Latest Updates
-
உருளைக்கிழங்கை ஒருதடவை இந்த மாதிரி கொங்குநாடு ஸ்டைலில் குருமா வைச்சு பாருங்க...டக்கரான சைடிஷா இருக்கும்...! -
அமெரிக்க-ஈரான் போரால் துபாயில் சரசரவென குறையும் தங்கம் விலை...இந்தியாவிலும் தங்கம் விலை குறையுமா? உண்மை என்ன? -
இந்த 4 ராசிக்காரங்க உயிரை கொடுத்தாவது குடும்பத்தை பாதுகாக்கும் ரியல் ஹீரோவாக இருப்பார்களாம்...உங்க ராசி என்ன? -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. தொப்பையும், உடல் எடையும் இருமடங்கு வேகத்துல குறையும்.. -
இன்றைய ராசிபலன் 07 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆரோக்கிய பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்காம்...! -
சனிப்பெயர்ச்சி 2026: இந்த 5 ராசிக்காரங்க ரொம்ப ரொம்ப கவனமாக இருக்கணுமாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
சுரைக்காயை இந்த மாதிரி பச்சடி செஞ்சு பாருங்க... இட்லி, தோசை, சாதம் எல்லாத்துக்குமே டக்கரான சைடிஷா இருக்கும்... -
'நிறங்களின் ராஜா' என்று அழைக்கப்படும் நிறம் எது தெரியுமா? உங்களுக்கு இந்த கலர் பிடிக்குமானு சொல்லுங்க...! -
தஞ்சாவூர் கல்யாண சாம்பார் ரெசிபி... இந்த மாதிரி சாம்பார் வைச்சு பாருங்க... வீட்ல எல்லாரும் ஊத்தி குடிப்பாங்க.. -
'சீனாவின் நோஸ்ட்ரடாமஸ்' கணிப்பின் படி அமெரிக்க-ஈரான் போரில் ஜெயிக்கப் போவது யார்? போர் இப்படித்தான் முடியுமாம்
உருளைக்கிழங்கு அல்வா
மகா சிவராத்திரி வரப்போகிறது. அனைவரும் விரதம் இருப்பதற்கு தயாராக இருப்போம். ஆனால் சிவராத்திரி விரதமானது மற்ற விரதத்தைப் போன்று எதையும் சாப்பிடாமல் கடுமையாக இருக்க வேண்டும் என்பதில்லை. இந்த விரதத்தின் போது நாள் முழுவதும் சாப்பிடாமல், தூங்காமல் இருக்க வேண்டியிருப்பதால், நாள் முழுவதும் சக்தியுடன் இருப்பதற்கு ஒருசில உணவுகளை உட்கொள்ளலாம்.
அதிலும் வெங்காயம், பூண்டு போன்றவற்றை பயன்படுத்தாமல் ஒருவேளை சமைத்து சாப்பிடலாம். ஏன் இனிப்புக்களை கூட சமைத்து கடவுளுக்கு படைத்துவிட்டு சாப்பிடலாம். அந்த வகையில் சிவராத்திரிக்கு விரதம் இருப்பவர்கள் செய்து சாப்பிடும் உணவுகளில் ஒன்றாக உருளைக்கிழங்கு அல்வா உள்ளது. இது மிகவும் ஈஸியானதும் மற்றும் ஆரோக்கியமானதும் கூட.
சரி, இப்போது அந்த உருளைக்கிழங்கு அல்வாவை எப்படி செய்வதென்று பார்ப்போம்...

தேவையான பொருட்கள்:
வேக வைத்த உருளைக்கிழங்கு - 8-9
சர்க்கரை - 1/4 கப்
பாதாம் - 1 கையளவு
பிஸ்தா - 2-3
நெய் - 3 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் வேக வைத்துள்ள உருளைக்கிழங்கை நன்கு மசித்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், மசித்த உருளைக்கிழங்கை போட்டு நன்கு வதக்க வேண்டும்.
பின்பு தீயை குறைவில் வைத்து, உருளைக்கிழங்கு பொன்னிறமாகும் வரை நன்கு வதக்க வேண்டும்.
அப்படி வதக்கும் போது, நெய் குறைவாக இருந்தால், சற்று நெய்யை ஊற்றிக் கொள்ள வேண்டும்.
பின் அதில் சர்க்கரை சேர்த்து, சர்க்கரை கரையும் வரை நன்கு கிளறி விட்டு இறக்கினால் சுவையான உருளைக்கிழங்கு அல்வா ரெடி!!! இதன் மேல் பாதாம், பிஸ்தா போன்றவற்றைக் கொண்டு அலங்கரிக்க வேண்டும்.



Click it and Unblock the Notifications











