Latest Updates
-
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்.. -
ஐயங்கார் ஸ்டைல் அப்பளக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப மூளையில் கட்டி இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் டாக்டர்! -
இந்த 5 ராசி பெண்கள் காதலில் துரோகம் செய்பவர்களாக இருப்பார்களாம் - உங்க காதலி ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க வாயை திறந்தாலே பிரச்சனையை சந்திப்பாங்க.. உஷார்! -
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ளவர்கள் சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவார்களாம் - உங்ககிட்ட இருக்கா? -
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்!
பிள்ளையார்பட்டி மோதகம்: விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்
இந்த வருட விநாயகர் சதுர்த்திக்கு வித்தியாசமாக படையல் செய்து படைக்க விரும்புகிறீர்களா? அப்படியெனில் பிள்ளையார்பட்டி மோதகம் செய்து படையுங்கள். இது விநாயகருக்கு மிகவும் பிடித்த ஓர் படையல். மேலும் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறும் இருக்கும்.
சரி, இப்போது அந்த பிள்ளையார்பட்டி மோதகத்தை எப்படி செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து செய்து படைத்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - 1 கப்
பாசிப்பருப்பு - 1/4 கப்
வெல்லம் - 3/4 கப்
நெய் - 1 டேபிள் ஸ்பூன் + சிறிது
தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - 2 மற்றும் 3/4 கப்
செய்முறை:
முதலில் பச்சரியை வாணலியில் போட்டு 3 நிமிடம் வறுத்து தனியாக வைத்துக் கொள்ளவும். பின் பாசிப்பருப்பை போட்டு, பொன்னிறமாக வறுத்து இறக்கி, மிக்ஸியில் அரிசி மற்றும் பாசிப்பருப்பை சேர்த்து பொடி செய்து கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் அரைத்து வைத்துள்ளதை போட்டு, 1 டீஸ்பூன் நெய் சேர்த்து 3 நிமிடம் கிளறி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு பாத்திரத்தில் 1 கப் தண்ணீர் ஊற்றி, வெல்லம் சேர்த்து அடுப்பில் வைத்து, வெல்லம் நன்கு கரைந்து பாகு போன்று வந்ததும், அதில் மீதமுள்ள நீரை ஊற்றி கொதிக்க விட வேண்டும்.
பிறகு அதில் வறுத்து வைத்துள்ள மாவை சேர்த்து கிளறி விட வேண்டும். தண்ணீர் முற்றிலும் வற்றி, சற்று கெட்டியானதும் சிறிது நெய் சேர்த்து மீண்டும் கிளறி விட வேண்டும்.
பின் அதில் தேங்காய் மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து கிளறி இறக்கி, குளிர வைக்க வேண்டும்.
அடுத்து கையில் சிறிது நெய் தடவி அந்த மாவை சிறு உருண்டைகளாகப் பிடித்து, இட்லி தட்டில் வைத்து, 10 நிமிடம் வேக வைத்து இறக்கினால், பிள்ளையார்பட்டி மோதகம் ரெடி!!!
Image Courtesy: sharmispassions



Click it and Unblock the Notifications