Latest Updates
-
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்..
பன்னீர் பக்கோடா: வீடியோ
மழைக்காலத்தில் மாலை வேளையில் டீ குடிக்கும் போது மொறுமொறுப்பாகவும், காரமாகவும் இருக்கும் ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டுமென்று தோன்றும். அப்படி தோன்றினால், உங்கள் வீட்டில் பன்னீர் இருந்தால், அதனைக் கொண்டு அருமையான சுவையில் பக்கோடா செய்து சாப்பிடுங்கள்.
இங்கு பன்னீரைக் கொண்டு எப்படி பக்கோடா செய்வதென்று தெளிவாக வீடியோவுடன் கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பார்த்து, அதன் படி செய்து மாலையில் சாப்பிட்டு, சந்தோஷமாக இருங்கள்.
<center><iframe width="100%" height="360" src="//www.youtube.com/embed/Ad-LfJ8ER18?feature=player_detailpage" frameborder="0" allowfullscreen></iframe></center>
தேவையான பொருட்கள்:
துருவிய பன்னீர் - 200 கிராம்
வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி - 1 இன்ச் (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை - சிறிது (நறுக்கியது)
கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு
அரிசி மாவு - 1 டேபிள் ஸ்பூன்
கடலை மாவு - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் ஒரு பௌலில் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி, பன்னீர் மற்றும் உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதில் கடலை மாவு மற்றும் அரிசி மாவி சேர்த்து பிரட்டிக் கொள்ள வேண்டும்.
பிறகு பொருட்கள் அனைத்தும் ஒன்று சேரும் அளவில் லேசாக தண்ணீர் தெளித்து, பிசைந்துக் கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிசைந்து வைத்துள்ள கலவையை எண்ணெயில் கொஞ்சம் கொஞ்சமாக போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுத்தால், பன்னீர் பக்கோடா ரெடி!!!



Click it and Unblock the Notifications
