Latest Updates
-
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ளவர்கள் சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவார்களாம் - உங்ககிட்ட இருக்கா? -
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்!
மட்டூர் வடை
மட்டூர் வடை என்பது கர்நாடக ஸ்நாக்ஸ் ரெசிபியாகும். இந்த ரெசிபி செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருப்பதோடு, நன்கு மொறுமொறுவென்று இருக்கும். குறிப்பாக திடீரென்று வீட்டிற்கு விருந்தினர்கள் வந்தால், அப்போது அவர்களை அசத்தும் வகையில் எளிமையாக சீக்கிரம் செய்யக்கூடிய ஸ்நாக்ஸ் ரெசிபி.
இதனை மாலை வேளையில் டீ அல்லது காபி குடிக்கும் போது செய்து சாப்பிட்டால், வயிறும் நிறையும். சரி, இப்போது கர்நாடக ஸ்நாக்ஸ் ரெசிபியான மட்டூர் வடையை எப்படி செய்வதென்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:
மைதா - 1 கப்
ரவை - 1/2 கப்
அரிசி மாவு - 1/2 கப்
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி - 1 டீஸ்பூன் (துருவியது)
பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை - சிறிது
கொத்தமல்லி - சிறிது
தண்ணீர் - 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு பௌலில் மைதா, ரசை, அரிசி மாவு மற்றும் உப்பு சேர்த்து, சிறிது எண்ணெய் ஊற்றி கையால் நன்கு கிளறி விட வேண்டும்.
பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, இஞ்சி சேர்த்து கலந்து, பின் தண்ணீர் ஊற்றி வடை பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
பின்பு அதனை 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும். இதனால் வெங்காயத்தினால், கலவையில் சற்று தண்ணீரானது வெளியேற்றப்பட்டிருக்கும். இந்நிலையில் ஒருமுறை பிசைந்தால் மாவானது மென்மையாக இருக்கும்.
பிறகு அதனை சிறு சிறு உருண்டைகளாக எடுத்து, தட்டையாக தட்டி, ஒரு தட்டில் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தட்டி வைத்துள்ள வடைகளை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான மட்டூர் வடை ரெடி!!!



Click it and Unblock the Notifications