Latest Updates
-
வெந்தயக் கீரை பருப்பு கூட்டு - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
கோடை வெயிலில் வீடு சூடாக இருக்கா? இந்த செடிகளை வளர்த்தால் குளிர்ச்சியும் பணமும் தேடி வரும்! -
100% மருந்து மாத்திரையின்றி கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 'டயட் சார்ட்' ஃபாலோ பண்ணுங்க.. -
கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைக்கணுமா? இந்த வாஸ்து செடிகள் இருந்தா போதும், ஏசி தேவையில்லை! -
லட்சுமி நாராயண ராஜயோகம்: மே மாதத்தில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது! -
தக்காளியும், கொத்தமல்லியும் இருந்தா.. ஒருடைம் இந்த சைடு டிஷ் செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 27 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மோசமான நாள் காத்திருக்காம் -
செவ்வாய் சொந்த ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
அட்டகாசமான ஆந்திரா கத்திரிக்காய் தக்காளி சட்னி ரெசிபி - செஞ்சு பாருங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும் -
கோடைக்கால திருமணமா? வெயிலின் தாக்கத்தில் இருந்து விருந்தினர்களைக் காக்க இந்த 5 விஷயங்களைச் செய்ய மறக்காதீங்க!
ஆடி அமாவாசை ஸ்பெஷல்: பாசுந்தி
பாசுந்தி என்பது பாயாசம் போன்றது. இது மாலை வேளையில் சாமி கும்பிடும் போது, கடவுளுக்கு படைக்க ஏற்றது. அதிலும் இன்று ஆடி அமாவாசை அனைவரது வீட்டிலும் கடவுளை வணங்குவார்கள். அப்படி வணங்கும் போது மகாராஷ்டிராவில் பிரபலமான பாயாசம் போன்ற பாசுந்தியை செய்து படைக்கலாம்.
மேலும் பாசுந்தியானது குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் இருப்பதோடு, மிகவும் ஆரோக்கியமானதும் கூட. சரி, இப்போது அந்த பாசுந்தியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
பாசுமதி அரிசி - 1 கப்
பால் - 1/2 லிட்டர்
கண்டென்ஸ்டு மில்க் - 1/2 கப்
நெய் - 1 டேபிள் ஸ்பூன்
நறுக்கிய பாதாம், முந்திரி, பிஸ்தா, உலர் திராட்சை - தலா 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
சர்க்கரை - 8 டேபிள் ஸ்பூன்
குங்குமப்பூ - 1 சிட்டிகை
வெதுவெதுப்பான பால் - 1/4 கப்
செய்முறை:
முதலில் அரிசியை நீரில் 4-5 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின் அதனை நன்கு கழுவி, நீரை முற்றிலும் வடித்துவிட்டு, மிக்ஸியில் போட்டு கொரகொரவென்று அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். அதே சமயம் வெதுவெதுப்பான பாலில் குங்குமப்பூவை சேர்த்து ஊற வைக்க வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் 1/2 கப் தண்ணீர் ஊற்றி, அதில் அரைத்து வைத்துள்ள அரிசி மாவை சேர்த்து, 5 நிமிடம் நன்கு வேக வைக்க வேண்டும்.
பின்பு அதில் 1/2 லிட்டர் பால் சேர்த்து நன்கு கிளறி, பின் நெய் ஊற்றி கிளறி விட வேண்டும்.
அரிசியானது நன்கு வெந்ததும், அதில் சர்க்கரை சேர்த்து 1-2 நிமிடம் நன்கு கிளறி விட வேண்டும்.
பின் அதில் கண்டென்ஸ்டு மில்க் சேர்த்து கிளறி விட வேண்டும். ஒருவேளை கலவையானது நன்கு கெட்டியாக இருந்தால், அதில் 1-2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும்.
பிறகு அதில் வெதுவெதுப்பான பால் சேர்த்து நன்கு கிளறி இறக்கிக் கொள்ள வேண்டும்.
இறுதியில் ஒரு சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரி, பாதாம், பிஸ்தா, உலர் திராட்சை சேர்த்து பொன்னிறமாக வறுத்து, இறக்கி வைத்துள்ள கலவையில் சேர்த்து கிளறினால், பாசுந்தி ரெடி!!!



Click it and Unblock the Notifications