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய வகையில் சூப்பராக இருக்கும். அதுமட்டுமின்றி, இந்த ஆலு கோபி மசாலாவானது பேச்சுலர்கள் செய்யக்கூடியவாறும் இருக்கும்.
இப்போது அந்த ஆலு கோபி மசாலாவின் செய்முறையைப் பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
காலிஃப்ளவர் - 1 (சிறியது மற்றும் சிறிய துண்டுகளாக நறுக்கியது)
உருளைக்கிழங்கு - 3 (சிறியது மற்றும் சிறிய துண்டுகளாக நறுக்கியது)
பச்சை பட்டாணி - 1 கப்
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
சீரகம் - 1 டீஸ்பூன்
பிரியாணி இலை - 1
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
மல்லி தூள் - 2 டீஸ்பூன்
மாங்காய் தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)
தண்ணீர் - 1/2 கப்
செய்முறை:
முதலில் நறுக்கி வைத்துள்ள காலிஃப்ளவரை வெதுவெதுப்பான நீரில் போட்டு சிறிது நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். அதேப் போன்று நறுக்கி வைத்துள்ள உருளைக்கிழங்கையும் குளிர்ந்த நீரில் போட்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், பிரியாணி இலை, பெருங்காயத் தூள் சேர்த்து சிறிது நேரம் தாளிக்க வேண்டும்.
பின் வெங்காயம் சேர்த்து, தீயை குறைவில் வைத்து 4-5 நிமிடம் வதக்க வேண்டும்.
அடுத்து இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 2-3 நிமிடம் வதக்கி, தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகப் பொடி, மாங்காய் தூள், மல்லி தூள் மற்றும் உப்பு சேர்த்து 5-6 நிமிடம் நன்கு வதக்கி விட வேண்டும்.
பிறகு பச்சை பட்டாணி, காலிஃப்ளவர், உருளைக்கிழங்கு சேர்த்து, காய்கறிகளில் மசாலா நன்கு சேரும் வரை, சுமார் 5-6 நிமிடம் கிளறி விட வேண்டும்.
பின் தண்ணீர் ஊற்றி, தட்டு கொண்டு மூடி வைத்து, குறைவான தீயிலேயே 7-8 நிமிடம் கொதிக்க விட்டு, இறுதியில் கரம் மசாலா சேர்த்து கிளறி இறக்கி, கொத்தமல்லியை தூவி அலங்கரித்தால், சுவையான ஆலு கோபி மசாலா ரெடி!!!



Click it and Unblock the Notifications