Latest Updates
-
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...!
சுவையான... இலை அடை(கொழுக்கட்டை)

மாவு செய்ய...
தேவையான பொருட்கள் :
அரிசி - 1/2 கப்
தண்ணீர் - 1 கப்
உப்பு - 1 சிட்டிகை
எண்ணெய் - 1 டீஸ்பூன்
செய்முறை :
முதலில் அரிசியை 5-6 மணிநேரம் ஊற வைத்து கொள்ளவும். பின் அதனை கழுவி கிரைண்டரில் போட்டு, 1 கப் தண்ணீரை மட்டு ஊற்றி சற்று கெட்டியாக, நைஸாக அரைத்துக் கொள்ளவும்.
பின் அரைத்த அந்த மாவை ஒரு வாணலியில் போட்டு, அதில் எண்ணெய் மற்றும் உப்பு சேர்த்து, தண்ணீர் வற்றும் வரை கிளறவும். பின்னர் தண்ணீர் முழுவதும் வற்றியதும், அதனை இறக்கி, சூடு ஆறியதும், கைகளால் ஒரு முறை கிளறவும். பின் ஒரு ஈரத்துணியால் அதனை மூடி வைக்கவும்.
உள்ளே நிரப்ப...
தேவையான பொருட்கள் :
துருவிய தேங்காய் - 1 கப்
வெல்லம் - 1 கப்
ஏலக்காய் தூள் - 1/4 டீஸ்பூன்
தண்ணீர் - 1/2 கப்
நெய் - 1 டீஸ்பூன்
செய்முறை :
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் 1/2 கப் தண்ணீரை விட்டு, வெல்லம் போட்டு, வெல்லம் கரைந்ததும், அதனை வடிகட்டி விட்டு, மறுபடியும், அந்த நீரை அடுப்பில் வைத்து, அதில் ஏலக்காய் தூள், நெய் மற்றும் துருவிய தேங்காய் போட்டு, தண்ணீர் சற்று வற்றும் வரை கிளறவும்.
பின்னர் பிசைந்து வைத்துள்ள அரிசி மாவை சிறு உருண்டைகளாக செய்து, அதனை வாழை இலையின் மீது வைத்து தட்டி, அதன் நடுவில் இந்த தேங்காய் கலவையை வைத்து, முனைகளை நன்கு மூடி, வாழை இலையால் அதனை மடித்து தனியாக ஒரு தட்டில் வைக்கவும்.
பிறகு ஒரு இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் உள்ள இட்லித் தட்டின் மீது, மடித்து வைத்திருக்கும் இலை அடையை வைக்கவும். பின் அதனை மூடி 5 நிமிடம் கழித்து, இறக்கவும்.
இப்போது சுவையான இலை அடை ரெடி!!!



Click it and Unblock the Notifications











