Latest Updates
-
சனி-சந்திர சேர்க்கை உருவாக்கும் விஷ யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
2 குடைமிளகாயும், 2 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த கிரேவியை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது?
சுவையான... இலை அடை(கொழுக்கட்டை)

மாவு செய்ய...
தேவையான பொருட்கள் :
அரிசி - 1/2 கப்
தண்ணீர் - 1 கப்
உப்பு - 1 சிட்டிகை
எண்ணெய் - 1 டீஸ்பூன்
செய்முறை :
முதலில் அரிசியை 5-6 மணிநேரம் ஊற வைத்து கொள்ளவும். பின் அதனை கழுவி கிரைண்டரில் போட்டு, 1 கப் தண்ணீரை மட்டு ஊற்றி சற்று கெட்டியாக, நைஸாக அரைத்துக் கொள்ளவும்.
பின் அரைத்த அந்த மாவை ஒரு வாணலியில் போட்டு, அதில் எண்ணெய் மற்றும் உப்பு சேர்த்து, தண்ணீர் வற்றும் வரை கிளறவும். பின்னர் தண்ணீர் முழுவதும் வற்றியதும், அதனை இறக்கி, சூடு ஆறியதும், கைகளால் ஒரு முறை கிளறவும். பின் ஒரு ஈரத்துணியால் அதனை மூடி வைக்கவும்.
உள்ளே நிரப்ப...
தேவையான பொருட்கள் :
துருவிய தேங்காய் - 1 கப்
வெல்லம் - 1 கப்
ஏலக்காய் தூள் - 1/4 டீஸ்பூன்
தண்ணீர் - 1/2 கப்
நெய் - 1 டீஸ்பூன்
செய்முறை :
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் 1/2 கப் தண்ணீரை விட்டு, வெல்லம் போட்டு, வெல்லம் கரைந்ததும், அதனை வடிகட்டி விட்டு, மறுபடியும், அந்த நீரை அடுப்பில் வைத்து, அதில் ஏலக்காய் தூள், நெய் மற்றும் துருவிய தேங்காய் போட்டு, தண்ணீர் சற்று வற்றும் வரை கிளறவும்.
பின்னர் பிசைந்து வைத்துள்ள அரிசி மாவை சிறு உருண்டைகளாக செய்து, அதனை வாழை இலையின் மீது வைத்து தட்டி, அதன் நடுவில் இந்த தேங்காய் கலவையை வைத்து, முனைகளை நன்கு மூடி, வாழை இலையால் அதனை மடித்து தனியாக ஒரு தட்டில் வைக்கவும்.
பிறகு ஒரு இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் உள்ள இட்லித் தட்டின் மீது, மடித்து வைத்திருக்கும் இலை அடையை வைக்கவும். பின் அதனை மூடி 5 நிமிடம் கழித்து, இறக்கவும்.
இப்போது சுவையான இலை அடை ரெடி!!!



Click it and Unblock the Notifications