Latest Updates
-
உடல் எடை மடமடன்னு குறைய உதவும் கருப்பு சுண்டல் தோசையும், பீட்ரூட் சட்னியும் - எப்படி செய்யணும் தெரியுமா? -
இன்றைய ராசிபலன் 11 மே 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு பணமழை கொட்டுமாம் -
சுக்கிர பெயர்ச்சியால் மே 14 முதல் இந்த 4 ராசிக்காரர்களுக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது... -
உங்களுக்கு திரும்ப திரும்ப ஒரே கனவு வருதா? அதுக்கு என்ன அர்த்தம்-ன்னு தெரியுமா? -
அன்னையர் தினம் 2026: அம்மாவிற்கு சர்ப்ரைஸ் கொடுக்கணுமா? இந்த UPI ஆஃபர்களை மிஸ் பண்ணிடாதீங்க! -
மாம்பழ லட்டு - 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
அன்னையர் தினத்தில் மனைவி vs அம்மா? இந்த ஒரு சின்ன மாற்றம் போதும், குடும்பத்தில் அமைதி நிலவும்! -
முகத்தில் உள்ள அழுக்கை நீக்கணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் வாஷ்களை யூஸ் பண்ணுங்க.. -
ஒரே வாரத்தில் 3 முறை நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்.. -
அன்னையர் தினத்தில் இந்த வாஸ்து செடிகளைப் பரிசளிங்க… அம்மாவின் ஆரோக்கியமும் செல்வமும் பல மடங்கு உயரும்!
பன்னீரை எப்பவும் ஒரே மாதிரி தான் சமைப்பீங்களா? அடுத்தமுறை இப்படி குருமா செய்யுங்க.. நல்லா இருக்கும்..
Paneer Kurma Recipe In Tamil: உங்கள் வீட்டில் உள்ளோர் பன்னீரை விரும்பி சாப்பிடுவார்களா? இதனால் உங்கள் வீட்டில் பன்னீரை அடிக்கடி சமைப்பீர்களா? எப்போதும் நீங்கள் பன்னீரை ஒரே மாதிரி தான் சமைப்பீர்களா? பன்னீரை ஒரே மாதிரி சமைத்து போரடித்துவிட்டதா? இன்று உங்கள் வீட்டில் பன்னீர் செய்ய திட்டமிட்டுள்ளீர்களா?
அப்படியானால் இந்த முறை பன்னீரைக் கொண்டு குருமா செய்யுங்கள். இந்த பன்னீர் குருமா சப்பாத்தி, பூரி, நாண் போன்றவற்றுடன் சாப்பிட அற்புதமாக இருக்கும். மேலும் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

உங்களுக்கு பன்னீர் குருமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பன்னீர் குருமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
அரைப்பதற்கு...
* துருவிய தேங்காய் - 1/2 கப்
* பாதாம் - 10
* முந்திரி - 5
* கசகசா - 2 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - 1/2 கப்
பிற பொருட்கள்...
* எண்ணெய் - 3 டீஸ்பூன்
* பன்னீர் - 250 கிராம் (துண்டுகளாக்கப்பட்டது)
* சீரகம் - 1 டீஸ்பூன்
* பட்டை - 1 இன்ச்
* ஏலக்காய் - 2
* கிராம்பு - 3
* பிரியாணி இலை - 1
* கசூரி மெத்தி - 1 டீஸ்பூன்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 1 (நீளமாக கீறியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1/2 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1/4 டீஸ்பூன்
* புதினா - 2 டேபிள் ஸ்பூன்
* அரைத்த தக்காளி - 1 கப்
* தயிர் - 2 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - 1 கப்
* உப்பு - 1 டீஸ்பூன்
* துருவிய பன்னீர் - 2 டேபிள் ஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
* கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் தேங்காய், பாதாம், முந்திரி, கசகசா
ஆகியவற்றை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக்
கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், பட்டை, ஏலக்காய், கிராம்பு, பிரியாணி இலை, சீரகம்
ஆகியவற்றை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட்
சேர்த்து, வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு தீயைக் குறைத்து, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள்
மற்றும் சீரகத் தூள் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பின்பு அதில் அரைத்த தக்காளியை சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்க
வேண்டும்.
* பின் அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, பச்சை வாசனை போக
வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் 1 கப் நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு
கிளறி விட்டு மூடி வைத்து 10 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* பின் அதில் பன்னீர் துண்டுகள் மற்றும் துருவிய பன்னீரையும் சேர்த்து
கிளறி, மூடி வைத்து 2 நிமிடம் பன்னீரை வேக வைக்க வேண்டும்.
* இறுதியாக மேலே கொத்தமல்லி மற்றும் கரம் மசாலாவைத் தூவி கிளறி
இறக்கினால், சுவையான பன்னீர் குருமா தயார்.
Image Courtesy: hebbarskitchen



Click it and Unblock the Notifications











