Latest Updates
-
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க -
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்!
இந்த கஞ்சியை வாரத்துக்கு 3 முறை குடிங்க.. உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பு குறைஞ்சு உடல் எடை வேகமா குறையும்...
Poondu Vendhaya Kanji Recipe In Tamil: நீங்கள் உடல் எடையைக் குறைக்க ட்ரை செய்து கொண்டிருக்கிறீர்களா? அதற்காக டயட்டில் இருக்கிறீர்களா? இப்படி டயட்டில் இருக்கும் போது உங்களின் காலை உணவு பெரும்பாலும் ருசி இல்லாத உணவாகத் தான் இருக்குமா? அப்படியானால் உங்களின் டயட்டில் கஞ்சியை சேர்த்துக் கொள்ளுங்கள்.
அதுவும் பூண்டு வெந்தய கஞ்சியை டயட்டில் இருப்பவர்கள் சேர்த்துக் கொண்டால், உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்கள் வேகமாக கரைந்து, உடல் எடையைக் குறைப்பதற்கு பெரிதும் உதவியாக இருக்கும். அதுவும் கோடைக்காலத்தில் இந்த கஞ்சியை செய்து குடித்து வந்தால், இந்த கஞ்சியில் வெந்தயம் சேர்க்கப்பட்டிருப்பதால் உடல் குளிர்ச்சியாக இருக்கும்.

உங்களுக்கு பூண்டு வெந்தய கஞ்சியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பூண்டு வெந்தய கஞ்சி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* அரிசி - 150 கிராம்
* பூண்டு - 100 கிராம்
* வெந்தயம் - 3 டீஸ்பூன்
* கெட்டியான தேங்காய் பால் - 1 கப்
* தண்ணீர் - தேவையான அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
துவையலுக்கு...
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* புதினா - 1 கையளவு
* கறிவேப்பிலை - சிறிது
* பச்சை மிளகாய் - 2
* இஞ்சி - 1 துண்டு
* தேங்காய் - 2 சில்லு
* புளி - சிறிய துண்டு
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் அரிசியை ஜாரில் போட்டு ஒருமுறை அரைத்து இறக்கி, ஒரு
கிண்ணத்தில் எடுத்து நீரை ஊற்றி, குறைந்தது 1 மணிநேரம் ஊற வைக்க
வேண்டும்.
* அதே சமயம் வெந்தயத்தை நீரில் 3 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள
வேண்டும்.
* அதன் பின் குக்கரில் ஊற வைத்த அரிசியை கழுவி சேர்க்க வேண்டும்.
* பின் அத்துடன் பூண்டு பற்களை சேர்த்து, அதன் பின் ஊற வைத்துள்ள
வெந்தய விதைகளை சேர்த்து, பொருட்கள் அனைத்தும் மூழ்கும் அளவில் நீரை
ஊற்றி, குக்கரை மூடி, அடுப்பில் வைத்து, 3-4 விசில் விட்டு இறக்கிக்
கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், உளுத்தம் பருப்பை சேர்த்து பொன்னிறமாக வறுத்து
இறக்கிக் கொள்ள வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் புதினா, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், இஞ்சி,
தேங்காய், புளி துண்டு, வறுத்த உளுத்தம் பருப்பு மற்றும் சுவைக்கேற்ப
உப்பு சேர்த்து, சற்று கொரகொரவென்று அரைத்து, கிண்ணத்தில் எடுத்துக்
கொண்டால், புதினா துவையல் தயார்.
* அடுத்து குக்கரைத் திறந்து, கரண்டியால் கஞ்சியை கிளறி விட்டு
மசித்து விட வேண்டும்.
* அதன் பின் அதில் கெட்டியான தேங்காய் பாலை ஊற்றி, அத்துடன் தேவையான
அளவு நீரை ஊற்றி, அடுப்பில் வைத்து, ஒரு கொதி விட்டு இறக்கினால்,
சுவையான பூண்டு வெந்தய கஞ்சி தயார்.



Click it and Unblock the Notifications







