Latest Updates
-
சனிக்கிழமையில் பிறந்தவர்களின் குணமும், எதிர்காலமும் எப்படி இருக்கும் தெரியுமா? -
100 ஆண்டுகள் கழித்து மீன ராசியில் உருவாகும் சதுர்கிரக யோகம்: கோடீஸ்வர யோகம் பெறும் 3 ராசிகள்! -
செட்டிநாடு கார அடை-தேங்காய் இஞ்சி சட்னி ரெசிபி காம்போ... இதை செஞ்சு கொடுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
தக்காளி சட்னியை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல 10 இட்லி கூட சாப்பிடுவாங்க... -
இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...! -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...!
இட்லிக்கு ஒருமுறை பூண்டு கார சட்னியை இப்படி செஞ்சு பாருங்க... டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்...
Garlic Kara Chutney Recipe In Tamil: காலையில் இட்லிக்கு என்ன சட்னியை செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் அடிக்கடி கார சட்னியை செய்வீர்களா? எப்போதும் ஒரே மாதிரி தான் கார சட்னியை செய்வீர்களா?
அப்படியானால் ஒருமுறை இந்த பூண்டு கார சட்னியை செய்து பாருங்கள். இந்த சட்னி நன்கு காரசாரமாகவும், ருசியாகவும் இருக்கும். இப்படி கார சட்னியை செய்தால், 2 இட்லி சாப்பிடுபவர்கள் 1 இட்லியை எக்ஸ்ட்ரா வாங்கி சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு பூண்டு கார சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பூண்டு கார சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* வரமிளகாய் - 10
* காஷ்மீரி வரமிளகாய் - 4
* பூண்டு - 25
* உப்பு - சுவைக்கேற்ப
* தக்காளி - 2
* சின்ன வெங்காயம் - 10
* தண்ணீர் - சிறிது
தாளிப்பதற்கு...
* நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்த்ம் பருப்பு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 2 கொத்து
* பெருங்காயத் தூள் - சிறிது
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் வரமிளகாய், காஷ்மீரி மிளகாய், பூண்டு
சேர்த்து ஒருமுறை அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அதில் சிறிது நீரை ஊற்றி, தக்காளி, சின்ன வெங்காயம் மற்றும்
சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம் சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பின் அதில் கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து,
அரைத்து வைத்துள்ள சட்னியை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி கிளறி, 2
நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான பூண்டு கார சட்னி
தயார்.
Image Courtesy: Today's Samayal



Click it and Unblock the Notifications











