Latest Updates
-
வெயில் காலத்தில் இந்த கஞ்சியை அடிக்கடி செஞ்சு குடிங்க.. கொழுப்பும் குறையும், உடலும் குளிர்ச்சியா இருக்கும்... -
இன்றைய ராசிபலன் 12 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நினைத்தது நடக்கும் நாளாக இருக்குமாம்...! -
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
1 கப் பழைய சாதம் இருக்கா? அப்ப இந்த போண்டாவை செஞ்சு கொடுங்க... டேஸ்ட் தாறுமாறா இருக்கும்...!
Rice Bonda Recipe in Tamil: சாதம் மீதமாகிவிட்டால் பொதுவாக நாம் அதை பழைய சாதமாக சாப்பிடுவோம், இல்லையெனில் அதை வடகமாக செய்து சாப்பிடுவோம். ஆனால் மிஞ்சி போன சாதத்தை வைத்து சூப்பரான போண்டா செய்யலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா?
உண்மைதான் பழைய சாதத்தை வைத்து காரசாரமான மாலை நேர ஸ்னாக்கை செய்யலாம். இந்த போண்டா பெரியவர்கள் மட்டுமின்றி குழந்தைகளுக்கும் மிகவும் பிடித்ததாக இருக்கும். இந்த பதிவில் பழைய சாதத்தை வைத்து எப்படி போண்டா செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.

தேவையானப் பொருட்கள்:
- சமைத்த சாதம் - 1 கப்
- நறுக்கிய வெங்காயம் - 1/2 கப்
- கேரட் - 1 (துருவியது)
- பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 1
- பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை - 1 கொத்து
- பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை - 1 டேபிள் ஸ்பூன்
- கடலை மாவு - 1 கப்
- அரிசி மாவு - 1/4 கப்
- பேக்கிங் சோடா - ஒரு சிட்டிகை
- மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
- மஞ்சள் தூள் - 1/4 டேபிள் ஸ்பூன்
- உப்பு தேவைக்கேற்ப
- பொரிப்பதற்கு எண்ணெய் தேவைக்கேற்ப
செய்முறை:
- ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வெங்காயம், தேவைக்கேற்ப உப்பு, நறுக்கிய பச்சை மிளகாய், துருவிய கேரட், நறுக்கிய கறிவேப்பிலை, நறுக்கிய கொத்தமல்லி இலைகள், 1/2 ஸ்பூன் சிவப்பு மிளகாய் தூள் ஆகியவ்ற்றை சமைத்த சாதத்துடன் சேர்த்து நன்கு கலக்கவும்.
- பின்னர் இந்த கலவையை நன்கு பிசைந்து சிறிய அரிசி உருண்டைகளாக உருட்டவும்.
- இன்னொரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, பேக்கிங் சோடா, தேவைக்கேற்ப உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் ஆகியவற்றைச் சேர்க்கவும்.
- சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கவும். மாவு கொஞ்சம் கெட்டி பதத்தில் நிலைத்தன்மையுடன் இருக்க வேண்டும்.
- வாணலியில் எண்ணெயை சூடாக்கி, மிதமான தீயில் வைக்கவும். எண்ணெய் தயாராக இருக்கிறதா என்று சரிபார்க்கவும். சூடான எண்ணெயில் ஒரு சிறிய உருண்டை மாவை விடுவதன் மூலம் நீங்கள் சரிபார்க்கலாம், அது உடனடியாக மேலே வந்தால், எண்ணெய் தயாராக உள்ளது.
- அரிசி உருண்டையை மாவில் நனைத்து பின்னர் எண்ணெயில் போட்டு வறுக்கவும்.
- இந்த உருண்டை பொன்னிறமாக மாறும் வரை வறுக்கவும். வாணலியில் இருந்து எடுத்து, அதிகப்படியான எண்ணெயை வடிகட்டி சூடாகப் பரிமாறவும்.
- இந்த அரிசி போண்டாவிற்கு தேங்காய் சட்னி அல்லது தக்காளி சட்னி சூப்பரான சைடிஷாக இருக்கும்.



Click it and Unblock the Notifications








