Latest Updates
-
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க -
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்!
ஆலு கோபி மசாலா
வீட்டில் உருளைக்கிழங்கு மற்றும் காலிஃப்ளவர் இருந்தால், அதனைக் கொண்டு அருமையான சுவையில் மசாலா செய்யலாம். அதிலும் இந்த மசாலா மிகவும் காரசாரமாக இருக்கும். மேலும் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய வகையில் சூப்பராக இருக்கும். அதுமட்டுமின்றி, இந்த ஆலு கோபி மசாலாவானது பேச்சுலர்கள் செய்யக்கூடியவாறும் இருக்கும்.
இப்போது அந்த ஆலு கோபி மசாலாவின் செய்முறையைப் பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
காலிஃப்ளவர் - 1 (சிறியது மற்றும் சிறிய துண்டுகளாக நறுக்கியது)
உருளைக்கிழங்கு - 3 (சிறியது மற்றும் சிறிய துண்டுகளாக நறுக்கியது)
பச்சை பட்டாணி - 1 கப்
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
சீரகம் - 1 டீஸ்பூன்
பிரியாணி இலை - 1
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
மல்லி தூள் - 2 டீஸ்பூன்
மாங்காய் தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)
தண்ணீர் - 1/2 கப்
செய்முறை:
முதலில் நறுக்கி வைத்துள்ள காலிஃப்ளவரை வெதுவெதுப்பான நீரில் போட்டு சிறிது நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். அதேப் போன்று நறுக்கி வைத்துள்ள உருளைக்கிழங்கையும் குளிர்ந்த நீரில் போட்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், பிரியாணி இலை, பெருங்காயத் தூள் சேர்த்து சிறிது நேரம் தாளிக்க வேண்டும்.
பின் வெங்காயம் சேர்த்து, தீயை குறைவில் வைத்து 4-5 நிமிடம் வதக்க வேண்டும்.
அடுத்து இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 2-3 நிமிடம் வதக்கி, தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகப் பொடி, மாங்காய் தூள், மல்லி தூள் மற்றும் உப்பு சேர்த்து 5-6 நிமிடம் நன்கு வதக்கி விட வேண்டும்.
பிறகு பச்சை பட்டாணி, காலிஃப்ளவர், உருளைக்கிழங்கு சேர்த்து, காய்கறிகளில் மசாலா நன்கு சேரும் வரை, சுமார் 5-6 நிமிடம் கிளறி விட வேண்டும்.
பின் தண்ணீர் ஊற்றி, தட்டு கொண்டு மூடி வைத்து, குறைவான தீயிலேயே 7-8 நிமிடம் கொதிக்க விட்டு, இறுதியில் கரம் மசாலா சேர்த்து கிளறி இறக்கி, கொத்தமல்லியை தூவி அலங்கரித்தால், சுவையான ஆலு கோபி மசாலா ரெடி!!!



Click it and Unblock the Notifications