Latest Updates
-
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்..
ஆடி அமாவாசை ஸ்பெஷல்: பாசுந்தி
பாசுந்தி என்பது பாயாசம் போன்றது. இது மாலை வேளையில் சாமி கும்பிடும் போது, கடவுளுக்கு படைக்க ஏற்றது. அதிலும் இன்று ஆடி அமாவாசை அனைவரது வீட்டிலும் கடவுளை வணங்குவார்கள். அப்படி வணங்கும் போது மகாராஷ்டிராவில் பிரபலமான பாயாசம் போன்ற பாசுந்தியை செய்து படைக்கலாம்.
மேலும் பாசுந்தியானது குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் இருப்பதோடு, மிகவும் ஆரோக்கியமானதும் கூட. சரி, இப்போது அந்த பாசுந்தியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
பாசுமதி அரிசி - 1 கப்
பால் - 1/2 லிட்டர்
கண்டென்ஸ்டு மில்க் - 1/2 கப்
நெய் - 1 டேபிள் ஸ்பூன்
நறுக்கிய பாதாம், முந்திரி, பிஸ்தா, உலர் திராட்சை - தலா 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
சர்க்கரை - 8 டேபிள் ஸ்பூன்
குங்குமப்பூ - 1 சிட்டிகை
வெதுவெதுப்பான பால் - 1/4 கப்
செய்முறை:
முதலில் அரிசியை நீரில் 4-5 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின் அதனை நன்கு கழுவி, நீரை முற்றிலும் வடித்துவிட்டு, மிக்ஸியில் போட்டு கொரகொரவென்று அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். அதே சமயம் வெதுவெதுப்பான பாலில் குங்குமப்பூவை சேர்த்து ஊற வைக்க வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் 1/2 கப் தண்ணீர் ஊற்றி, அதில் அரைத்து வைத்துள்ள அரிசி மாவை சேர்த்து, 5 நிமிடம் நன்கு வேக வைக்க வேண்டும்.
பின்பு அதில் 1/2 லிட்டர் பால் சேர்த்து நன்கு கிளறி, பின் நெய் ஊற்றி கிளறி விட வேண்டும்.
அரிசியானது நன்கு வெந்ததும், அதில் சர்க்கரை சேர்த்து 1-2 நிமிடம் நன்கு கிளறி விட வேண்டும்.
பின் அதில் கண்டென்ஸ்டு மில்க் சேர்த்து கிளறி விட வேண்டும். ஒருவேளை கலவையானது நன்கு கெட்டியாக இருந்தால், அதில் 1-2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும்.
பிறகு அதில் வெதுவெதுப்பான பால் சேர்த்து நன்கு கிளறி இறக்கிக் கொள்ள வேண்டும்.
இறுதியில் ஒரு சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரி, பாதாம், பிஸ்தா, உலர் திராட்சை சேர்த்து பொன்னிறமாக வறுத்து, இறக்கி வைத்துள்ள கலவையில் சேர்த்து கிளறினால், பாசுந்தி ரெடி!!!



Click it and Unblock the Notifications











