Latest Updates
-
ஜூலை 16-ல் சனி-குரு உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக்கப் போகுதாம் -
ஜூலை 14-ல் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
1/4 கப் கொள்ளு இருந்தா இந்த கர்நாடகா பேமஸ் சட்னியை ட்ரை பண்ணுங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
இந்த 4 ராசிக்காரங்க மற்றவர்களை ஏமாற்றும் திருட்டு குணம் உள்ளவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
முகத்தில் கருந்திட்டுக்கள் அதிகமா இருக்குதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
இறந்தவர்கள் உடலை எரித்தாலும் இந்த ஒரு பாகம் மட்டும் அழியாதாம் - அது எந்த உறுப்பு தெரியுமா? -
Aadi 2026: ஆடி மாதத்தில் கோடீஸ்வர யோகத்தைப் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா? -
வெண்டைக்காயும் வேர்க்கடலையும் இருந்தா.. இப்படி தொக்கு செய்யுங்க.. 3 வேளையும் சைடு டிஷ் பிரச்சனையே இருக்காது.. -
சூரியன் சனிபகவானின் நட்சத்திரத்திற்கு செல்வதால் இந்த 3 ராசிகளின் பலமும், செல்வாக்கும் அதிகரிக்கப் போகுதாம் -
1 கப் கொத்தமல்லி இருந்தா இந்த மணமணக்கும் சாம்பாரை வைச்சு பாருங்க - வித்தியாசமா அருமையா இருக்கும்
பன்னீரை இந்த பக்குவத்துல மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு தாறுமாறா இருக்கும்..
Paneer Masala For Chapati In Tamil: உங்கள் வீட்டில் அடிக்கடி சப்பாத்தி செய்வீர்களா? அதற்கு சைடு டிஷ்ஷாக பன்னீரையும் செய்வீர்களா? அதுவும் எப்போதும் ஒரே சுவையில் தான் பன்னீரை செய்து சாப்பிடுவீர்களா? சற்று வித்தியாசமான சுவையில், அதே சமயம் சட்டென்று செய்யக்கூடியவாறான பன்னீர் ரெசிபியை செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் பன்னீர் மசாலா செய்யுங்கள்.

பன்னீர் மசாலாவை பலவாறு செய்யலாம். அதுவும் இந்த பக்குவத்தில் பன்னீர் மசாலாவை செய்யும் போது, சுவை இன்னும் பிரமாதமாக இருக்கும். முக்கியமாக இந்த ஸ்டைல் பன்னீர் மசாலா பேச்சுலர்களுக்கு ஏற்றது என்றும் கூறலாம். இந்த பன்னீர் மசாலா சப்பாத்தியுடன் மட்டுமின்றி, பூரியுடன் சாப்பிடவும் அருமையாக இருக்கும்.
உங்களுக்கு இந்த பன்னீர் மசாலாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பன்னீர் மசாலா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* பன்னீர் - 200 கிராம்
* வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* சிக்கன் மசாலா - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* தண்ணீர் - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு பேனை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், பன்னீர் துண்டுகளை சேர்த்து பொன்னிறமாக ப்ரை
செய்து, ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதே எண்ணெயில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து
பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் சிக்கன் மசாலா, மல்லித் தூள், காஷ்மீர் மிளகாய் தூள்,
கரம் மசாலா, மிளகுத் தூள், மஞ்சள் தூள் சேர்த்து, மிதமான தீயில்
வைத்து, நன்கு மசாலாவை வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து 1 நிமிடம்
வதக்கி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, சிறிது நீரை ஊற்றி, 3 நிமிடம்
மிதமான தீயில் வைத்து பச்சை வாசனை போக வேக வைக்க வேண்டும்.
* அதன் பின் அதில் ப்ரை செய்த பன்னீர் துண்டுகளை சேர்த்து நன்கு
கிளறி, 5 நிமிடம் குறைவான தீயில் வைத்து வேக வைக்க வேண்டும்.
* இறுதியாக சிறிது கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், சுவையான
பன்னீர் மசாலா தயார்.



Click it and Unblock the Notifications