Latest Updates
-
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்!
உருளைக்கிழங்கு அல்வா
மகா சிவராத்திரி வரப்போகிறது. அனைவரும் விரதம் இருப்பதற்கு தயாராக இருப்போம். ஆனால் சிவராத்திரி விரதமானது மற்ற விரதத்தைப் போன்று எதையும் சாப்பிடாமல் கடுமையாக இருக்க வேண்டும் என்பதில்லை. இந்த விரதத்தின் போது நாள் முழுவதும் சாப்பிடாமல், தூங்காமல் இருக்க வேண்டியிருப்பதால், நாள் முழுவதும் சக்தியுடன் இருப்பதற்கு ஒருசில உணவுகளை உட்கொள்ளலாம்.
அதிலும் வெங்காயம், பூண்டு போன்றவற்றை பயன்படுத்தாமல் ஒருவேளை சமைத்து சாப்பிடலாம். ஏன் இனிப்புக்களை கூட சமைத்து கடவுளுக்கு படைத்துவிட்டு சாப்பிடலாம். அந்த வகையில் சிவராத்திரிக்கு விரதம் இருப்பவர்கள் செய்து சாப்பிடும் உணவுகளில் ஒன்றாக உருளைக்கிழங்கு அல்வா உள்ளது. இது மிகவும் ஈஸியானதும் மற்றும் ஆரோக்கியமானதும் கூட.
சரி, இப்போது அந்த உருளைக்கிழங்கு அல்வாவை எப்படி செய்வதென்று பார்ப்போம்...

தேவையான பொருட்கள்:
வேக வைத்த உருளைக்கிழங்கு - 8-9
சர்க்கரை - 1/4 கப்
பாதாம் - 1 கையளவு
பிஸ்தா - 2-3
நெய் - 3 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் வேக வைத்துள்ள உருளைக்கிழங்கை நன்கு மசித்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், மசித்த உருளைக்கிழங்கை போட்டு நன்கு வதக்க வேண்டும்.
பின்பு தீயை குறைவில் வைத்து, உருளைக்கிழங்கு பொன்னிறமாகும் வரை நன்கு வதக்க வேண்டும்.
அப்படி வதக்கும் போது, நெய் குறைவாக இருந்தால், சற்று நெய்யை ஊற்றிக் கொள்ள வேண்டும்.
பின் அதில் சர்க்கரை சேர்த்து, சர்க்கரை கரையும் வரை நன்கு கிளறி விட்டு இறக்கினால் சுவையான உருளைக்கிழங்கு அல்வா ரெடி!!! இதன் மேல் பாதாம், பிஸ்தா போன்றவற்றைக் கொண்டு அலங்கரிக்க வேண்டும்.



Click it and Unblock the Notifications