Latest Updates
-
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்..
அடுத்தமுறை தோசையை இப்படி சுட்டு கொடுங்க.. வீட்டுல இருக்குறவங்க கணக்கே இல்லாம சாப்பிடுவாங்க..
Rottukadai Poondu Kara Dosa Recipe In Tamil: இன்று காலை உங்கள் வீட்டில் தோசை தான் சுடப்போகிறீர்களா? எப்போதும் வெறும் தோசையை சுட்டுக் கொடுத்தால், நிச்சயம் உங்கள் வீட்டில் உள்ளோர் ஒரு நாள் தோசையை வெறுத்துவிடுவார்கள். இதைத் தவிர்க்க வேண்டுமானால், அவ்வப்போது ஸ்பெஷல் தோசையை செய்து கொடுங்கள்.
அதுவும் இன்று ரோட்டுக்கடை பூண்டு கார தோசை செய்யுங்கள். இந்த தோசைக்கு பூண்டு கார சட்னியை அரைத்து, தோசையின் மேல் தடவ வேண்டும். அத்துடன் தேங்காய் சட்னியை சைடு டிஷ்ஷாக செய்தால் இன்னும் அட்டகாசமாக இருக்கும்.

உங்களுக்கு ரோட்டுக்கடை பூண்டு கார தோசையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பூண்டு கார தோசை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
பூண்டு கார சட்னிக்கு...
* வரமிளகாய் - 8
* பூண்டு - 10 பல்
* புளி - 1 சிறிய நெல்லிக்காய் அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
* நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
தோசைக்கு...
* தோசை மாவு - தேவையான அளவு
* நெய் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் வரமிளகாயையும், புளியையும் சுடுநீரில் 30 நிமிடம் ஊற
வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன்
நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், பூண்டு பற்களை சேர்த்து பொன்னிறமாக
வதக்கி தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் வரமிளகாய், புளி, பூண்டு, சுவைக்கேற்ப உப்பு
சேர்த்து நன்கு மென்மையாக அரைத்து, ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்துக்
கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், அரைத்த சட்னியை சேர்த்து 2 நிமிடம் கிளறி
இறக்கிக் கொள்ள வேண்டும்.
* பிறகு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், தோசையை
சுட்டு, அதன் மேல் சிறிது நெய்யை தடவி, பின் அரைத்து வைத்துள்ள
சட்னியை தோசையின் மேல் சிறிது வைத்து தடவி விட்டு, தோசை சற்று
பொன்னிறமானதும், தோசையை மடித்து பரிமாறினால், சுவையான ரோட்டுக்கடை
பூண்டு கார தோசை தயார்.
Image Courtesy: Apoorvaa's Nalabagam



Click it and Unblock the Notifications