Latest Updates
-
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்! -
வாஸ்து படி இந்த தவறுகள் உங்கள் வீட்டில் இருந்தால் ராகுவின் சாபம் உங்களை பாடாய்படுத்துமாம் - ஜாக்கிரதை -
உங்க கழுத்து கருப்பா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க... -
பட்டாணி மசாலா சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, பிரியாணி மாதிரியே இருக்கும் -
சனி பகவான் உதயமாகியிருப்பதால் இன்று முதல் இந்த 5 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருந்தால் உங்க உடலில் நீரின் அளவு ஆபத்தான கட்டத்திற்கு சென்றுவிட்டதாம் - ஜாக்கிரதை -
கோடை வெயிலில் வீடு அனல் பறக்குதா? இந்த வாஸ்து செடிகள் இருந்தா போதும்… குளிர்ச்சியும் அதிர்ஷ்டமும் தேடி வரும்!
1 கப் சேமியா இருந்தா.. காலையில் இந்த டிபனை செய்யுங்க.. எல்லாரும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க...
Semiya Adai Recipe In Tamil: தினமும் காலையில் ஒரே மாதிரி இட்லி, தோசை சாப்பிட்டு போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான காலை டிபனை செய்து சாப்பிட நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் சேமியா உள்ளதா? அப்படியானால் அந்த சேமியாவைக் கொண்டு உப்புமா செய்யாமல், அடை செய்து சாப்பிடுங்கள்.
இந்த அடை வழக்கமாக சாப்பிடும் அடையை விட வித்தியாசமான சுவையில், அதே வேளையில் விரும்பி சாப்பிடக்கூடியவாறு மொறுமொறுவென்றும் இருக்கும். இந்த அடைக்கு தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, கார சட்னி போன்றவை அற்புதமான சைடு டிஷ்ஷாக இருக்கும். முக்கியமாக செய்வதற்கு இது சுலபமாக இருக்கும்.

உங்களுக்கு சேமியான அடையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சேமியா அடை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* வறுத்த சேமியா - 1 கப்
* சுடுநீர் - தேவையான அளவு
* அரிசி மாவு - 1 கப்
* ரவை - 1/4 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* சுரைக்காய் - 1/2 கப் (துருவியது)
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கேரட் - 1 (துருவியது)
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி - சிறிய துண்டு (துருவியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து (பொடியாக நறுக்கியது)
* சீரகம் - 1 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
* தண்ணீர் - சிறிது
* எண்ணெய் - தேவையான அளவு
* கடுகு - சிறிது
* வெள்ளை எள்ளு - சிறிது
* நெய் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் வறுத்த சேமியாவை ஒரு பாத்திரத்தில் எடுத்து, அதில்
கொதிக்கும் நீரை ஊற்றி, மூடி வைத்து 15 நிமிடம் ஊற வைக்க
வேண்டும்.
* 15 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து, அதில் உள்ள அதிகப்படியான நீரை
வடிகட்டிவிட்டு குளிர வைக்க வேண்டும்.
* பின்பு ஒரு பாத்திரத்தில் வேக வைத்த சேமியாவை எடுத்து, அத்துடன்
அரிசி மாவு, ரவை மற்றும் சுவைக்கேற்ப உப்பை சேர்க்க வேண்டும்.
* அதன் பின் அதில் துருவி வைத்துள்ள சுரைக்காய் மற்றும் கேரட்டை
சேர்த்து, அத்துடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய்,
கறிவேப்பிலை மற்றும் துருவிய இஞ்சி ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.
* பிறகு அதில் சீரகம், பெருங்காயத் தூள், மிளகுத் தூள் சேர்த்து நன்கு
கிளறி விட வேண்டும்.
* பின்னர் அதில் கொஞ்சம் கொஞ்சமாக நீரை ஊற்றி நன்கு கலந்து, மூடி
வைத்து 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். முக்கியமாக அதிகமாக
நீரை ஊற்றி விட வேண்டாம். அதேப் போல் மிகவும் கெட்டியாகவும் கலந்து
கொள்ள வேண்டாம். மிதமான அளவில் கலந்து கொள்ளுங்கள்.
* இறுதியாக ஒரு தவாவை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், சிறிது கடுகு, வெள்ளை எள்ளு, கறிவேப்பிலை சேர்த்து
தாளித்து, கலந்து வைத்துள்ள கலவையை ஒரு கரண்டி ஊற்றி பரப்பி, மூடி
வைத்து மிதமான தீயில் வைத்து 2-3 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* பின் மூடியைத் திறந்து, சிறிது நெய்யை தடவி திருப்பிப் போட்டு,
பொன்னிறமாக முன்னும் பின்னும் வேக வைத்து எடுத்தால், சுவையான சேமியா
அடை தயார்.



Click it and Unblock the Notifications











