Latest Updates
-
செவ்வாய்-புதன் சேர்க்கையால் உருவாகியுள்ள தன யோகம்: இன்று முதல் இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
குரு-சுக்கிரன் உருவாக்கும் கஜலக்ஷ்மி யோகத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உள்ளங்கையில் இந்த 'ராஜலட்சுமி யோகம்' இருப்பவர்கள் கோடீஸ்வரராக பிறந்தவர்களாம் - உங்க கையில் இருக்கா? -
விளக்கெண்ணெயுடன் இந்த 5 எண்ணெயை கலந்து யூஸ் பண்ணுங்க.. தலைமுடி 2 மடங்கு வேகத்துல வளரும்.. -
ஆந்திரா கறிவேப்பிலை சட்னி ரெசிபி - அரைச்சு பாருங்க, இட்லி, தோசைக்கு டக்கரா இருக்கும் -
பதவியேற்பு விழாவில் விஜய்யின் குடும்பம் ஏன் வரவில்லை? அந்த ஒரு விஷயம் தான் இப்போ ஹாட் டாபிக்! -
சப்பாத்திக்கு இந்த பக்குவத்துல கருப்பு கொண்டைக்கடலை கிரேவி செய்யுங்க.. 2 சப்பாத்தி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப ஒழுக்கமானவர்களாக இருப்பார்களாம் - வெற்றி இவர்களை தேடிவருமாம் -
விஜய் சிஎம் ஆனதும் த்ரிஷா போட்ட அந்த ஒரு போஸ்ட்: இணையத்தில் வெடிக்கும் புதிய சர்ச்சை! -
வெயிலால் முகத்தில் எண்ணெய் அதிகமா வழியுதா? அப்ப மைசூர் பருப்பு வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க..
தித்திக்கும்... கரும்புச்சாறு பொங்கல்
இந்த பொங்கலில் வித்தியாசமான பொங்கல் செய்ய விரும்பினால், கரும்புச்சாறு பொங்கலை செய்யலாம். இதை செய்வது மிகவும் சுலபம். மேலும் இது குக்கரில் செய்யக்கூடியது.
பொங்கல் பண்டிகை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்த பொங்கல் பண்டிகையின் ஸ்பெஷலே பொங்கலும், கரும்பும் தான். பாரம்பரிய முறைப்படி பொங்கல் செய்ய பலரும் விரும்புவதுண்டு. ஆனால் அந்த பாக்கியம் தற்போது அனைவருக்கும் கிடைப்பதில்லை. ஏனெனில் விறகு அடுப்பு வைத்து பொங்கல் வைக்க போதுமான இடம் இல்லை. எனவே பலரும் வீட்டில் ஸ்டவ்வில் தான் பொங்கல் வைக்க வேண்டியுள்ளது. அதிலும் நிறைய பேர் குக்கரில் பொங்கல் வைக்கிறார்கள். ஏனெனில் குக்கரில் பொங்கல் வைத்தால், சீக்கிரம் ரெடியாகிவிடும். மேலும் பொங்கலில் பல வெரைட்டிகள் உள்ளன. அதில் ஒன்று தான் கரும்புச்சாறு பொங்கல்.

இந்த பொங்கலில் வித்தியாசமான பொங்கல் செய்ய விரும்பினால், கரும்புச்சாறு பொங்கலை செய்யலாம். இதை செய்வது மிகவும் சுலபம். மேலும் இது குக்கரில் செய்யக்கூடியது. உங்களுக்கு கரும்புச்சாறு பொங்கல் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கரும்புச்சாறு பொங்கல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பச்சரிசி - 1/4 கப்
* பாசிப்பருப்பு - 1/8 கப்
* கரும்புச்சாறு - 1 1/2 கப்
* கற்கண்டு - 1/8 கப்
* நெய் - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் கரும்பை எடுத்து, அதன் வெளித்தோலை நீக்கிவிட்டு, அவற்றை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். பின் அதை மிக்சர் ஜாரில் போட்டு, சிறிது நீரை ஊற்றி நன்கு அரைத்து, வடிகட்டி சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அரிசியை நீரில் கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் பாசிப்பருப்பைப் போட்டு பொன்னிறமாக வறுத்து கொள்ள வேண்டும்
* பின் அதில் அரிசியைப் போட்டு, கரும்பு சாற்றினை ஊற்றி கலந்து, குக்கரை மூடி குறைவான தீயில் வைத்து 4 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, அதில் கற்கண்டை சேர்த்து நன்கு, கற்கண்டை கரைய விட வேண்டும். கற்கண்டுகள் நன்கு கரைந்ததும், கரண்டியால் நன்கு பொங்கலை மசித்து விட வேண்டும்.
* அடுத்து அதில் ஏலக்காய் பொடியைத் தூவி கிளற வேண்டும். மற்றொரு அடுப்பில் சிறு வாணலியை வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும், முந்திரியைப் போட்டு வறுத்து, குக்கரில் உள்ள பொங்கலுடன் கிளறினால், சுவையான கரும்புச்சாறு பொங்கல் தயார்.
Image Courtesy: sharmispassions



Click it and Unblock the Notifications










