Latest Updates
-
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம் -
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும் -
இந்தியாவில் இயற்கையாக வைரம் கிடைக்கும் ஒரே மாநிலம் எது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
திருநெல்வேலி ஸ்டைல் அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
அடுத்தவர் மனைவியை திருடுவது இந்த நாட்டில் வேடிக்கையான விளையாட்டாம் - ஆனா இதுல ஒரு விவகாரமான கண்டிஷன் இருக்கு -
சில்லி கார்லிக் ப்ரைடு ரைஸ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
காரைக்குடி கார சட்னி - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
சனிபகவான் ரேவதி நட்சத்திரம் செல்வதால் அக்டோபர் மாதம் வரை இந்த 3 ராசிக்காரங்க ராஜாதான் - உங்க ராசி இதுல இருக்கா -
இன்றைய ராசிபலன் 05 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு தங்க மழை கொட்டப்போகுதாம் -
புதன் பெயர்ச்சியால் நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது..
1 கப் பழைய சாதம் இருக்கா? அப்ப இந்த போண்டாவை செஞ்சு கொடுங்க... டேஸ்ட் தாறுமாறா இருக்கும்...!
Rice Bonda Recipe in Tamil: சாதம் மீதமாகிவிட்டால் பொதுவாக நாம் அதை பழைய சாதமாக சாப்பிடுவோம், இல்லையெனில் அதை வடகமாக செய்து சாப்பிடுவோம். ஆனால் மிஞ்சி போன சாதத்தை வைத்து சூப்பரான போண்டா செய்யலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா?
உண்மைதான் பழைய சாதத்தை வைத்து காரசாரமான மாலை நேர ஸ்னாக்கை செய்யலாம். இந்த போண்டா பெரியவர்கள் மட்டுமின்றி குழந்தைகளுக்கும் மிகவும் பிடித்ததாக இருக்கும். இந்த பதிவில் பழைய சாதத்தை வைத்து எப்படி போண்டா செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.

தேவையானப் பொருட்கள்:
- சமைத்த சாதம் - 1 கப்
- நறுக்கிய வெங்காயம் - 1/2 கப்
- கேரட் - 1 (துருவியது)
- பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 1
- பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை - 1 கொத்து
- பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை - 1 டேபிள் ஸ்பூன்
- கடலை மாவு - 1 கப்
- அரிசி மாவு - 1/4 கப்
- பேக்கிங் சோடா - ஒரு சிட்டிகை
- மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
- மஞ்சள் தூள் - 1/4 டேபிள் ஸ்பூன்
- உப்பு தேவைக்கேற்ப
- பொரிப்பதற்கு எண்ணெய் தேவைக்கேற்ப
செய்முறை:
- ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வெங்காயம், தேவைக்கேற்ப உப்பு, நறுக்கிய பச்சை மிளகாய், துருவிய கேரட், நறுக்கிய கறிவேப்பிலை, நறுக்கிய கொத்தமல்லி இலைகள், 1/2 ஸ்பூன் சிவப்பு மிளகாய் தூள் ஆகியவ்ற்றை சமைத்த சாதத்துடன் சேர்த்து நன்கு கலக்கவும்.
- பின்னர் இந்த கலவையை நன்கு பிசைந்து சிறிய அரிசி உருண்டைகளாக உருட்டவும்.
- இன்னொரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, பேக்கிங் சோடா, தேவைக்கேற்ப உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் ஆகியவற்றைச் சேர்க்கவும்.
- சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கவும். மாவு கொஞ்சம் கெட்டி பதத்தில் நிலைத்தன்மையுடன் இருக்க வேண்டும்.
- வாணலியில் எண்ணெயை சூடாக்கி, மிதமான தீயில் வைக்கவும். எண்ணெய் தயாராக இருக்கிறதா என்று சரிபார்க்கவும். சூடான எண்ணெயில் ஒரு சிறிய உருண்டை மாவை விடுவதன் மூலம் நீங்கள் சரிபார்க்கலாம், அது உடனடியாக மேலே வந்தால், எண்ணெய் தயாராக உள்ளது.
- அரிசி உருண்டையை மாவில் நனைத்து பின்னர் எண்ணெயில் போட்டு வறுக்கவும்.
- இந்த உருண்டை பொன்னிறமாக மாறும் வரை வறுக்கவும். வாணலியில் இருந்து எடுத்து, அதிகப்படியான எண்ணெயை வடிகட்டி சூடாகப் பரிமாறவும்.
- இந்த அரிசி போண்டாவிற்கு தேங்காய் சட்னி அல்லது தக்காளி சட்னி சூப்பரான சைடிஷாக இருக்கும்.



Click it and Unblock the Notifications