இன்று உகாதி... பாசிப்பருப்பு பாயாசம் சாப்டாச்சா?

By Mayura Akilan

Parupu Payasam
உகாதி பண்டிகை விருந்தில் பாசிப்பருப்பு பாயாசம் முக்கியமாக இடம்பெரும். பாசிப்பருப்பு புரதச் சத்து நிறைந்தது. இதனுடன் வெல்லம், நெய், முந்திரி, திராட்சை சேர்த்து செய்யப்படும் பாயாசம் சுவையானதாக இருப்பதோடு கூடுதல் சத்துக்களையும் கொடுக்கும். இது குழந்தைகளுக்கும் விருப்பமானது.

தேவையான பொருட்கள்

பாசிப்பருப்பு - 200 கிராம்
அச்சு வெல்லம் - 150 கிராம்
பால் – 200 மிலி
முந்திரி - 10
உலர் திராட்சை - 10
ஏலக்காய் - 2
தேங்காய் துருவல் – 1 கப்
நெய் – 4 ஸ்பூன்

பாயாசம் செய்முறை

வாணலியில் சிறிதளவு நெய் ஊற்றி பாசிப்பருப்பை பொன்நிறமாக வறுத்து எடுத்து குக்கரில் குழைய வேக விடவும். வெல்லத்தை தூள் செய்து, ஒரு கப் தண்ணீரில் கரைத்து, வடிகட்டி, வேகவைத்த பாசிப்பருப்புடன் சேர்க்கவும். பால் சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விடவும்.

நெய்யில் முந்திரி, உலர் திராட்சை எல்லாவற்றையும் வறுத்து நெய்யோடு சேர்த்து, கொதிக்கும் பாயசத்தில் கொட்டவும்.

ஏலக்காயை தூளாக்கி சேர்க்கவும். கடைசியில் தேங்காய் பூவை லேசாக நெய்யில் வறுத்து சேர்த்த பின்னர் பாயசத்தை இறக்கவும். சுவையான சத்தான பாசிப்பருப்பு பாயாசம் தயார்.

Story first published: Friday, March 23, 2012, 12:22 [IST]
Desktop Bottom Promotion