Latest Updates
-
உங்க கழுத்து கருப்பா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க... -
பட்டாணி மசாலா சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, பிரியாணி மாதிரியே இருக்கும் -
சனி பகவான் உதயமாகியிருப்பதால் இன்று முதல் இந்த 5 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருந்தால் உங்க உடலில் நீரின் அளவு ஆபத்தான கட்டத்திற்கு சென்றுவிட்டதாம் - ஜாக்கிரதை -
கோடை வெயிலில் வீடு அனல் பறக்குதா? இந்த வாஸ்து செடிகள் இருந்தா போதும்… குளிர்ச்சியும் அதிர்ஷ்டமும் தேடி வரும்! -
வாஸ்துப்படி மணி பிளாண்ட் வைக்கும் திசை இதுவா? பணவரவு தடையின்றி கொழிக்க இதை உடனே மாற்றுங்க! -
கசப்பில்லாத பொன்னாங்கண்ணி கீரை கூட்டு - 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு சாப்பிடுங்க.. -
மே மாதத்தில் உருவாகும் கப்பார் யோகத்தால் பெரிய ஆபத்துகளையும், நஷ்டத்தையும் சந்திக்கப்போகும் 3 ராசிகள் -
வெறும் 5 ரூபாயில் கிடைக்கும் இந்த பொருள் கோடையில் சந்திக்கும் பாதி பிரச்சனையை தடுக்குமாம் - கூறும் டாக்டர்! -
அடிச்சது ஜாக்பாட் - தென்னிந்தியாவின் இந்த மாநிலத்தில் மிகப்பெரிய தங்கச் சுரங்கம் கிடைத்திருக்காம்
எலும்பை வலுவாக்கும் கருப்பு உளுந்து அடை - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. செமயா இருக்கும்..
Black Urad Dal Adai Recipe In Tamil: உங்களுக்கு இடுப்பு வலி, மூட்டு வலி போன்ற பிரச்சனைகள் உள்ளதா? தினமும் இந்த வலிகள் உங்களை பாடாய் படுத்துகிறதா? அப்படியானால் உங்கள் உணவில் கருப்பு உளுத்தம் பருப்பை அதிகமாக சேர்த்து வாருங்கள். அதுவும் கருப்பு உளுத்தம் பருப்பைக் கொண்டு கஞ்சியாக செய்து குடிக்க பிடிக்காவிட்டால், அதைக் கொண்டு அடை செய்து சாப்பிடுங்கள்.
இப்படி அடை செய்யும் போது, அது சாப்பிட ருசியாக இருக்கும். அதுவும் இந்த அடைக்கு தேங்காய் சட்னி சரியான காம்பினேஷனாக இருக்கும். ஒருமுறை இந்த கருப்பு உளுந்து அடையை செய்து சாப்பிட்டால், பின் அடிக்கடி செய்து சாப்பிடுவீர்கள். குறிப்பாக இது உடல் எடையைக் குறைக்க நினைப்போருக்கு ஏற்ற காலை டிபனும் கூட.

உங்களுக்கு கருப்பு உளுந்து அடையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கருப்பு உளுந்து அடை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கருப்பு உளுத்தம் பருப்பு - 1 கப் அல்லது 250 கிராம்
* பச்சரிசி - 1 டேபிள் ஸ்பூன்
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் கருப்பு உளுத்தம் பருப்பை எடுத்து,
அத்துடன் பச்சரிசியை சேர்த்து நீரில் 2 முறை நன்கு கழுவிக் கொள்ள
வேண்டும்.
* பின் அதில் சுடுநீரை ஊற்றி, குறைந்தது 2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள
வேண்டும்.
* உளுத்தம் பருப்பு நன்கு ஊறியதும், அதை மிக்சர் ஜாரில் போட்டு, லேசாக
நீரை தெளித்து, கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு பாத்திரத்தில் அரைத்ததை எடுத்து, அத்துடன் பொடியாக
நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம், கறிவேப்பிலை, சீரகம், பெருங்காயத்
தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கைகளால் நன்கு பிசைந்து விட
வேண்டும்.
* பிறகு ஒரு பாலிதீன் கவர் அல்லது வாழை இலையை எடுத்து, அதில் எண்ணெய்
தடவி, பிசைந்து வைத்துள்ள மாவை கொஞ்சம் எடுத்து உருட்டி வைத்து, அடை
போன்று தட்டையாக தட்டிக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், அதில்
தேங்காய் எண்ணெய் ஊற்றி, தட்டி வைத்துள்ளதை சேர்த்து, முன்னும்,
பின்னும் பொன்னிறமாக வேக வைத்து எடுத்தால், சுவையான உளுத்தம் பருப்பு
அடை தயார்.



Click it and Unblock the Notifications











