Latest Updates
-
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப குடல் புற்றுநோய் இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
ஆங்கிலேயர்களுக்கே கடன் கொடுத்து இந்தியாவில் முதன் முதலாக கார் வாங்கிய பணக்கார வியாபாரி யார் தெரியுமா? -
மீன ராசியில் அஸ்தமனமாகும் சனி பகவான்: மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்...
சேமியா உப்புமாவை ஒருடைம் இந்த மாதிரி செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க...
Semiya Upma Recipe In Tamil: உப்புமா என்றாலே உங்கள் வீட்டில் உள்ளோர் தலைதெறிக்க ஓடுவார்களா? அதற்கு நீங்கள் செய்யும் பக்குவம் ஒரு காரணமாக இருக்கலாம். ஆம், நல்ல பக்குவத்தில் உப்புமா செய்தால், அதுவும் சேமியாவைக் கொண்டு உப்புமா செய்தால், பிடிக்காதவர்கள் கூட விரும்பி சாப்பிடுவார்கள்.
இன்று உங்கள் வீட்டில் உப்புமா செய்ய நினைத்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள பக்குவத்தில் உப்புமாவை செய்யுங்கள். இதனால் நிச்சயம் அனைவரும் சாப்பிடுவார்கள். முக்கியமாக இதில் வேர்க்கடலை, முந்திரி எல்லாம் சேர்க்கும் போது குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு நல்ல சுவையான சேமியா உப்புமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சேமியா உப்புமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சேமியா - 1 கப்
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்
* வேர்க்கடலை - 1 டேபிள் ஸ்பூன்
* முந்திரி - 1 டேபிள் ஸ்பூன்
* இஞ்சி - 1 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 4
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* பீன்ஸ் - 4 (பொடியாக நறுக்கியது)
* பச்சை பட்டாணி - 50 கிராம்
* கேரட் - 2 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - தேவையான அளவு
* தண்ணீர் - 1/4 டம்ளர்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* தண்ணீர் - 3/4 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, வேர்க்கடலை,
முந்திரி ஆகியவற்றை சேர்த்து நன்கு வறுக்க வேண்டும்.
* பின் அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, கண்ணாடி பதத்திற்கு
வரும் வரை வதக்க வேண்டும்.
* பின்பு அதில் நறுக்கிய தக்காளி, பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து
வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் கேரட், பீன்ஸ், பச்சை பட்டாணி ஆகியவற்றை சேர்த்து
வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் சுவைக்கேற்ப உப்பு மற்றும் 3/4 கப் நீரை ஊற்றி நன்கு
கொதிக்க வைக்க வேண்டும்.
* பின்பு அந்நீரில் சேமியாவை சேர்த்து 15 நிமிடம் மிதமான தீயில்
வைத்து கிளறி, நீர் வற்றி நன்கு வெந்ததும் இறக்கி, கொத்தமல்லியைத்
தூவினால் , சுவையான சேமியா உப்புமா தயார்.



Click it and Unblock the Notifications






