Latest Updates
-
சாணக்கிய நீதி படி ஒரு நல்ல குடும்பத் தலைவரிடம் இருக்க வேண்டிய 4 குணங்கள் இதுதான் - உங்ககிட்ட எத்தனை இருக்கு? -
1/2 கப் பாசிப்பருப்பு இருந்தா.. இப்படி குழம்பு வையுங்க.. சாதத்துக்கு செமயா இருக்கும்.. -
இந்தியாவிலுள்ள இந்த கிராமத்திற்குள் இந்தியர்களே நுழையக்கூடாதாம் - இது எந்த நாட்டுக்கு சொந்தம் தெரியுமா? -
ஜூன் 22-ல் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 3 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சியுடன், லாபமும் கிடைக்கும்.. -
பீன்ஸை பட்டாணியுடன் சேர்த்து இந்த மாதிரி பொரியல் பண்ணுங்க - பீன்ஸ் பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க -
World Sickle Cell Day 2026: அரிவாள் செல் நோய் என்றால் என்ன, அதன் அறிகுறிகள் என்ன? - விளக்கும் டாக்டர்! -
செவ்வாய் ரிஷப ராசி செல்வதால் ஆகஸ்ட் மாதம் வரை இந்த 3 ராசிக்காரர்களை ஆபத்துகள் விடாம துரத்தப்போகுதாம் -
ரவா அடையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 19 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஜூன் 30-ல் நடக்கும் ராகு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்..
ஆலு கோபி மசாலா
வீட்டில் உருளைக்கிழங்கு மற்றும் காலிஃப்ளவர் இருந்தால், அதனைக் கொண்டு அருமையான சுவையில் மசாலா செய்யலாம். அதிலும் இந்த மசாலா மிகவும் காரசாரமாக இருக்கும். மேலும் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய வகையில் சூப்பராக இருக்கும். அதுமட்டுமின்றி, இந்த ஆலு கோபி மசாலாவானது பேச்சுலர்கள் செய்யக்கூடியவாறும் இருக்கும்.
இப்போது அந்த ஆலு கோபி மசாலாவின் செய்முறையைப் பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
காலிஃப்ளவர் - 1 (சிறியது மற்றும் சிறிய துண்டுகளாக நறுக்கியது)
உருளைக்கிழங்கு - 3 (சிறியது மற்றும் சிறிய துண்டுகளாக நறுக்கியது)
பச்சை பட்டாணி - 1 கப்
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
சீரகம் - 1 டீஸ்பூன்
பிரியாணி இலை - 1
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
மல்லி தூள் - 2 டீஸ்பூன்
மாங்காய் தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)
தண்ணீர் - 1/2 கப்
செய்முறை:
முதலில் நறுக்கி வைத்துள்ள காலிஃப்ளவரை வெதுவெதுப்பான நீரில் போட்டு சிறிது நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். அதேப் போன்று நறுக்கி வைத்துள்ள உருளைக்கிழங்கையும் குளிர்ந்த நீரில் போட்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், பிரியாணி இலை, பெருங்காயத் தூள் சேர்த்து சிறிது நேரம் தாளிக்க வேண்டும்.
பின் வெங்காயம் சேர்த்து, தீயை குறைவில் வைத்து 4-5 நிமிடம் வதக்க வேண்டும்.
அடுத்து இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 2-3 நிமிடம் வதக்கி, தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகப் பொடி, மாங்காய் தூள், மல்லி தூள் மற்றும் உப்பு சேர்த்து 5-6 நிமிடம் நன்கு வதக்கி விட வேண்டும்.
பிறகு பச்சை பட்டாணி, காலிஃப்ளவர், உருளைக்கிழங்கு சேர்த்து, காய்கறிகளில் மசாலா நன்கு சேரும் வரை, சுமார் 5-6 நிமிடம் கிளறி விட வேண்டும்.
பின் தண்ணீர் ஊற்றி, தட்டு கொண்டு மூடி வைத்து, குறைவான தீயிலேயே 7-8 நிமிடம் கொதிக்க விட்டு, இறுதியில் கரம் மசாலா சேர்த்து கிளறி இறக்கி, கொத்தமல்லியை தூவி அலங்கரித்தால், சுவையான ஆலு கோபி மசாலா ரெடி!!!



Click it and Unblock the Notifications