Latest Updates
-
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...!
மைசூர் பருப்பு சூப்
குளிர்காலத்தில் மாலை வேளையில் நன்கு சூடாக ஏதேனும் சாப்பிட வேண்டுமென்று தோன்றும். அப்படி தோன்றும் போது பஜ்ஜி, போண்டா என்று எண்ணெயில் பொரித்து செய்யப்படும் ஸ்நாக்ஸ்களை சாப்பிடுவதற்கு பதிலாக, உடலுக்கு ஆரோக்கியத்தை வழங்கும் வகையில் சூப் செய்து சாப்பிடலாம்.
அதிலும் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தேங்காய் பால் சேர்த்து செய்யப்படும் மைசூர் பருப்பு சூப்பை செய்தால், அது இன்னும் வித்தியாசமான சுவையைத் தரும். சரி, இப்போது அந்த மைசூர் பருப்பு சூப்பை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
மைசூர் பருப்பு - 1 கப்
ஆலிவ் ஆயில் - 3 டேபிள் ஸ்பூன்
பூண்டு - 2-3 பற்கள் (நறுக்கியது)
வெங்காயம் - 1 கப் (நறுக்கியது)
மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
கேரட் - 1/2 கப் (நறுக்கியது)
பட்டாணி - 1/2 கப்
தக்காளி சாறு - 1/2 கப்
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன் (வேண்டுமானால்)
எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன்
தேங்காய் பால் - 1 கப்
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் ஆலிவ் ஆயில் ஊற்றி காய்ந்ததும், பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
பின் அதில் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து சிறிது நேரம் வதக்கி, கேரட், மைசூர் பருப்பு, பட்டாணி, தக்காளி சாறு, உப்பு, மிளகாய் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கிளறி, 6 கப் தண்ணீர் ஊற்றி, மூடி வைத்து, பருப்பு நன்கு மென்மையாக வேகும் வரை அடுப்பில் வைக்க வேண்டும்.
பருப்பானது நன்கு வெந்துவிட்டால், தேங்காய் பால் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கொதிக்க விட்டு இறக்கி, பிரட் சேர்த்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.



Click it and Unblock the Notifications











