Latest Updates
-
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ளவர்கள் சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவார்களாம் - உங்ககிட்ட இருக்கா? -
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்!
உருளைக்கிழங்கு அல்வா
மகா சிவராத்திரி வரப்போகிறது. அனைவரும் விரதம் இருப்பதற்கு தயாராக இருப்போம். ஆனால் சிவராத்திரி விரதமானது மற்ற விரதத்தைப் போன்று எதையும் சாப்பிடாமல் கடுமையாக இருக்க வேண்டும் என்பதில்லை. இந்த விரதத்தின் போது நாள் முழுவதும் சாப்பிடாமல், தூங்காமல் இருக்க வேண்டியிருப்பதால், நாள் முழுவதும் சக்தியுடன் இருப்பதற்கு ஒருசில உணவுகளை உட்கொள்ளலாம்.
அதிலும் வெங்காயம், பூண்டு போன்றவற்றை பயன்படுத்தாமல் ஒருவேளை சமைத்து சாப்பிடலாம். ஏன் இனிப்புக்களை கூட சமைத்து கடவுளுக்கு படைத்துவிட்டு சாப்பிடலாம். அந்த வகையில் சிவராத்திரிக்கு விரதம் இருப்பவர்கள் செய்து சாப்பிடும் உணவுகளில் ஒன்றாக உருளைக்கிழங்கு அல்வா உள்ளது. இது மிகவும் ஈஸியானதும் மற்றும் ஆரோக்கியமானதும் கூட.
சரி, இப்போது அந்த உருளைக்கிழங்கு அல்வாவை எப்படி செய்வதென்று பார்ப்போம்...

தேவையான பொருட்கள்:
வேக வைத்த உருளைக்கிழங்கு - 8-9
சர்க்கரை - 1/4 கப்
பாதாம் - 1 கையளவு
பிஸ்தா - 2-3
நெய் - 3 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் வேக வைத்துள்ள உருளைக்கிழங்கை நன்கு மசித்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், மசித்த உருளைக்கிழங்கை போட்டு நன்கு வதக்க வேண்டும்.
பின்பு தீயை குறைவில் வைத்து, உருளைக்கிழங்கு பொன்னிறமாகும் வரை நன்கு வதக்க வேண்டும்.
அப்படி வதக்கும் போது, நெய் குறைவாக இருந்தால், சற்று நெய்யை ஊற்றிக் கொள்ள வேண்டும்.
பின் அதில் சர்க்கரை சேர்த்து, சர்க்கரை கரையும் வரை நன்கு கிளறி விட்டு இறக்கினால் சுவையான உருளைக்கிழங்கு அல்வா ரெடி!!! இதன் மேல் பாதாம், பிஸ்தா போன்றவற்றைக் கொண்டு அலங்கரிக்க வேண்டும்.



Click it and Unblock the Notifications