Latest Updates
-
சனிக்கிழமையில் பிறந்தவர்களின் குணமும், எதிர்காலமும் எப்படி இருக்கும் தெரியுமா? -
100 ஆண்டுகள் கழித்து மீன ராசியில் உருவாகும் சதுர்கிரக யோகம்: கோடீஸ்வர யோகம் பெறும் 3 ராசிகள்! -
செட்டிநாடு கார அடை-தேங்காய் இஞ்சி சட்னி ரெசிபி காம்போ... இதை செஞ்சு கொடுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
தக்காளி சட்னியை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல 10 இட்லி கூட சாப்பிடுவாங்க... -
இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...! -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...!
பிரியாணி சாப்பிட்டு போரடிச்சிருச்சா? இந்த பட்டாணி புலாவ் செஞ்சு சாப்பிட்டு பாருங்க...டேஸ்ட் சூப்பரா இருக்கும்!
Pattani Pulav Recipe in Tamil: டின்னருக்கு பொதுவாக நாம் இட்லி, தோசை அல்லது சப்பாத்தி போன்ற வழக்கமான டிபன் உணவுகளையே சமைப்போம். ஆனால் இதையே செய்வது நாளடைவில் அனைவருக்கும் போரடிக்கும். இதுபோன்ற சூழலில் வெஜிடபிள் பிரியாணி, புலாவ் போன்ற மதிய உணவிற்கு செய்யக்கூடிய உணவுகளை செய்வது நல்ல மாறுதலாக இருக்கும். ஆனால் வெஜிடபிள் பிரியாணி போன்றவற்றை செய்ய அதிக நேரம் தேவைப்படலாம் அல்லது காய்கறிகள் தேவைப்படலாம்.
உங்களிடம் இரண்டுமே இல்லாத போது அதற்கு மாற்றாக பட்டாணி புலாவை செய்யலாம். பட்டாணியில் அதிகளவு புரோட்டின் இருப்பதால் இது சுவையானதாக மட்டுமின்றி ஆரோக்கியமானதாகவும் இருக்கும். இந்த பட்டாணி புலாவை மதிய உணவிற்கு கூட செய்யலாம். இதனுடன் சிக்கன் கிரேவி வைத்து சாப்பிட்டால் சுவை தாறுமாறாக இருக்கும். இந்த பதிவில் எளிதில் செய்யக்கூடிய சுவையான பட்டாணி புலாவை எப்படி செய்யலாம் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

- பாஸ்மதி அரிசி - 200 கிராம்
- பட்டாணி - 150 கிராம்
- பெரிய வெங்காயம் - 1
- பச்சை மிளகாய் - 3
- இஞ்சி பூண்டு விழுது - 1 மேஜைக்கரண்டி
- உப்பு - தேவையான அளவு
- புதினா - தேவையான அளவு
தாளிக்க:
- எண்ணெய் - 2 ஸ்பூன்
- நெய் - 2 ஸ்பூன்
- பட்டை - சிறிய துண்டு
- கிராம்பு - 2
- ஏலக்காய் - 2
- பிரியாணி இலை - 1
- தேங்காய் பால் - 1 கப்
Take a Poll
செய்முறை:
- பாஸ்மதி அரிசியை தண்ணீரில் அரை மணி நேரம் ஊற வைக்கவும். வெங்காயம், பச்சை மிளகாய் இரண்டையும் நீளவாக்கில் வெட்டி வைத்துக் கொள்ளவும்.
- தேங்காய் துருவலை மிக்ஸ்சியில் அரைத்து 1 கப் வரும் அளவுக்கு தேங்காய் பால் எடுத்து வைக்கவும்.
- அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய், நெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை போட்டு தாளிக்கவும்
- பிறகு நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும். வெங்காயம் பொன்னிறமானதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
- பச்சை வாசனை போனதும் பட்டாணி சேர்த்து கிளறவும். பிறகு அதனுடன் தேங்காய் பால் மற்றும் போதுமான அளவு உப்பு சேர்க்கவும்.
- தேங்காய் பால் கொதிக்க ஆரம்பித்ததும் அதனுடன் ஊற வைத்துள்ள அரிசியை சேர்த்து நன்றாக கலந்து புதினாவை சேர்த்து மூடி போட்டு மூடவும்.
- நீராவி வந்ததும் விசில் போட்டு 4 விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும்.
- ஆவி அடங்கியதும் மூடியை திறந்து நன்றாக கிளறினால், சுவையான பட்டாணி புலாவ் ரெடி!
- சண்டே மதியம் வழக்கமாக பிரியாணி செய்யாமல் இதை செய்து சைடிஷாக சிக்கன் அல்லது மட்டன் கிரேவி செய்தால் சண்டே சூப்பராக இருக்கும்!



Click it and Unblock the Notifications











