Latest Updates
-
கேரளா ஸ்டைல் பட்டாணி குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
இந்த பொருட்களில் ஒன்று உங்கள் பூஜையறையில் இருந்தாலும் உங்க வீட்டில் நிம்மதியும், அதிர்ஷ்டமும் இருக்காதாம் -
சௌசௌ வாங்குனா இப்படி கிரேவி செய்யுங்க, சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
எலிவால் மாதிரி இருக்கும் முடியை அடர்த்தியாக்கணுமா? அப்ப முட்டையை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
வாழும் நாஸ்ட்ராடமஸ் கணிப்பு படி 2026-ல் இந்த இடத்தில் ஆபத்தான போர் நடக்கப்போகுதாம் - எந்த நாடு போர் நடத்தப்போக -
சனி மங்கள யோகத்தால் செப்டம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பாங்க.. உஷார்.. -
செட்டிநாடு கத்திரிக்காய் உருளை கோசுமல்லி ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டக்கரான சைடிஷா இருக்கும் -
முட்டைக்கோஸை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
இந்த 4 ராசிக்காரர்கள் ஒரே நேரத்தில் பல வேலைகளை சரியாக செய்யும் திறமைசாலிகளாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
எச்சரிக்கை! உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப அசால்ட்டா இருக்காதீங்க..
ஈஸியான உருளைக்கிழங்கு குர்குரே
மாலை வேளையில் உருளைக்கிழங்கை வைத்து பஜ்ஜி, போண்டா என்று செய்து சாப்பிட்டு போர் அடித்திருந்தால், இங்கு கொடுக்கப்பட்டுள்ள உருளைக்கிழங்கு குர்குரே ரெசிபியை செய்து பாருங்கள். இந்த ரெசிபியானது செய்வதற்கு எளிமையாக இருப்பதுடன், மிகவும் சுவையாகவும் இருக்கும்.
அதுமட்டுமின்றி, இங்கு இந்த ரெசிபியின் செய்முறை மற்றும் அதன் வீடியோவும் இணைக்கப்பட்டுள்ளது. அதைப் பார்த்து முயற்சி செய்து பாருங்கள்.

தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு - 1 கப் (வேக வைத்து மசித்தது)
புதினா - 1/2 கப் (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 1/2 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
சீரகப் பொடி - 1/2 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மைதா - 1/2 கப்
அவல் - 1/2 கப் (ஓரளவு பொடி செய்தது)
தண்ணீர் - 1/2 கப்
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு பௌலில் மசித்த உருளைக்கிழங்கு, புதினா, பச்சை மிளகாய், சீரகப் பொடி, உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
பின்னர் அதனை சிறு உருண்டைகளாக பிடித்து தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு மற்றொரு பௌலில் மைதா மற்றும் 1/2 கப் தண்ணீர் ஊற்றி கெட்டியாக கலந்து கொள்ள வேண்டும்.
அதே சமயம் ஒரு தட்டில் ஓன்றிரண்டாக பொடி செய்த அவலை வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
எண்ணெயானது சூடானதும், உருட்டி வைத்துள்ள உருளைக்கிழங்கை மைதாவில் நனைத்து, பின் அவலில் பிரட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
இதேப் போன்று அனைத்து உருண்டையையும் பொரித்து எடுத்தால், உருளைக்கிழங்கு குர்குரே ரெடி!!!
<center><img style="-webkit-user-select:none;border:0px;" border="0" width="100%" height="1" src="http://web.ventunotech.com/beacon/vtpixpc.gif?pid=2&pixelfrom=jp" /> <div id="vnVideoPlayerContent"></div> <script> var vtn_player_type="vp"; var ven_video_key="MTI2NzgzfHwyfHwxfHwxLDIsMQ=="; var ven_width="100%"; var ven_height="325"; </script> <script type="text/javascript" src="http://web.ventunotech.com/plugins/cntplayer/ventunoSmartPlayer.js"></script></center>



Click it and Unblock the Notifications