Latest Updates
-
3/4 கப் வேர்க்கடலையும், 3 தக்காளியும் இருந்தா.. இந்த சட்னியை செய்யுங்க.. 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 29 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு சிக்கல்கள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
சூரியன் சுக்கிரனின் நட்சத்திரத்திற்கு செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
உடுப்பி தேங்காய் கொத்தமல்லி சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, வேற லெவலில் இருக்கும் -
லிவ்-இன் உறவு முறிவு குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு இளைஞர்களுக்கு நிம்மதி! -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்..! -
Mothers day 2026: உலக அன்னையர் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது? அதற்குப்பின்னால் உள்ள வரலாறு என்ன தெரியுமா? -
லிவ்-இன் உறவில் பிரிவது குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு ஜோடிகளுக்கு நிம்மதி! -
வெறும் 4 பொருளை வெச்சு ஈஸியா மாம்பழ புட்டிங் செய்யலாம் தெரியுமா? எப்படி-ன்னு பாருங்க.. -
தங்கம் போல ஜொலிக்குற சருமம் வேண்டுமா? அப்ப மாம்பழத்தை வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க..
ஈஸியான உருளைக்கிழங்கு குர்குரே
மாலை வேளையில் உருளைக்கிழங்கை வைத்து பஜ்ஜி, போண்டா என்று செய்து சாப்பிட்டு போர் அடித்திருந்தால், இங்கு கொடுக்கப்பட்டுள்ள உருளைக்கிழங்கு குர்குரே ரெசிபியை செய்து பாருங்கள். இந்த ரெசிபியானது செய்வதற்கு எளிமையாக இருப்பதுடன், மிகவும் சுவையாகவும் இருக்கும்.
அதுமட்டுமின்றி, இங்கு இந்த ரெசிபியின் செய்முறை மற்றும் அதன் வீடியோவும் இணைக்கப்பட்டுள்ளது. அதைப் பார்த்து முயற்சி செய்து பாருங்கள்.

தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு - 1 கப் (வேக வைத்து மசித்தது)
புதினா - 1/2 கப் (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 1/2 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
சீரகப் பொடி - 1/2 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மைதா - 1/2 கப்
அவல் - 1/2 கப் (ஓரளவு பொடி செய்தது)
தண்ணீர் - 1/2 கப்
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு பௌலில் மசித்த உருளைக்கிழங்கு, புதினா, பச்சை மிளகாய், சீரகப் பொடி, உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
பின்னர் அதனை சிறு உருண்டைகளாக பிடித்து தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு மற்றொரு பௌலில் மைதா மற்றும் 1/2 கப் தண்ணீர் ஊற்றி கெட்டியாக கலந்து கொள்ள வேண்டும்.
அதே சமயம் ஒரு தட்டில் ஓன்றிரண்டாக பொடி செய்த அவலை வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
எண்ணெயானது சூடானதும், உருட்டி வைத்துள்ள உருளைக்கிழங்கை மைதாவில் நனைத்து, பின் அவலில் பிரட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
இதேப் போன்று அனைத்து உருண்டையையும் பொரித்து எடுத்தால், உருளைக்கிழங்கு குர்குரே ரெடி!!!
<center><img style="-webkit-user-select:none;border:0px;" border="0" width="100%" height="1" src="http://web.ventunotech.com/beacon/vtpixpc.gif?pid=2&pixelfrom=jp" /> <div id="vnVideoPlayerContent"></div> <script> var vtn_player_type="vp"; var ven_video_key="MTI2NzgzfHwyfHwxfHwxLDIsMQ=="; var ven_width="100%"; var ven_height="325"; </script> <script type="text/javascript" src="http://web.ventunotech.com/plugins/cntplayer/ventunoSmartPlayer.js"></script></center>



Click it and Unblock the Notifications