Latest Updates
-
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்!
அடுத்தமுறை தோசையை இப்படி சுட்டு கொடுங்க.. வீட்டுல இருக்குறவங்க கணக்கே இல்லாம சாப்பிடுவாங்க..
Rottukadai Poondu Kara Dosa Recipe In Tamil: இன்று காலை உங்கள் வீட்டில் தோசை தான் சுடப்போகிறீர்களா? எப்போதும் வெறும் தோசையை சுட்டுக் கொடுத்தால், நிச்சயம் உங்கள் வீட்டில் உள்ளோர் ஒரு நாள் தோசையை வெறுத்துவிடுவார்கள். இதைத் தவிர்க்க வேண்டுமானால், அவ்வப்போது ஸ்பெஷல் தோசையை செய்து கொடுங்கள்.
அதுவும் இன்று ரோட்டுக்கடை பூண்டு கார தோசை செய்யுங்கள். இந்த தோசைக்கு பூண்டு கார சட்னியை அரைத்து, தோசையின் மேல் தடவ வேண்டும். அத்துடன் தேங்காய் சட்னியை சைடு டிஷ்ஷாக செய்தால் இன்னும் அட்டகாசமாக இருக்கும்.

உங்களுக்கு ரோட்டுக்கடை பூண்டு கார தோசையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பூண்டு கார தோசை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
பூண்டு கார சட்னிக்கு...
* வரமிளகாய் - 8
* பூண்டு - 10 பல்
* புளி - 1 சிறிய நெல்லிக்காய் அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
* நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
தோசைக்கு...
* தோசை மாவு - தேவையான அளவு
* நெய் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் வரமிளகாயையும், புளியையும் சுடுநீரில் 30 நிமிடம் ஊற
வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன்
நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், பூண்டு பற்களை சேர்த்து பொன்னிறமாக
வதக்கி தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் வரமிளகாய், புளி, பூண்டு, சுவைக்கேற்ப உப்பு
சேர்த்து நன்கு மென்மையாக அரைத்து, ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்துக்
கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், அரைத்த சட்னியை சேர்த்து 2 நிமிடம் கிளறி
இறக்கிக் கொள்ள வேண்டும்.
* பிறகு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், தோசையை
சுட்டு, அதன் மேல் சிறிது நெய்யை தடவி, பின் அரைத்து வைத்துள்ள
சட்னியை தோசையின் மேல் சிறிது வைத்து தடவி விட்டு, தோசை சற்று
பொன்னிறமானதும், தோசையை மடித்து பரிமாறினால், சுவையான ரோட்டுக்கடை
பூண்டு கார தோசை தயார்.
Image Courtesy: Apoorvaa's Nalabagam



Click it and Unblock the Notifications









