Latest Updates
-
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்...
மட்டூர் வடை
மட்டூர் வடை என்பது கர்நாடக ஸ்நாக்ஸ் ரெசிபியாகும். இந்த ரெசிபி செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருப்பதோடு, நன்கு மொறுமொறுவென்று இருக்கும். குறிப்பாக திடீரென்று வீட்டிற்கு விருந்தினர்கள் வந்தால், அப்போது அவர்களை அசத்தும் வகையில் எளிமையாக சீக்கிரம் செய்யக்கூடிய ஸ்நாக்ஸ் ரெசிபி.
இதனை மாலை வேளையில் டீ அல்லது காபி குடிக்கும் போது செய்து சாப்பிட்டால், வயிறும் நிறையும். சரி, இப்போது கர்நாடக ஸ்நாக்ஸ் ரெசிபியான மட்டூர் வடையை எப்படி செய்வதென்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:
மைதா - 1 கப்
ரவை - 1/2 கப்
அரிசி மாவு - 1/2 கப்
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி - 1 டீஸ்பூன் (துருவியது)
பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை - சிறிது
கொத்தமல்லி - சிறிது
தண்ணீர் - 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு பௌலில் மைதா, ரசை, அரிசி மாவு மற்றும் உப்பு சேர்த்து, சிறிது எண்ணெய் ஊற்றி கையால் நன்கு கிளறி விட வேண்டும்.
பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, இஞ்சி சேர்த்து கலந்து, பின் தண்ணீர் ஊற்றி வடை பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
பின்பு அதனை 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும். இதனால் வெங்காயத்தினால், கலவையில் சற்று தண்ணீரானது வெளியேற்றப்பட்டிருக்கும். இந்நிலையில் ஒருமுறை பிசைந்தால் மாவானது மென்மையாக இருக்கும்.
பிறகு அதனை சிறு சிறு உருண்டைகளாக எடுத்து, தட்டையாக தட்டி, ஒரு தட்டில் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தட்டி வைத்துள்ள வடைகளை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான மட்டூர் வடை ரெடி!!!



Click it and Unblock the Notifications











