Latest Updates
-
ஐயங்கார் ஸ்டைல் அப்பளக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப மூளையில் கட்டி இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் டாக்டர்! -
இந்த 5 ராசி பெண்கள் காதலில் துரோகம் செய்பவர்களாக இருப்பார்களாம் - உங்க காதலி ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க வாயை திறந்தாலே பிரச்சனையை சந்திப்பாங்க.. உஷார்! -
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ளவர்கள் சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவார்களாம் - உங்ககிட்ட இருக்கா? -
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க!
மைசூர் பருப்பு சூப்
குளிர்காலத்தில் மாலை வேளையில் நன்கு சூடாக ஏதேனும் சாப்பிட வேண்டுமென்று தோன்றும். அப்படி தோன்றும் போது பஜ்ஜி, போண்டா என்று எண்ணெயில் பொரித்து செய்யப்படும் ஸ்நாக்ஸ்களை சாப்பிடுவதற்கு பதிலாக, உடலுக்கு ஆரோக்கியத்தை வழங்கும் வகையில் சூப் செய்து சாப்பிடலாம்.
அதிலும் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தேங்காய் பால் சேர்த்து செய்யப்படும் மைசூர் பருப்பு சூப்பை செய்தால், அது இன்னும் வித்தியாசமான சுவையைத் தரும். சரி, இப்போது அந்த மைசூர் பருப்பு சூப்பை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
மைசூர் பருப்பு - 1 கப்
ஆலிவ் ஆயில் - 3 டேபிள் ஸ்பூன்
பூண்டு - 2-3 பற்கள் (நறுக்கியது)
வெங்காயம் - 1 கப் (நறுக்கியது)
மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
கேரட் - 1/2 கப் (நறுக்கியது)
பட்டாணி - 1/2 கப்
தக்காளி சாறு - 1/2 கப்
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன் (வேண்டுமானால்)
எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன்
தேங்காய் பால் - 1 கப்
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் ஆலிவ் ஆயில் ஊற்றி காய்ந்ததும், பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
பின் அதில் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து சிறிது நேரம் வதக்கி, கேரட், மைசூர் பருப்பு, பட்டாணி, தக்காளி சாறு, உப்பு, மிளகாய் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கிளறி, 6 கப் தண்ணீர் ஊற்றி, மூடி வைத்து, பருப்பு நன்கு மென்மையாக வேகும் வரை அடுப்பில் வைக்க வேண்டும்.
பருப்பானது நன்கு வெந்துவிட்டால், தேங்காய் பால் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கொதிக்க விட்டு இறக்கி, பிரட் சேர்த்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.



Click it and Unblock the Notifications