Latest Updates
-
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது -
May Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்...
சுவையான... இலை அடை(கொழுக்கட்டை)

மாவு செய்ய...
தேவையான பொருட்கள் :
அரிசி - 1/2 கப்
தண்ணீர் - 1 கப்
உப்பு - 1 சிட்டிகை
எண்ணெய் - 1 டீஸ்பூன்
செய்முறை :
முதலில் அரிசியை 5-6 மணிநேரம் ஊற வைத்து கொள்ளவும். பின் அதனை கழுவி கிரைண்டரில் போட்டு, 1 கப் தண்ணீரை மட்டு ஊற்றி சற்று கெட்டியாக, நைஸாக அரைத்துக் கொள்ளவும்.
பின் அரைத்த அந்த மாவை ஒரு வாணலியில் போட்டு, அதில் எண்ணெய் மற்றும் உப்பு சேர்த்து, தண்ணீர் வற்றும் வரை கிளறவும். பின்னர் தண்ணீர் முழுவதும் வற்றியதும், அதனை இறக்கி, சூடு ஆறியதும், கைகளால் ஒரு முறை கிளறவும். பின் ஒரு ஈரத்துணியால் அதனை மூடி வைக்கவும்.
உள்ளே நிரப்ப...
தேவையான பொருட்கள் :
துருவிய தேங்காய் - 1 கப்
வெல்லம் - 1 கப்
ஏலக்காய் தூள் - 1/4 டீஸ்பூன்
தண்ணீர் - 1/2 கப்
நெய் - 1 டீஸ்பூன்
செய்முறை :
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் 1/2 கப் தண்ணீரை விட்டு, வெல்லம் போட்டு, வெல்லம் கரைந்ததும், அதனை வடிகட்டி விட்டு, மறுபடியும், அந்த நீரை அடுப்பில் வைத்து, அதில் ஏலக்காய் தூள், நெய் மற்றும் துருவிய தேங்காய் போட்டு, தண்ணீர் சற்று வற்றும் வரை கிளறவும்.
பின்னர் பிசைந்து வைத்துள்ள அரிசி மாவை சிறு உருண்டைகளாக செய்து, அதனை வாழை இலையின் மீது வைத்து தட்டி, அதன் நடுவில் இந்த தேங்காய் கலவையை வைத்து, முனைகளை நன்கு மூடி, வாழை இலையால் அதனை மடித்து தனியாக ஒரு தட்டில் வைக்கவும்.
பிறகு ஒரு இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் உள்ள இட்லித் தட்டின் மீது, மடித்து வைத்திருக்கும் இலை அடையை வைக்கவும். பின் அதனை மூடி 5 நிமிடம் கழித்து, இறக்கவும்.
இப்போது சுவையான இலை அடை ரெடி!!!



Click it and Unblock the Notifications