Latest Updates
-
செப்டம்பர் மாதத்தில் பல கஷ்டங்களை அனுபவிக்கப்போகும் 3 துரதிர்ஷ்டமான ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கோவை ஸ்பெஷல் உப்பு பருப்பு - சிம்பிளா 10 நிமிஷத்துல எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
1 கப் பச்சரிசியும், வெல்லமும் இருந்தா இந்த செட்டிநாடு கந்தர் அப்பத்தை செஞ்சு பாருங்க - சூப்பரா இருக்கும் -
அடிக்கடி சளி, இருமல் பிடிச்சு பாடாய்படுத்துதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 3 விதமான உணவுகளை தினமும் சாப்பிடுங்க.. -
டைனோசர்கள் உருவாவதற்கு முன்பே பூமியில் உருவான நதி எது தெரியுமா? இப்பவும் இதில் தண்ணீர் இருக்காம் -
செப்டம்பரில் உருவாகும் பல அரிய ராஜயோகங்கள்: இந்த 4 ராசிக்கு செல்வ செழிப்பை கொண்டு வரும்.. உங்க ராசி என்ன? -
துவரம் பருப்பும், தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. ருசி அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் தேடிவரப்போகுதாம் -
செவ்வாயால் உருவாகும் நீச்சபங்க ராஜயோகம்: செப்டம்பரில் இந்த 4 ராசிகளின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது! -
ப்ளீச்சிங் செஞ்ச மாதிரி முகம் பளிச்சுன்னு இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க..
இட்லிக்கு ஒரு டைம் இந்த ஸ்டைலில் பூண்டு சட்னி செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்...
Poondu Chutney Recipe In Tamil: இன்று காலை உங்கள் வீட்டில் இட்லி செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? இட்லிக்கு பொதுவாக சற்று புளிப்பான சட்னி இருந்தால் தான் சாப்பிட நன்றாக இருக்கும். அதற்காக எப்போதும் தக்காளி சட்னியை செய்ய முடியாது அல்லவா? எனவே இன்று பூண்டு சட்னி செய்யுங்கள்.
அதுவும் வழக்கமாக நீங்கள் செய்வது போன்று செய்யாமல், கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்டைலில் செய்யுங்கள். இதனால் சட்னி வேற லெவல் சுவையில் அட்டகாசமாக இருக்கும். முக்கியமாக இப்படி சட்னி செய்யும் போது உங்கள் குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு பூண்டு சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பூண்டு சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* நல்லெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* புளி - 1 எலுமிச்சை அளவு
* வரமிளகாய் - 10
* உளுத்தம் பருப்பு - 1/4 கப் (50 கிராம்)
* பூண்டு - 1/4 கிலோ
* இஞ்சி - சிறிய துண்டு (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 2 கொத்து
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் தேவையான அளவு
தாளிப்பதற்கு...
* நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி
சூடானதும், புளியை சேர்த்து பச்சை வாசனை போக எண்ணெயில் வதக்க
வேண்டும்.
* பின் அதில் காரத்திற்கு ஏற்ப வரமிளகாய் சேர்த்து நன்கு வதக்க
வேண்டும்.
* பின்பு அதில் உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்க
வேண்டும்.
* பிறகு பூண்டு மற்றும் இஞ்சியை சேர்த்து, பச்சை வாசனை போய் நிறம்
மாறும் வரை வதக்க வேண்டும்.
* அடுத்து கறிவேப்பிலை மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து கிளறி
இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் குளிர வைத்ததை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு
மற்றும் சிறிது நீரை ஊற்றி சற்று கொரகொரவென்று அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு தேவையான
அளவு 2 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம்
பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் அரைத்த சட்னியை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி கிளறி,
சட்னியில் உள்ள நீர் சற்று வற்றும் வரை கிளறி இறக்கினால், சுவையான
பூண்டு சட்னி தயார்.
Image Courtesy: Apoorvaa's Nalabagam



Click it and Unblock the Notifications