Latest Updates
-
முகத்தில் கருந்திட்டுக்கள் அதிகமா இருக்குதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
இறந்தவர்கள் உடலை எரித்தாலும் இந்த ஒரு பாகம் மட்டும் அழியாதாம் - அது எந்த உறுப்பு தெரியுமா? -
Aadi 2026: ஆடி மாதத்தில் கோடீஸ்வர யோகத்தைப் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா? -
வெண்டைக்காயும் வேர்க்கடலையும் இருந்தா.. இப்படி தொக்கு செய்யுங்க.. 3 வேளையும் சைடு டிஷ் பிரச்சனையே இருக்காது.. -
சூரியன் சனிபகவானின் நட்சத்திரத்திற்கு செல்வதால் இந்த 3 ராசிகளின் பலமும், செல்வாக்கும் அதிகரிக்கப் போகுதாம் -
1 கப் கொத்தமல்லி இருந்தா இந்த மணமணக்கும் சாம்பாரை வைச்சு பாருங்க - வித்தியாசமா அருமையா இருக்கும் -
எலுமிச்சை நீர் Vs தேன் கலந்த நீர் - இவற்றில் உடல் எடையைக் குறைக்க சிறந்தது எது? -
தாய் கிழவி இயக்குனருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சிவகார்த்திகேயன் - என்ன செய்திருக்கார் பாருங்க? -
இந்த 4 விஷயங்களை பின்பற்றாதவரின் குடும்பம் விரைவில் வறுமையில் சிக்குமாம் - சாணக்கிய ரகசியம் -
ஜூலை 27-ல் நடக்கும் சனி வக்ர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு கடன் தீரும் காசு சேரும்.. உங்க ராசியும் இதுல இருக்கா?
ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.. உளுந்தங்களியை செய்வது எப்படி?
உங்கள் வீட்டில் ஸ்வீட் எதுவும் இல்லையா? வீட்டில் பச்சரிசி மற்றும் உளுத்தம் பருப்பு உள்ளதா? அப்படியானால் அவற்றை அரைத்து பொடி செய்து, அந்த பொடியைக் கொண்டு உளுந்தங்களி செய்து கொடுங்கள்.
மாலை வேளையில் உங்கள் வீட்டில் உள்ளோர் சாப்பிட ஸ்வீட் கேட்கிறார்களா? உங்கள் வீட்டில் ஸ்வீட் எதுவும் இல்லையா? வீட்டில் பச்சரிசி மற்றும் உளுத்தம் பருப்பு உள்ளதா? அப்படியானால் அவற்றை அரைத்து பொடி செய்து, அந்த பொடியைக் கொண்டு உளுந்தங்களி செய்து கொடுங்கள். இந்த உளுந்தங்களி உடலுக்கு மிகவும் நல்லது. இந்த உளுந்தங்களியில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. உடலில் இரத்தம் குறைவாக இருப்பவர்கள் இந்த உளுந்தங்களியை சாப்பிட, உடலில் இரத்தம் அதிகரிக்கும். இந்த களியை காலை வேளையில் கூட செய்து சாப்பிடலாம்.

உங்களுக்கு உளுந்தங்களி எப்படி எளிய முறையில் செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே உளுந்தங்களியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பச்சரிசி - 1 கப்
* உளுத்தம் பருப்பு - 3/4 கப்
* கருப்பட்டி - 1 1/2 கப்
* தண்ணீர் - 3 கப்
* நல்லெண்ணெய் - 1/4 கப்
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் பச்சரிசி, உளுத்தம் பருப்பு ஆகியவற்றை போட்டு நன்கு மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் கருப்பட்டியை ஒரு பாத்திரத்தில் தட்டிப் போட்டு, நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, கருப்பட்டியை கரைக்க வேண்டும். கருப்பட்டி கரைந்ததும், அடுப்பை அணைத்துவிட்டு இறக்கி, ஒரு வாணலியில் ஊற்ற வேண்டும்.
* பின்பு அந்த வாணலியை அடுப்பில் வைத்து, கொதிக்க வைக்க வேண்டும். வெல்லப்பாகு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் அரைத்து வைத்துள்ள மாவை மெதுவாக தூவி கட்டிகள் சேராதவாறு நன்கு கிளற வேண்டும்.
* அப்படி கிளறும் போது, களியை கெட்டியாகும் வரை மிதமான தீயில் கிளற வேண்டும். களி கெட்டியானதும், அதில் எண்ணெயை ஊற்றி கிளறி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பிறகு அந்த களியை எண்ணெய் பயன்படுத்தி சிறு உருண்டைகளாக உருட்டினால், சத்தான உளுந்தங்களி தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications