Latest Updates
-
ஆகஸ்ட் 25-ல் சுக்கிரன் சித்திரை நட்சத்திரத்திற்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
கேது-சூரிய சேர்க்கையால் அடுத்த 24 நாட்கள் இந்த 3 ராசிக்கு வாழ்க்கை நரகமா இருக்கும்.. -
மணத்தக்காளி கீரை கடையல் ரெசிபி - கீரையை இப்படி செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
இதுல உங்களுக்கு பிடிச்ச பழம் என்னன்னு சொல்லுங்க.. உங்களோட பலம் என்னன்னு சொல்றோம்.. -
ஒரு மணி நேரம் ஏன் 60 நிமிடங்களாக பிரிக்கப்பட்டுள்ளது? 100 நிமிடமாக என் பிரிக்கப்படவில்லை தெரியுமா? -
யாரும் பேசாத குடும்ப நல்வாழ்வு போக்கு: நிதித் தயார்நிலை -
September Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. செப்டம்பர் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
செப்டம்பர் மாதத்தில் பல கஷ்டங்களை அனுபவிக்கப்போகும் 3 துரதிர்ஷ்டமான ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கோவை ஸ்பெஷல் உப்பு பருப்பு - சிம்பிளா 10 நிமிஷத்துல எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
1 கப் பச்சரிசியும், வெல்லமும் இருந்தா இந்த செட்டிநாடு கந்தர் அப்பத்தை செஞ்சு பாருங்க - சூப்பரா இருக்கும்
அடுத்தமுறை தோசையை இப்படி சுட்டு கொடுங்க.. வீட்டுல இருக்குறவங்க கணக்கே இல்லாம சாப்பிடுவாங்க..
Rottukadai Poondu Kara Dosa Recipe In Tamil: இன்று காலை உங்கள் வீட்டில் தோசை தான் சுடப்போகிறீர்களா? எப்போதும் வெறும் தோசையை சுட்டுக் கொடுத்தால், நிச்சயம் உங்கள் வீட்டில் உள்ளோர் ஒரு நாள் தோசையை வெறுத்துவிடுவார்கள். இதைத் தவிர்க்க வேண்டுமானால், அவ்வப்போது ஸ்பெஷல் தோசையை செய்து கொடுங்கள்.
அதுவும் இன்று ரோட்டுக்கடை பூண்டு கார தோசை செய்யுங்கள். இந்த தோசைக்கு பூண்டு கார சட்னியை அரைத்து, தோசையின் மேல் தடவ வேண்டும். அத்துடன் தேங்காய் சட்னியை சைடு டிஷ்ஷாக செய்தால் இன்னும் அட்டகாசமாக இருக்கும்.

உங்களுக்கு ரோட்டுக்கடை பூண்டு கார தோசையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பூண்டு கார தோசை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
பூண்டு கார சட்னிக்கு...
* வரமிளகாய் - 8
* பூண்டு - 10 பல்
* புளி - 1 சிறிய நெல்லிக்காய் அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
* நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
தோசைக்கு...
* தோசை மாவு - தேவையான அளவு
* நெய் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் வரமிளகாயையும், புளியையும் சுடுநீரில் 30 நிமிடம் ஊற
வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன்
நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், பூண்டு பற்களை சேர்த்து பொன்னிறமாக
வதக்கி தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் வரமிளகாய், புளி, பூண்டு, சுவைக்கேற்ப உப்பு
சேர்த்து நன்கு மென்மையாக அரைத்து, ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்துக்
கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், அரைத்த சட்னியை சேர்த்து 2 நிமிடம் கிளறி
இறக்கிக் கொள்ள வேண்டும்.
* பிறகு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், தோசையை
சுட்டு, அதன் மேல் சிறிது நெய்யை தடவி, பின் அரைத்து வைத்துள்ள
சட்னியை தோசையின் மேல் சிறிது வைத்து தடவி விட்டு, தோசை சற்று
பொன்னிறமானதும், தோசையை மடித்து பரிமாறினால், சுவையான ரோட்டுக்கடை
பூண்டு கார தோசை தயார்.
Image Courtesy: Apoorvaa's Nalabagam



Click it and Unblock the Notifications