பொள்ளாச்சி பிச்சி போட்ட கோழி புட்டு - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க..

Posted By:

Pollachi Pichi Potta Kozhi Puttu Recipe In Tamil: இந்த வாரம் உங்கள் வீட்டில் சிக்கன் செய்யப் போகிறீர்களா? அந்த சிக்கனை எப்போதும் கிரேவி, வறுவல், தொக்கு, சிக்கன் 65 என்று தான் செய்து சாப்பிடுவீர்களா? இந்த வாரம் சற்று வித்தியாசமாக செய்து சாப்பிட நினைக்கிறீர்களா? அப்படியானால் பொள்ளாச்சி பிச்சிப் போட்ட கோழி புட்டு செய்து சாப்பிடுங்கள்.

Pollachi Pichi Potta Kozhi Puttu How To Make Pollachi Pichi Potta Chicken Fry

இந்த ரெசிபி பொள்ளாச்சியில் மிகவும் பிரபலமானது. நன்கு காரசாரமாக இருக்கும் இந்த புட்டு, ஒரு அருமையான சைடு டிஷ்ஷாக இருக்கும். ஒருமுறை இந்த ரெசிபியை வீட்டில் உள்ளோருக்கு செய்து கொடுத்தால், அடிக்கடி இந்த ரெசிபியை செய்து கொடுக்க கேட்பார்கள். அந்த அளவில் ருசி பிரமாதமாக இருக்கும்.

இந்த பொள்ளாச்சி பிச்சி போட்ட கோழி புட்டு ரெசிபி குறித்து செஃப் வாணி அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். உங்களுக்கு இந்த பொள்ளாச்சி பிச்சி போட்ட கோழி புட்டு ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பொள்ளாச்சி பிச்சி போட்ட கோழி புட்டு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* எலும்பில்லாத சிக்கன் - 200 கிராம்
* தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 1/2 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

* முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் சிறிது நீரை ஊற்றி, சிக்கனை கழுவி சேர்த்து, சிறிது உப்பு சேர்த்து, சிக்கனை நன்கு வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* சிக்கன் வெந்ததும், அதை ஒரு தட்டில் எடுத்து பிச்சுப்போட்டுக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலையை சேர்த்து, அத்துடன் பச்சை மிளகாயையும் சேர்த்து, வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பிச்சுப்போட்ட சிக்கனை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி நன்கு 1 நிமிடம் வதக்க வேண்டும்.
* அடுத்து, அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், கரம் மசாலா சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பின்பு அதில் மிளகுத் தூளை சேர்த்து, 2 டேபிள் ஸ்பூன் துருவிய தேங்காயை சேர்த்து நன்கு கிளறி இறக்கினால், பொள்ளாச்சி பிச்சு போட்டு கோழி புட்டு தயார்.

[ of 5 - Users]
Story first published: Sunday, May 10, 2026, 13:03 [IST]
Desktop Bottom Promotion