Latest Updates
-
பாபா வாங்காவின் கணிப்பு படி 2026-ன் பிற்பகுதியில் உலகில் என்னென்ன சம்பவங்கள் நடக்கப்போகுது தெரியுமா? -
டெல்லியை ஆண்ட முதல் சுல்தான் யார்? அவர் எந்த வம்சத்தை சேர்ந்தவர் தெரியுமா? -
ஆந்திராவின் அட்டகாசமான வெஜ் புலாவ் ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க - தாறுமாறா இருக்கும் -
ராகு சொந்த நட்சத்திரத்திற்கு செல்வதால் இந்த 3 ராசிக்காரர்களின் பணக்கஷ்டம் முடிவுக்கு வரப்போகுதாம் -
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ள பெண் மனைவியாக கிடைத்த ஆண்கள் உலகிலேயே அதிர்ஷ்டசாலியாம் -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. ஒரே மாதத்தில் உடல் எடையில் நல்ல மாற்றத்தை பாப்பீங்க.. -
இன்றைய ராசிபலன் 03 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டக்கதவு திறக்குமாம் -
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்... -
புதனின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
சப்பாத்திக்கு அட்டகாசமாக இருக்கும் வேர்க்கடலை குடைமிளகாய் குருமா - இந்த ஸ்டைலில் செஞ்சு பாருங்க
உருளைக்கிழங்கு பக்கோடா ரெசிபி
எத்தனை உருளைக்கிழங்கு ரெசிபிக்கள் இருந்தாலும், அனைத்தையும் சமைத்து சுவைத்து பார்க்கும் போது, ஒவ்வொரு ரெசிபியிலும் உருளைக்கிழங்கின் சுவையானது அதிகரித்து தான் காணப்படுகிறது. அப்பேற்பட்ட உருளைக்கிழங்கைக் கொண்டு செய்யக்கூடிய ஒருவகையான பக்கோடா ரெசிபியைத் தான் இங்கு கொடுத்துள்ளோம்.
இதுப்போன்று சுவையான வேறு ரெசிபி: முந்திரி பக்கோடா
இந்த ரெசிபியானது மிகவும் சுவையாக இருப்பதோடு, பள்ளி முடிந்து வரும் குழந்தைகள் நன்கு விரும்பி சாப்பிடுவார்கள். இப்போது அந்த உருளைக்கிழங்கு பக்கோடா ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு - 4-5
கடலை மாவு - 1 கப்
ஓமம் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
கருப்பு எள்ளு - 1 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1 கப் (பொரிப்பதற்கு)
தண்ணீர் - 1/2 கப்
நறுக்கிய வெந்தய கீரை - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் உருளைக்கிழங்கை நன்கு கழுவி, அதனை துண்டுகளாக்கி நீரில் ஊற வைக்க வேண்டும்.
அதே சமயம், ஒரு பாத்திரத்தில் கடலை மாவு மற்றும் தண்ணீர் ஊற்றி கட்டி சேராதவாறு நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
பின் அதில் ஓமம், மிளகாய் தூள், கருப்பு எள்ளு, உப்பு மற்றும் வெந்தயக்கீரை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், ஒரு துண்டு உருளைக்கிழங்கை எடுத்து, கடவை மாவு கலவையில் பிரட்டி, பின் எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
இதேப்போன்று அனைத்து உருளைக்கிழங்கையும் பொரித்து எடுத்தால், சுவையான உருளைக்கிழங்கு பக்கோடா ரெடி!!!



Click it and Unblock the Notifications