Latest Updates
-
30 ஆண்டுக்கு பின் சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம யோகம்: இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகத்தைத் தரப்போகுதாம் -
சப்பாத்திக்கு இப்படி உருளைக்கிழங்கு சைடு டிஷ் பண்ணுங்க.. கறிக்குழம்பு சுவையில் செமயா இருக்கும்.. -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் நீண்ட தூரம் பயணிக்கும் ரயில் எது? இதன் கடைசி ஸ்டாப் தமிழ்நாடுதானாம் -
மின்சாரமே இல்லாத காலத்தில் முகலாய மன்னர்களுக்கு எப்படி ஐஸ்கட்டிகள் கிடைத்தது தெரியுமா? இப்படித்தானாம் -
பால் போன்ற வெள்ளையான சருமம் வேண்டுமா? அப்ப இந்த பால் ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
உடுப்பி ஸ்டைலில் சாம்பார் சாப்பிட்ருக்கீங்களா? இந்த பக்குவத்தில் செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் பணம் சம்பாதிக்க கஷ்டப்படுவாங்களாம்.. உங்க பிறந்த தேதி இதுல இருக்கா? -
பூண்டும், கறிவேப்பிலையும் இருந்தா.. இப்படி தொக்கு செய்யுங்க.. 3 மாதம் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
சுக்கிரன் சனிபகவான் ஆளும் நட்சத்திரத்திற்கு செல்வதால் இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுதாம் -
எந்த ஆரோக்கிய பிரச்சனைக்கு எந்தப் பழம் சிறந்தது? விளக்கும் டாக்டர்.சிவகுமார்!
பொட்டுக்கடலை இருந்தா இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு சூப்பரான சைடிஷா இருக்கும்
Pottukadalai Kurma Recipe in Tamil: பெரும்பாலான வீடுகளில் காலையில் இட்லி, தோசை தான் பிரதானமான டிபனாக இருக்கும். அந்த இட்லி, தோசைக்கு எப்போதும் சட்னி, சாம்பார்தான் பிரதான சைடிஷாக இருக்கும். சற்று வித்தியாசமாக அதே சமயம் வீட்டில் உள்ளோர் விரும்பி சாப்பிடக் கூடிய ஒரு சைடிஷ் செய்ய விரும்புகிறீர்களா?

அப்படியானால் இந்த பொட்டுக்கடலை குருமாவை ஒருமுறை செய்து பாருங்கள். டக்குனு செய்யக்கூடிய இந்த குருமா மற்ற குருமாவைப் போல அல்லாமல் அட்டகாசமான சுவையில் இருக்கும். இந்த பக்குவத்தில் குருமா செய்து கொடுத்தால் வீட்டில் எல்லோரும் 2 இட்லி அதிகமாக சாப்பிடுவார்கள், இதன் சுவை அந்த அளவிற்கு அபாரமாக இருக்கும்.
உங்களுக்கு சுவையான பொட்டுக்கடலை குருமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பொட்டுக்கடலை குருமாவின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
- 1/2 ஸ்பூன் கடுகு
- 1/4 ஸ்பூன் வெந்தயம்
- 1/2 ஸ்பூன் சீரகம்
- 1 கப் நறுக்கிய வெங்காயம்
- 2 பல் பூண்டு (பொடியாக நறுக்கியது)
- 3 பச்சை மிளகாய் (நீளமாக கீறியது)
- 1 நறுக்கிய தக்காளி
- 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்
- தேவையான அளவு உப்பு
- 1/2 ஸ்பூன் கரம் மசாலா தூள்
- 1 ஸ்பூன் சாம்பார் தூள்
- 1/4 ஸ்பூன் சோம்பு
- தேவையான அளவு தண்ணீர்
- சிறிது கொத்தமல்லி இலைகள்
- ஒரு கொத்து கறிவேப்பிலை
- 3 ஸ்பூன் பொட்டுக்கடலை
- 2 ஸ்பூன் துருவிய தேங்காய்
செய்முறை:
- ஒரு கடாயில் தேங்காய் எண்ணெயை ஊற்றிச் சூடாக்கவும். எண்ணெய் சூடானதும் அதில் கடுகு, வெந்தயம் மற்றும் சீரகம் ஆகியவற்றைச் சேர்த்து தாளிக்கவும்.
- கடுகு வெடித்ததும் நறுக்கிய வெங்காயம் மற்றும் நறுக்கிய பூண்டைச் சேர்க்கவும். வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்கவும்.
- பின்னர் கீறிய பச்சை மிளகாய், நறுக்கிய தக்காளி ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.
- பின்னர் உப்பு, மஞ்சள் தூள், சாம்பார் தூள் மற்றும் கரம் மசாலா சேர்க்கவும். தக்காளி மென்மையாகவும் குழைந்தும் போகும் வரை வதக்கவும்.
- இந்த நிலையில் ஒரு கப் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
- தண்ணீர் கொதிக்கும் நேரத்தில் ஒரு மிக்ஸி ஜாரில் பொட்டுக்கடலையை சேர்த்து பொடியாக அரைக்கவும்.
- பின்னர் அதில் துருவிய தேங்காய் மற்றும் சோம்பு சேர்க்கவும். சிறிதளவு தண்ணீர் சேர்த்து மீண்டும் அரைத்து ஒரு வழவழப்பான விழுதாக அரைத்து ஒரு கிண்ணத்திற்கு மாற்றவும்.
- பின்னர் மீண்டும் 1 கப் தண்ணீர் சேர்த்து குருமாவை நன்கு கொதிக்க விடவும்.
- இறுதியாக, கறிவேப்பிலை மற்றும் நறுக்கிய கொத்தமல்லி இலைகளைச் சேர்க்கவும். சில நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்கவிட்டு, அடுப்பை அணைக்கவும்.
- அவ்வளவுதான் சுவையான பொட்டுக்கடலை குருமா ரெடி!



Click it and Unblock the Notifications