Latest Updates
-
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது...
காரமான அடை தோசை
தென்னிந்தியாவில் தோசை மிகவும் பிரபலமான ஒரு ரெசிபி. அதிலும் தோசையில் ஒன்றான அடை தோசை தமிழ் நாட்டில மிகவும் பிரபலமான ஒன்று. இந்த தோசையின் ஸ்பெஷல் என்னவென்றால், இதில் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் சில பருப்புக்களை, அரிசியுடன் சேர்த்து அரைத்து, தோசைகளாக விடுவது தான்.
மேலும் அடை தோசை மிகவும் காரமான ஒரு ரெசிபி. அந்த அடை தோசையை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
ரவை - 1/2 கப்
இட்லி அரிசி - 1/2 கப்
கொண்டைக்கடலை - 1/2 கப்
துவரம் பருப்பு - 1/3 கப்
உளுத்தம் பருப்பு - 1/4 கப்
துருவிய தேங்காய் - 1/3 கப்
வரமிளகாய் - 3-4
கறிவேப்பிலை - சிறிது
சீரகம் - 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1/2 கப்
செய்முறை:
முதலில் இட்லி அரிசியை இரவில் படுக்கும் முன், நீரில் ஊற வைத்து விட வேண்டும். அதேப் போல் உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு, கொண்டைக்கடலை போன்றவற்றையும் நீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் காலையில் எழுந்து ஊற வைத்துள்ள அனைத்து பருப்புக்களையும் நன்கு நைஸாக அரைத்து, ஒரு பௌலில் போட்டுக் கொள்ள வேண்டும்
பிறகு கிரைண்டரில் ஊற வைத்துள்ள அரிசியை கழுவிப் போட்டு, வரமிளகாய், துருவிய தேங்காய், சீரகம், பெருங்காயத் தூள், கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி, தோசை மாவு பதத்திற்கு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு அரைத்து வைத்துள்ள பருப்புடன், இந்த தோசை மாவு, ரவை சேர்த்து, தேவையான உப்பு சேர்த்து கலந்து, நறுக்கி வைத்துள்ள கொத்தமல்லியை தூவி கிளறி, 25 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, அதில் ஊற வைத்துள்ள மாவை, தோசைப் போல் ஊற்றி, எண்ணெய் சேர்த்து இருபக்கமும் பொன்னிறமாக சுட்டு எடுக்க வேண்டும்.
இப்போது சுவையான மற்றும் காரமான அடை தோசை ரெடி!!! இதனை சாம்பார் மற்றும் தேங்காய் சட்னியுடன் தொட்டு சாப்பிட்டால், சூப்பராக இருக்கும்.



Click it and Unblock the Notifications











