Latest Updates
-
கேதுவின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் அடுத்த 8 மாதம் இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. -
வாஸ்துப்படி, ஃப்ரிட்ஜ்ஜின் மேல் இந்த பொருட்களை ஒருபோதும் வெக்காதீங்க.. இல்ல பிரச்சனை அதிகரிக்கும்.. -
Malai Ice Cream: கொளுத்துற வெயிலுக்கு வெறும் 4 பொருளை வெச்சு குளுகுளு-ன்னு இப்படி ஐஸ்க்ரீம் செய்யுங்க.. -
வெயிலால் உங்க கை கருப்பா மாறுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
குரு பகவானின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்! -
1 கப் தயிரும், 1 குடைமிளகாயும் இருந்தா.. மதியம் இப்படி குழம்பு வையுங்க.. சாதத்துக்கு அள்ளும்.. -
உங்களுக்கு உடம்பு சூடு பிடிக்கக்கூடாதா? அப்ப ஊட்டச்சத்து நிபுணர் சொல்ற இந்த 4 காய்கறிகளை அடிக்கடி சாப்பிடுங்க! -
1 வருடம் கழித்து மேஷத்தில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கபோறாங்க.! -
தேங்காய் சேர்க்காமலேயே சூப்பரா தேங்காய் சட்னி செய்யலாம் தெரியுமா? எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 20 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம்
பன்னீர் பக்கோடா: வீடியோ
மழைக்காலத்தில் மாலை வேளையில் டீ குடிக்கும் போது மொறுமொறுப்பாகவும், காரமாகவும் இருக்கும் ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டுமென்று தோன்றும். அப்படி தோன்றினால், உங்கள் வீட்டில் பன்னீர் இருந்தால், அதனைக் கொண்டு அருமையான சுவையில் பக்கோடா செய்து சாப்பிடுங்கள்.
இங்கு பன்னீரைக் கொண்டு எப்படி பக்கோடா செய்வதென்று தெளிவாக வீடியோவுடன் கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பார்த்து, அதன் படி செய்து மாலையில் சாப்பிட்டு, சந்தோஷமாக இருங்கள்.
<center><iframe width="100%" height="360" src="//www.youtube.com/embed/Ad-LfJ8ER18?feature=player_detailpage" frameborder="0" allowfullscreen></iframe></center>
தேவையான பொருட்கள்:
துருவிய பன்னீர் - 200 கிராம்
வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி - 1 இன்ச் (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை - சிறிது (நறுக்கியது)
கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு
அரிசி மாவு - 1 டேபிள் ஸ்பூன்
கடலை மாவு - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் ஒரு பௌலில் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி, பன்னீர் மற்றும் உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதில் கடலை மாவு மற்றும் அரிசி மாவி சேர்த்து பிரட்டிக் கொள்ள வேண்டும்.
பிறகு பொருட்கள் அனைத்தும் ஒன்று சேரும் அளவில் லேசாக தண்ணீர் தெளித்து, பிசைந்துக் கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிசைந்து வைத்துள்ள கலவையை எண்ணெயில் கொஞ்சம் கொஞ்சமாக போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுத்தால், பன்னீர் பக்கோடா ரெடி!!!



Click it and Unblock the Notifications











