Just In
- 1 hr ago ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- 2 hrs ago உடம்பில் தேங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? இந்த காய்கறிகளை அடிக்கடி சாப்பிடுங்க..
- 3 hrs ago இந்த 4 ராசிக்காரங்க கண்ண மூடிக்கிட்டு காதலில் விழுந்துருவாங்களாம்... ரொமான்ஸ்ல இவங்கள அடிச்சுக்க ஆளே இல்ல...!
- 4 hrs ago சாணக்கிய நீதி படி திருமணமானமானவர்கள் கள்ளக்காதலை நோக்கி நகர இந்த 5 விஷயங்கள்தான் காரணமாம்...!
Don't Miss
- Movies Godzilla x Kong: The New Empire Review: காட்ஸில்லா அண்ட் காங் விமர்சனம்.. ஆர்ஆர்ஆர் மாதிரி இருக்கே!
- News வாய்ப்பு மறுத்த பாஜக.. தொகுதி மக்களுக்கு 'வருண் காந்தி' உணர்ச்சி பொங்க கடிதம்! உ.பியில் சலசலப்பு
- Finance தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இனி இதுதான் நிரந்தரமா? சாமானிய மக்களால் தங்கத்தை வாங்கவே முடியாதா..?
- Sports IPL 2024 : ஐயயோ.. அவ்வளவு கண்டிப்புடன் இருக்க மாட்டேன்.. என்னை மாதிரி தான் ருதுராஜும்.. தோனி பகிர்வு
- Automobiles அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
சுறா புட்டு
இதுவரை மீனைக் கொண்டு குழம்பு, வறுவல் என்று தான் சமைத்து சுவைத்திருப்பீர்கள். ஆனால் புட்டு செய்து சுவைத்ததுண்டா? அதிலும் சுறா மீனைக் கொண்டு புட்டு செய்து சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். குறிப்பாக இது வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர் வரை விரும்பி சாப்பிடும் அளவில் இருக்கும்.
சுறா புட்டு ஹோட்டல்களில் அதிகம் கிடைக்காது. ஆனால் அதை வீட்டிலேயே எளிமையாக செய்து சாப்பிடலாம். இங்கு சுறா புட்டு ரெசிபியை வீட்டிலேயே எப்படி எளிமையாக செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து முயற்சித்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
சுறா
மீன்
-
250
கிராம்
தண்ணீர்
-
2
கப்
உப்பு
-
தேவையான
அளவு
மஞ்சள்
தூள்
-
1/4
டீஸ்பூன்
புட்டு செய்வதற்கு...
எண்ணெய்
-
1
டேபிள்
ஸ்பூன்
+
தேவையான
அளவு
கடுகு
-
1/2
டீஸ்பூன்
கறிவேப்பிலை
-
சிறிது
வெங்காயம்
-
1
(பொடியாக
நறுக்கியது)
இஞ்சி
பூண்டு
பேஸ்ட்
-
1
மற்றும்
1/2
டீஸ்பூன்
மிளகாய்
தூள்
-
2
டீஸ்பூன்
மல்லித்
தூள்
-
2
டீஸ்பூன்
மஞ்சள்
தூள்
-
1
சிட்டிகை
உப்பு
-
தேவையான
அளவு
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விட வேண்டும்.
தண்ணீர் நன்கு கொதிக்கும் போது, அதில் மீன் துண்டுகளைப் போட்டு 5 நிமிடம் வேக வைத்து இறக்கி, நீரை வடிகட்டி மீன் துண்டுகளை ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
மீன் நன்கு குளிர்ந்ததும், அதன் மேல் உள்ள தோல் மற்றும் எலும்புகளை நீக்கிவிட்டு, உதிர்த்துக் கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு மற்றும் கறிவேப்பிலை போட்டு தாளித்து, பின் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
அடுத்து அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி, பின் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
எண்ணெய் போதவில்லையெனில், சிறிது எண்ணெய் ஊற்றிக் கொண்டு, பின் அதில் உதிர்த்து வைத்துள்ள மீனை சேர்த்து நன்கு மசாலா மீனில் சேரும் வரை கிளறி விட்டு இறக்கினால், சுறா புட்டு ரெடி!!!