Latest Updates
-
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது
குடியரசு தினத்துக்கு உங்க வீட்டுல இந்த மூவர்ண தோசையை சுட்டு அசத்துங்க.. எப்படி செய்றதுன்னு பாருங்க..
Republic Day Tricolor Dosa Recipe In Tamil: இன்று குடியரசு தினம் என்பதால், உங்கள் வீட்டில் உள்ளோருக்கு தேசபக்தியை வெளிக்காட்டும் வகையிலும், வாழ்த்துக்களை தெரிவிக்கும் வகையிலும் ஒரு காலை உணவு செய்ய நினைத்தால், மூவர்ண தோசையை செய்து கொடுங்கள்.
இந்த மூவர்ண தோசைக்கு தேங்காய் சட்னி, சாம்பார் போன்றவை சிறந்த சைடு டிஷ்ஷாக இருக்கும். அதுவும் வீட்டில் குழந்தைகள் இருக்கும் போது, இம்மாதிரியான தோசையை செய்தால், குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு மூவர்ண தோசையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மூவர்ண தோசை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
இட்லி/தோசை மாவு - 3 கப்
ஆரஞ்சு நிறத்துக்கு..
* நன்கு கனிந்த பெரிய தக்காளி - 1
* காஷ்மீரி வரமிளகாய் - 2-3
பச்சை நிறத்துக்கு...
* கொரத்தமல்லி/புதினா - 1 கப்
* பச்சை மிளகாய் - 1
செய்முறை:
முவர்ண தோசை மாவை தயாரிக்கும் முறை:
* முதலில் மூன்று கிண்ணத்தில் தோசை மாவை தனித்தனியாக எடுத்து
வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு கிண்ணத்தை மட்டும் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஆரஞ்சு நிறத்திற்கு, ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில்
சிறிது எண்ணெய் ஊற்றி தக்காளி மற்றும் வரமிளகாயை சில நிமிடங்கள்
வதக்கி இறக்கி, குளிர வைத்து மிக்சர் ஜாரில் போட்டு, சிறிது நீரை
ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து, ஒரு கிண்ணத்தில் உள்ள மாவுடன்
சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு பச்சை நிறத்திற்கு, ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில்
சிறிது எண்ணெய் ஊற்றி, பச்சை மிளகாயைப் போட்டு 1 நிமிடம் வதக்கி, அதன்
பின் கொத்தமல்லி/புதினாவை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி இறக்கி குளிர
வைத்து, மிக்சர்ஜாரில் போட்டு அரைத்து, மற்றொரு கிண்ணத்தில் உள்ள
மாவுடன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இப்போது மூன்று வண்ண மாவும்
தயார்.
மூவர்ண தோசை சுடும்முறை:
* ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், முதலில் 1/4
கரண்டி ஆரஞ்சு நிற தோசை மாவை எடுத்து, அதை அரைவட்ட வடியில் பரப்ப
வேண்டும்.
* அதன் பின் 1/4 கரண்டி வெள்ளை நிற தோசை மாவை எடுத்து, நடுவே பரப்ப
வேண்டும்.
* அடுத்ததாக 1/4 கரண்டி பச்சை நிற தோசை மாவை மீண்டும் அரைவட்ட வடியில்
பரப்ப வேண்டும்.
* பிறகு தோசையைச் சுற்றி எண்ணெய் ஊற்றி வெந்ததும், திருப்பிப் போட்டு
1 நிமிடம் வேக வைத்து எடுத்தால், சுவையான மூவர்ண தோசை தயார்.
Image Courtesy: simpleindianrecipes



Click it and Unblock the Notifications









