Latest Updates
-
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க
2 கப் பொரி இருந்தா ஒருடைம் இந்த மாதிரி தோசை சுட்டு சாப்பிடுங்க.. ருசி செமயா இருக்கும்...
Pori Dosa Recipe In Tamil: காலை வேளையில் உங்கள் வீட்டில் பெரும்பாலும் தோசை தான் செய்வீர்களா? ஆனால் தோசை சுட மாவு இல்லையா? இப்படி தோசை மாவு இல்லாத சமயத்தில் தோசை சாப்பிட நினைத்தால், உங்கள் வீட்டில் பொரி அதிகம் இருந்தால், அதைக் கொண்டு 15 நிமிடம் தோசை மாவை தயார் செய்யலாம்.
பொரி கொண்டு செய்யப்படும் தோசையானது மிகவும் சுவையாக இருப்பதோடு, அவசர நேரத்தில் டக்கென்று செய்யகூடிய வகையில் சுலபமாகவும் இருக்கும். முக்கியமாக இந்த பொரி தோசை வேலைக்கு செல்பவர்களுக்கு ஏற்ற ரெசிபி. முக்கியமாக இந்த தோசை சுடுவதற்கு பொரியுடன் கோதுமை மாவும், தயிரும் இருந்தாலே போதுமானது. இந்த பொரி தோசையை தக்காளி சட்னியுடன் சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும்.

உங்களுக்கு பொரி தோசையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பொரி தோசை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பொரி - 2 கப்
* கோதுமை மாவு - 1/2 கப்
* தயிர் - 1/2 கப்
* தண்ணீர் - தேவையான அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய்- தேவையான அளவு
செய்முறை:
* முதலில் பொரியை ஒரு பாத்திரத்தில் பொரியை எடுத்து அதில் நீரை
ஊற்றி கிளறி, மூடி வைத்து 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* 10 நிமிடம் கழித்து பொரியில் உள்ள நீரை வடிகட்டிவிட்டு, ஊற வைத்த
பொரியை மிக்சர் ஜாரில் போட்டு, அத்துடன் சிறிது நீரை ஊற்றி நன்கு
மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அத்துடன் 1/2 கப் கோதுமை மாவு மற்றும் 1/2 கப் தயிர் சேர்த்து
நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அரைத்ததை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு
சேர்த்து, தோசை மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், கலந்து
வைத்துள்ள மாவைக் கொண்டு மெல்லியதாக தோசை ஊற்றி, மேலே சிறிது எண்ணெய்
உற்றி முன்னும் பின்னும் வேக வைத்து எடுத்தால், சுவையான பொரி தோசை
தயார்.
Image Courtesy: Today's Samayal



Click it and Unblock the Notifications









