Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
அடுத்தமுறை தோசையை இப்படி சுட்டு கொடுங்க.. வீட்டுல இருக்குறவங்க கணக்கே இல்லாம சாப்பிடுவாங்க..
Rottukadai Poondu Kara Dosa Recipe In Tamil: இன்று காலை உங்கள் வீட்டில் தோசை தான் சுடப்போகிறீர்களா? எப்போதும் வெறும் தோசையை சுட்டுக் கொடுத்தால், நிச்சயம் உங்கள் வீட்டில் உள்ளோர் ஒரு நாள் தோசையை வெறுத்துவிடுவார்கள். இதைத் தவிர்க்க வேண்டுமானால், அவ்வப்போது ஸ்பெஷல் தோசையை செய்து கொடுங்கள்.
அதுவும் இன்று ரோட்டுக்கடை பூண்டு கார தோசை செய்யுங்கள். இந்த தோசைக்கு பூண்டு கார சட்னியை அரைத்து, தோசையின் மேல் தடவ வேண்டும். அத்துடன் தேங்காய் சட்னியை சைடு டிஷ்ஷாக செய்தால் இன்னும் அட்டகாசமாக இருக்கும்.

உங்களுக்கு ரோட்டுக்கடை பூண்டு கார தோசையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பூண்டு கார தோசை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
பூண்டு கார சட்னிக்கு...
* வரமிளகாய் - 8
* பூண்டு - 10 பல்
* புளி - 1 சிறிய நெல்லிக்காய் அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
* நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
தோசைக்கு...
* தோசை மாவு - தேவையான அளவு
* நெய் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் வரமிளகாயையும், புளியையும் சுடுநீரில் 30 நிமிடம் ஊற
வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன்
நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், பூண்டு பற்களை சேர்த்து பொன்னிறமாக
வதக்கி தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் வரமிளகாய், புளி, பூண்டு, சுவைக்கேற்ப உப்பு
சேர்த்து நன்கு மென்மையாக அரைத்து, ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்துக்
கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், அரைத்த சட்னியை சேர்த்து 2 நிமிடம் கிளறி
இறக்கிக் கொள்ள வேண்டும்.
* பிறகு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், தோசையை
சுட்டு, அதன் மேல் சிறிது நெய்யை தடவி, பின் அரைத்து வைத்துள்ள
சட்னியை தோசையின் மேல் சிறிது வைத்து தடவி விட்டு, தோசை சற்று
பொன்னிறமானதும், தோசையை மடித்து பரிமாறினால், சுவையான ரோட்டுக்கடை
பூண்டு கார தோசை தயார்.
Image Courtesy: Apoorvaa's Nalabagam



Click it and Unblock the Notifications






