Latest Updates
-
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்..
உருளைக்கிழங்கு பக்கோடா ரெசிபி
எத்தனை உருளைக்கிழங்கு ரெசிபிக்கள் இருந்தாலும், அனைத்தையும் சமைத்து சுவைத்து பார்க்கும் போது, ஒவ்வொரு ரெசிபியிலும் உருளைக்கிழங்கின் சுவையானது அதிகரித்து தான் காணப்படுகிறது. அப்பேற்பட்ட உருளைக்கிழங்கைக் கொண்டு செய்யக்கூடிய ஒருவகையான பக்கோடா ரெசிபியைத் தான் இங்கு கொடுத்துள்ளோம்.
இதுப்போன்று சுவையான வேறு ரெசிபி: முந்திரி பக்கோடா
இந்த ரெசிபியானது மிகவும் சுவையாக இருப்பதோடு, பள்ளி முடிந்து வரும் குழந்தைகள் நன்கு விரும்பி சாப்பிடுவார்கள். இப்போது அந்த உருளைக்கிழங்கு பக்கோடா ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு - 4-5
கடலை மாவு - 1 கப்
ஓமம் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
கருப்பு எள்ளு - 1 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1 கப் (பொரிப்பதற்கு)
தண்ணீர் - 1/2 கப்
நறுக்கிய வெந்தய கீரை - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் உருளைக்கிழங்கை நன்கு கழுவி, அதனை துண்டுகளாக்கி நீரில் ஊற வைக்க வேண்டும்.
அதே சமயம், ஒரு பாத்திரத்தில் கடலை மாவு மற்றும் தண்ணீர் ஊற்றி கட்டி சேராதவாறு நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
பின் அதில் ஓமம், மிளகாய் தூள், கருப்பு எள்ளு, உப்பு மற்றும் வெந்தயக்கீரை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், ஒரு துண்டு உருளைக்கிழங்கை எடுத்து, கடவை மாவு கலவையில் பிரட்டி, பின் எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
இதேப்போன்று அனைத்து உருளைக்கிழங்கையும் பொரித்து எடுத்தால், சுவையான உருளைக்கிழங்கு பக்கோடா ரெடி!!!



Click it and Unblock the Notifications











